Skip to main content

நாடாளுமன்ற தேர்தல்கள் கட்சிகளும் காட்சிகளும்

 

நாடாளுமன்ற தேர்தல்கள்

கட்சிகளும் காட்சிகளும்




விடுதலை இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் 1952ல் நடந்தது. அத்தேர்தல் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்கிற அரசியல் அமைப்பு உரிமைப்படி நடந்த முதல் தேர்தல். உலக நாடுகள் மத்தியில் இந்தியா தன் மக்களுக்கு கொடுத்த மாபெரும் புரட்சிகர உரிமையது. அவ்வுரிமை இன்றைய நாளில் பல திரிபுகளை, கசடுகளை சேர்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் வயது வந்தோர் வாக்குரிமை என்பது பெரும் புரட்சிகரமான நடவடிக்கை. மேற்கே இதில் பாடம் கற்க வேண்டியிருந்தது.

1952 தேர்தலில் 17 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 310 பேர் வாக்காளர் தகுதியில் இருந்தனர். இதில் 10கோடி 61 லட்சத்து 51 ஆயிரத்து 540பேர் வாக்களித்தனர். வாக்கு சதம் 61.81 .

அத்தேர்தலில் 78 கட்சிகள் சார்பிலும், சுயேட்சையாக 533 பேரும் ஆக 1874 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்த தொகுதிகள் அன்று 489.

காங்கிரஸ் தான் பெரும் கட்சி. அடுத்த நிலையில் சோசலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள் என அன்று இருந்தனர். காங்கிரஸ் 479 இடங்களில் நின்று 364ல் அபார வெற்றி பெற்றது. வாக்கு சதம் 44.98. சோசலிஸ்ட்கள் 254ல் நின்று 12ல் வென்றனர். வாக்கு சதம் 10.59. கிருபளானி கிசான் மஸ்தூர் 145 இடங்களில் நின்று 9 இடங்களைப் பெற்றது. வாக்கு சதம் 5.79. கம்யூனிஸ்ட் கட்சி 49 இடங்களில் மட்டுமே நின்றாலும் 16 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக வந்தது. வாக்கு சதம் 3.29.  ஜனசங்கம் 94 இடங்களில் நின்று 3 பெற்றது. வாக்கு சதம் 3.07. அம்பேத்கரின் எஸ்சி எஃப் 35 இடங்களில் நின்று 2 பெற்றது. வாக்கு சதம் 2.38

25 ஆண்டுகளுக்கு பின்னரான 1977 தேர்தல் நிலையைப் பார்ப்போம். எமர்ஜென்சி அனுபவ சூழலில் நடந்த தேர்தல். மொத்த இடங்கள் 542.  வாக்கு பதிவு 60.53 சதம்.

ஜனதா 387 இடங்களில் போட்டியிட்டு 280 பெற்று வெற்றியடைந்தது. காங்கிரஸ் 492 இடங்களில் நின்று 154 பெற்றது. இடது கட்சிகள் 143ல் நின்று 33ல் வென்றனர். தமிழகத்தில் அண்ணா திமுக 21ல் நின்று 19 யை பெற்றது. வாக்கு சதமாக அவை 39.32, 34.52, 7.21, 2.95 யை பெற்றனர்.

ஜனதா சோதனை வீழ்ச்சியால் 1980ல் இந்திரா அம்மையார் ஆட்சிக்கு வந்தார். இந்திரா படுகொலை சூழலில் நடந்த 1984 தேர்தலைப் பார்க்கலாம். இத்தேர்தலில்

 

வாக்குப் பதிவில் முன்னேற்றத்தை காண்கிறோம். 64.11 சதம். காங்கிரஸ் 517 இடங்களில் நின்று 415 யை இந்திய வரலாற்றில் மகத்தான சாதனை படைத்தது. காங்கிரசின் வாக்கு சதம் 48.01. இடதுசாரிகள் 141ல் நின்று 32யை பிடித்தனர். வாக்கு சதம் 9.39. ஜனதா 218ல் நின்று 9யை வென்றது. வாக்கு சதம் 6.57. பாஜக 229 இடங்களில் நின்று 2 யை வென்றது. வாக்கு சதம் 7.40. தமிழகத்தில் திமுக 28ல் நின்று 2 யையும், அதிமுக 12க்கு 12யையும் பெற்றன. வாக்கு சதம் 2.28, 1.59.

இவ்வளவு பிரம்மாண்ட வெற்றி பெற்ற ராஜிவ் தலைமை காங்கிரஸ் 1989 தேர்தலில் தனித்த பெரும் கட்சியாக வந்தாலும் ஆட்சி அமைக்கவில்லை. வி பி சிங் சோதனை நடந்தது.

காங்கிரஸ் 510ல் நின்று 197 யை பெற்றது. வாக்கு சதம் 39.53. பாஜக 225ல் நின்று 85 பெற்று நம்பிக்கையைக் கூட்டிக்கொண்டது. இடதுசாரிகள் 133ல் நின்று 53யை பெற்றனர். செண்ட்ரிஸ்ட் கட்சி, வலது, இடது என அவரவர்க்கு செல்வாக்கான அரசியல் என்கிற நிலை ஏற்பட்டது. ஜனதா தளம் 220ல் நின்று 126 யை பிடித்தது. பிஎஸ்பி 245 இடங்களில் 3 யை பெற்றது. அதிமுக 11க்கு 11 பெற்றது.

1991 தேர்தல் ராஜிவ் படுகொலை சூழல், நரசிம்மராவ் சோதனை நடந்தது. காங்கிரஸ் 505ல் நின்று 244ல் வென்றது. வாக்கு சதம் 36.64. பாஜக 478ல் நின்று 121 ஆக உயர்ந்தது. வாக்கு சதம் 20.04. இடதுசாரிகள் 141ல் நின்று 57 பெற்றனர். வாக்கு சதம் 10.36. நல்ல மரியாதைக்குரிய அரசியல் நிலை கிடைத்தது. அதிமுக 11க்கு 11 பெற்றது.

1996,98 யுனைட்டட் ஃபிரண்ட் கூட்டணி சோதனை நடந்தன.

1999 தேர்தலைப் பார்ப்போம். வாஜ்பாய் என் டி ஏ ஆட்சி - நிலையான ஆட்சி என்கிற வாய்ப்பு பாஜகவிற்கு வந்தது. காங்கிரஸ் 453ல் நின்று 114 பெற்றனர். வாக்கு சதம் 28.30 என வீழ்ந்தது. பாஜக 339ல் நின்று 182யை பெற்றது. வாக்கு சதம் 23.75 தான். திமுக பாஜகவுடன் சேர்ந்து 19க்கு 12யை பிடித்தது. பாமக, எம்டிஎம்கே கட்சிகளும் பாஜகவுடன் இருந்தனர். அதிமுக காங்கிரசுடன் இருந்து 24ல் நின்று 10யை பிடித்தது.

2004, 2009 காங்கிரஸ் வென்று  மன்மோகன் சிங் சோதனை நடந்தது. யுபிஏ, என் டி ஏ என மோதினர். 2004ல் காங்கிரஸ் 414ல் போட்டியிட்டு, 145 இடங்களைப் பெற்றது. வாக்கு சதம் 26.44. UPA கூட்டணியில் 20 கட்சிகள், திமுக உட்பட இருந்தன. 221 இடங்கள் 36.43 சத வாக்குகள் கிடைத்தன. என் டி ஏ விற்கு 189 இடங்கள் 35.89 சதம் கிடைத்தது. இதில் பாஜக 364ல் நின்று 138 யை பெற்றது. அதன் வாக்கு சதம் 22.16. அதன் கூட்டணியில் அதிமுக உட்பட 15 கட்சிகள் இருந்தன. இடதுகள் 113 இடங்களில் போட்டியிட்டு 62 இடங்களை வென்று அவர்களுக்கான நல்ல அரசியல் இடத்தைப் பெற்றனர். வாக்கு சதம் 8.11. பி எஸ் பி 435 இடங்களில் போட்டியிட்டு 19யை பெற்றது.

மீண்டும் மன்மோகன் ஆட்சிக்கு உதவிய தேர்தலாக 2009 அமைந்தது. வாக்காளர் 71.70 கோடியைத் தொட்டனர். வாக்கு சதம் 58.20 ஆகத்தான் இருந்தது. காங்கிரஸ் 440ல் நின்று 206 இடங்களைப் பிடித்தது. வாக்கு சதம் 28.55. உடன் இருந்த திமுக 22க்கு 18 யை பெற்று 1.83 சதத்தை வாங்கியது. காங்கிரஸ் கூட்டணி 262 இடங்களைப் பெற்றது.

என் டி ஏ 159 இடங்களை மட்டுமே பெற்றது. பாஜக 433ல் போட்டியிட்டு 116யை பிடிக்க முடிந்தது. வாக்கு சதம் 18.8 என வீழ்ந்தது. இடதுசாரிகள் 177ல் போட்டியிட்டாலும் 24 இடங்களாக ஆக வீழ்ந்தனர். வாக்கும் 7.61 என குறைந்தது. பி எஸ் பி 500 இடங்களில் நின்று 21யைப் பெற்றது.

2014 வலதின் தீவிரத்தை கூட்டிய தேர்தல். மோடி ஆட்சிக்கு வரமுடிந்தது. வாக்காளர் 83 கோடியைத் தொட்டனர். வாக்கு சதம் 66.44 எனக் கூடியது.

காங்கிரஸ் 464ல் போட்டியிட்டு வரலாறு காணாத வீழ்ச்சியாக 44 இடங்களை மட்டுமே பெற்றது. அதன் வாக்கு சதம் 19.31 ஆக குறைந்தது. யுபிஏ 59 இடங்களை மட்டுமே பெற்றது. என் டி ஏ 335 இடங்களைப் பிடித்தது. பாஜக 428 இடங்களில் நின்று தனிப்பெரும்பான்மையாக 282 இடங்களைப் பெற்று அதற்கான புதிய வரலாற்றை உருவாக்கியது. வாக்கு சதமும் 31.

இடதுசாரிகள் 210 இடங்களில் நின்றாலும் அவர்களும் 12 இடங்கள் என வீழ்ந்தனர். வாக்கு சதம் 4.83 என சரிவைக் கண்டது. மேவ மமதா 34 இடங்களைப் பெற்று சாதனை புரிந்தார்.

2019 தேர்தலும் மோடிக்கே வாய்ப்பை திரும்பக் கொடுத்தது. வாக்காளர் 91கோடியாயினர். வாக்கு சதம் 67.40 என கூடுதலாக இருந்தது. என் டி ஏ 352 இடங்களைப் பிடித்தது. பாஜக தன் பலத்தை மேலும் கூட்டிக்கொண்டது. 436 இடங்களில் நின்று 303யை பெற்றது. வாக்கு சதமும் 37.3 எனக் கூடியது. ஜெயலலிதா இல்லா அதிமுக 21ல் நின்று 1யைப் பெற்றது.

யுபிஏ 91 இடங்களை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் 421ல் நின்று 52 என சற்று தன்னை உயர்த்திக்கொண்டது. வாக்கு சதம் 19.49ல் பெரிய மாற்றமில்லை. திமுக 23ல் 23யையும் பெற்றது.

இடதுகள் பெரும் சரிவைக் கண்டனர். சிபிஅய் 2, சிபிஎம் 3, ஆர் எஸ் பி 1 என கிடைக்கப்பெற்றன.

 

1984க்கு பின்னரான 40 ஆண்டு அரசியல் மண்டல்- கமண்டல் என்கிற இரு பரிமாணங்களை சுற்றி நடக்கலாயின. ரிஜினலிசேஷன் என்கிற வட்டார அரசியல் தன் பிடிப்புகளையும் கொண்டதானது. இக்காலத்தில் தன் சொந்த பலத்தில் காங்கிரஸ் 1984 யை ஒப்பிடுகையில் அதிகபட்சம் அதில் 50 சதத்தையும், குறைந்த பட்சம் 11 சதத்தையுமே இடங்களாக தக்க வைத்தது. 2024ல் அது 200க்கு மேற்பட்ட இடங்கள் என சொந்த பலத்தைக் காட்டுமா என்பது முக்கியமான கேள்வி. காங்கிரசிர்கு எவ்வளவு இடங்கள் என்பது தான் அடுத்த 5 ஆண்டுகால அரசியலுக்கு முக்கிய கேள்வியாக இருக்கும். இடதுகளும் இந்த 40 ஆண்டுகளில் 60க்கு மேல் என்பதிலிருந்து 6 என்ற நிலைக்கு வந்தனர். இவர்கள் கூடுதலாகப் பெறப்போகும் இடங்களும் வலதின் வெம்மையை சற்று தணிக்கும். பெறுவார்களா எனத் தெரியவில்லை.

பாஜக 400 என்றெல்லாம் பேசிக்கொண்டாலும் அதனால் 2014ல் பெற்ற தனிப்பெரும்பான்மை போல் 272க்கு மேல் பெறுமா என்பது முக்கிய கேள்வி. 272க்கு கீழ் பெற்றாலும்  அதிக இடங்களைப் பெறப்போகும் முதல் கட்சி என்றால், ஆட்சி அமைக்க என்ன செய்யப்போகிறது என்பதும் கேள்வி. அப்போது இயல்பாக பிரதமர் மோடியா வேறு எவரா என்பதும் விவாதமாகலாம். மக்கள் இழுபறி தீர்ப்பை தருவார்களா..அல்லது காங்கிரசைவிட மிகக் குறைவாகவே பாஜக பெற்றது என்ற நிலையை உருவாக்கி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு இடமளிப்பார்களா என்பதை ஜூன் 4 காட்டிவிடும். பார்ப்போம். மக்கள் தங்களுக்கான அரசியல் திசை வழியை எப்படி தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என..

 

12-5-2024

Comments

  1. விரிவான வகையில் ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளர் என்ற கோணத்தில் 1952-2019 வரையிலான மக்களவைத் தேர்தல்கள் பற்றிய படப்பிடிப்பாக இந்தக் கட்டுரை அமைந்திருந்திருந்த்து. அதையும் தாண்டி, அந்தந்த கால கட்ட ஆட்சிகளினால் மக்கள் சந்திக்க நேரிட்ட மிக முக்கியமான வாழ்வாதார தாக்கங்களைக் குறிப்பிட்டிருந்தால், சற்று நீளமாக அமைந்தாலும், சிறப்பாக இருந்திருக்குமே, தோழர். இருப்பினும் நன்றியும் வணக்கமும்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு