Skip to main content

Marx for Today. Marcella Musto

 இடது இலக்கியங்கள் பலவற்றை ஆகார் -Aakar வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒரு நூல்தான் Marx for Today. Marcella Musto எடிட் செய்த தொகுப்பு. நூல் 2008 ல் வந்திருந்தாலும், ஆகார் வழி இந்திய பதிப்பு 2018ல் வந்தது.

2010ல் மார்க்சை மீள் வாசிப்பு செய்வது என்பது முதல் பகுதி. அதில் 8 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கெவின் ஆண்டர்சன், பரேஷ், லெபோவிட்ஸ், காம்னியல், மஸ்டோ, டெரல் கார்வர், விக்டர் வாலிஸ், ரிக் உல்ப் போன்ற அறிஞர் பெருமக்கள் தங்கள் ஆய்வுக்கோணத்தை தந்துள்ளனர்.
இரண்டாம் பகுதி இன்று உலகம் மார்க்சை எப்படி வரவேற்கிறது என்பதை பேசும் பகுதி. இதில் 10 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவில், பிரேசிலில், ஆங்கில மொழிப் பகுதிகளில், பிரான்சில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, சீனா, தென்கொரியா, ஜப்பானில் மார்க்சியம் எப்படியான வரவேற்பை பெறுகிறது என கட்டுரையாளர்கள் தங்கள் உள்வாங்குதலை சொல்கிறார்கள். சொப்ரினா, பொய்ட்டோ- எட்வர்டோ, பிளேக்லெட்ஜ், ஹாப், ரகோனா, ஒயிட்டினென், ஹு, ஜெயாங், உசிதா போன்றவர் எழுதியுள்ளனர்.
இந்தியர் எவரும் இப்பகுதியில் எழுதவில்லை. முதல் பகுதியில் பரேஷ் சட்டோ கட்டுரை ஒன்றே ஒன்று உள்ளது. அவரும் கனடா பல்கலையாளர். இந்தியாவில் மார்க்சிய அனுபவங்கள் குறித்து- சோவியத் வழி பெறப்பட்ட மார்க்சிய புரிதல்- அதிலிருந்து விடுபடல் குறித்து மஸ்டோ ஏன் எவரிடமிருந்தும் கட்டுரை ஒன்றை வாங்கவில்லை என எனக்குத் தெரியவில்லை. அப்படி ஒரு இந்திய மார்க்சிய அறிஞர் எவரின் கட்டுரையாவது இடம் பெற்றிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்குமோ எனத் தோன்றுகிறது.
இதில் இடம் பெற்றுள்ள பல கட்டுரையாளர்கள் பெயர்கள் இங்குள்ள இடதுசாரிகளுக்கு அறிமுகமாக வாய்ப்பு குறைவு எனப்படுகிறது. கெவின், மஸ்டோ, டெரல்கார்வார் போன்றவர்களின் மார்க்ஸ் குறித்த எழுத்துக்கள் சிறிய அளவாவது போயிருக்கலாம்.
20 ஆம் நூற்றாண்டில் சோவியத் சோதனை அக்டோபர் புரட்சியை அடுத்து நடந்தேறியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சோவியத் கட்சி பார்வையாகவே மார்க்சியம் கடத்தப்பட்டது. அக்கட்சித் தலைமை, அறிஞர்கள் எழுத்துக்களின் மார்க்சிய புரிதல், எப்படி அவர்கள் மார்க்ஸ் பேசியதிலிருந்து மாற்றிப் பேசினார்கள் போன்ற சில அசெளகரிய அம்சங்களை இந்நூலில் கட்டுரை ஆசிரியர்கள் விவாதித்துள்ளனர்.
மஸ்டோ தனது அறிமுகத்தில் நன்றாகவே குறிப்பிடுகிறார்..
Yet there has always been a return to Marx- a new need develops to refer his work- whether the critique of political economy, the formulations on alienation, political polemics- it has continued to exercise an irresistible fascination to both followers and opponents
டெரிடா சொல்லியதை மஸ்டோ காட்டுகிறார்
It will always be a mistake not to read and reread and discuss Marx.
மார்க்ஸ் வாசிப்பு என்பதும் கூட ஒரு பழக்கம்தான். சமூக மாற்றம் என்கிற சிந்தனைக்கு, மனிதன் விழையும் நல்லெண்ண சமூகத்திற்கான , முன்கூட்டியே திட்டமிடக் கோரும் கோட்பாடு. செயலுக்கான document .
மனித வாழ்க்கையின் பாதைக்கு என எவரும் இறுதி ஆவணத்தை தரமுடியாது என்கிற limitation உடன் , மார்க்ஸ் வாசிப்புக்களை துணைக்கு வைத்துக்கொள்ள முடியும். இயற்கை- உழைப்பு - உற்பத்தி - நுகர்வில் கண்ணியமான மானுட வாழ்க்கை என்ற கனவை மனித குலத்திற்கு நெருக்கமாக்கியவர் மார்க்ஸ். இங்கு தான் மார்க்ஸ்- காந்தி என்கிற மாபுருஷர்களின் சந்திப்பு புள்ளியைக் காணமுடியும்.
மஸ்டோ தொகுப்பு நல்லதோர் முயற்சி

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு