Skip to main content

தேர்தல் திருவிழா

 Theory of Justice - தேர்தல் திருவிழா

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கை -மானிபெஸ்டோவை வெளியிட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் தத்துவத்தில் புகழ் வாய்ந்த ஆக்கமாக ஜான் ரால்ஸ் அவர்களின் The Theory of Justice வெளியானது. நியாய கோட்பாட்டின் வழியிலான அரசியல், பகிர்வு நியாய வெளியின் விஸ்தரிப்பு என்பதை ரால்ஸ் மட்டுமல்ல அமர்த்யா சென், ழான் டிரீஸ் உள்ளிட்ட பலர் தொடர்ந்து பேசி வந்தனர்.
காங்கிரஸ் இந்த நியாயம் பேசும் பத்திரம் மூலம் தனது வாக்குறுதிகளை தந்துள்ளது. சிலர் கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ போல் உள்ளது என்றும், திராவிட மாடல் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் விவரித்து வருகின்றனர். பாஜகவும் தனது அறிக்கையை விரைவில் வெளியிடலாம். வெளியிட்ட பின்னர் பார்க்கலாம்.
சில கட்சிகள் மட்டுமே தங்களால் அறுதி பெரும்பான்மையை பெறமுடியும் எனப் பேசிவருகின்றனர். தேசிய அளவில் பாஜக அப்படி முன்வைப்புகளை செய்து வருகிறது. மாநில அளவில் திமுக, திரிணமுல் அதனை செய்து வருகின்றனர். தேசிய அளவில் தங்களால் அறுதி பெரும்பான்மையை பெறமுடியும் என்ற உரிமை கோரலை காங்கிரஸ் வைக்காவிட்டாலும், இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெறும் என்கிற கோரலை முன்வைத்து வருகின்றனர்.
நாடாளுமன்ற இடங்களில் பாதிக்கு மேல் ஒருவேளை பாஜகவால் வரமுடியாமல் போனால், அவர்கள் single largest majority party என்கிற வகையில் ஆட்சி அமைக்க உரிமை கோருவர். ஒருவேளை இந்தியா கூட்டணி ( தனியாக ஜனதா கட்சி போல ஒரே கட்சியாக அமைத்துக்கொள்ளாவிட்டாலும்) ‘கூட்டணி சர்க்கார் ‘ அமைக்க பெரும்பான்மை எண்ணிக்கையை காட்டி உரிமை கோருவர். அப்போது குடியரசு தலைவர் செய்யப்போவது என்பது விவாதமாகலாம்.
தேர்தல் , மக்கள் வாக்களிப்பு என்பது துல்லியமான எல்லாகணிப்புகளையும் விஞ்சக் கூடியதாகவே இருக்கும். தலைவர்களும் அவர்களது கட்சிகளும் எண்ணுவது போல வாழ்வு அமையவும் கூடும் . ஆட்சி அதிகாரம் பெறவும் கூடும். சிலநேரம் அவர்கள் நம்பிக்கைக்கு பெருத்த அடி விழுவது போலவும் முடிவுகள் அமையலாம்.
தேர்தல் கூட்டங்களை வைத்தெல்லாம் வாக்காளர் மனதை கணிக்க முடியாது. கட்சி உறுப்பினர்கள் கூட சில நேரங்களில் வாக்காளர் மனநிலைக்கு போய்விடுவர். காசு பணம் விளையாடவே செய்யும். அதை கொடுப்பவர்களிடம் மனசாட்சி என்றெல்லாம் பேசுவது எடுபடாமல் போகும். அது பகிரங்கமாகவும் , முடியாவிட்டால் மிக இரகசியமாகவும் தொழிற்படும். வாங்குகிறவர்களிடம் மனசாட்சி பேச்செல்லாம் எடுபடாமல் போகிறது. அது உரிமை போல் பார்க்கப்படுகிறது.
தோற்கடிக்கப்பட முடியாதவர் என எவரும் மக்களிடம் சவால் விட முடியாது என்பதே அனுபவமாக இருக்கிறது. உலகம் இந்த 18 வது தேர்தலையும் மிக கவனத்துடன் பார்த்து வருகிறது. இந்திய ஜனநாயகத்தின் நடனம் நளினமாக இருக்குமா, பேய்க்கூத்தாகிவிடுமா என்பதை அரசியல் வல்லுநர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.
கடைசி மனிதனுக்கும் வாய்ப்பும் வாழ்க்கையும் என்பதை நோக்கிய பயணமா- சிலருக்கான புல்லட் ரயில் விரைவு வளர்ச்சியா என்பது கடந்த பல தேர்தல்களைப் போல பேசு பொருளாகி , தேர்தலுக்கு பின்னால் தேய்ந்து ஓய்ந்து போவதை பார்க்கமுடிகிறது. இங்கு அரசியலே trickle down theory க்கு தன்னை ஒப்படைத்துக்கொண்டே பயணிக்கிறது. Evolution என்பதை புரிந்துகொள்ளலாம். வளர்ச்சி என்றாலே கூடுதல் marginalisation என்பதானால் எப்படி அது ‘சப்கா விகாஸ் ‘ ஆகும்…
75 ஆண்டு இந்திய தேர்தல்களும் அதன் பயணத்தையும் ஒன்றுமேயில்லை எனச் சொல்ல முடியாது என்றாலும், இந்தியா British Raj to Billionaire Raj பாட்டையில் செல்கிறதே…எந்த தேர்தல் இதை மனம் கொள்ளும்..
இந்திய சராசரி கூலி அரை ரூபாய் இருந்த போது வைஸ்ராய்க்கு ரூ 750 சம்பளமா என காந்தி கேட்ட கேள்விக்கு பதில் காணப்படாத தேர்தல்களாக 17 கடந்துவிட்டன. 18 வது தேர்தலும் அதே பழகிய பாதையில்தான் செல்ல விரும்புகிறது. வேட்பாளர் சொத்து பத்து விவரங்களும், கிரிமினல் பின்புலங்களும் வழக்கம் போல ADR போன்ற அமைப்புகளால் திரட்டி தரப்படும் . அது சிலரிடம் விவாதப் பொருளாக நடந்து, பின்னர் ஏதுமே நடைபெறாதது போல் கடந்து போகும்.
திரு மோடி அவர்கள் தொடர்ந்து பேச ஆர்வத்துடன் இருக்கலாம். Tired ஆகாமல் பயணித்துக் கூட பேசலாம். கேட்கிறவர் எனக்கு tired ஆகிறது என தேர்தலில் சொல்ல விரும்பி விட்டால் நிலைமையில் சற்று மாறுதல் வரலாம். பிளவு சத்தம் மட்டுப்படலாம்.
ஆனால் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இது ideological war என சொல்லப்படுகிறது. கம்யூனிஸ்ட்கள் நாடாளுமன்றத்தில் போதிய இடங்களை பெறமுடியாமல் இருந்த நிலையிலும் , நாட்டின் அனைத்து கட்சிகளையும் அவர்கள் சோசலிசம் என பேச வைத்தனர். மே தினம் கொண்டாட வைத்தனர். பகத்சிங் இன்குலாப் என முழங்க வைத்தனர்.
இன்று வலது அரசியல் தன் முழக்கங்களை ஆழமாக்கியுள்ளது. அதன் செல்வாக்கு சாயல்களை பல்வேறு கட்சிகளிடம் படர வைத்துள்ளது. தாமும் சிவ பக்தர், இந்துக்களுக்கு நாங்கள் விரோதியா என்கிற defence யை செய்ய வைத்துள்ளது. குங்கும விபூதியுடன் வருகிற அரசியல்வாதிகளை அதிகப்படுத்தியுள்ளது. மைனாரிட்டிகளை போட்டு ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்கிற விவாதங்களை கட்சிகளிடம் உருவாக்கியுள்ளது. வலதின் ideologyக்கு வாய்ப்பு கொடுக்காத தொலைக்காட்சி விவாதங்கள் அநேகமாக திராவிட மாடல் தமிழ்நாட்டில் கூட இல்லை. அவர்களை தவிர்க்க விரும்பவில்லையா- தவிர்க்க முடியாதவர்களாகியுள்ளனரா ?அவர்களின் Ideological roots என்பது நடந்தேற ஆரம்பித்துள்ளது.
இந்தத் தேர்தல் அதை arrest செய்து stagnate ஆக்குமா என்கிற பதிலைத் தேடுகிறது.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு