https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, April 25, 2024

தேவுடு நரசிம்ம சாஸ்திரி

 தேவுடு நரசிம்ம சாஸ்திரி அவர்கள் எழுதிய கன்னட நாவல் மகாபிராமணன் . இறையடியான் மொழிபெயர்ப்பில், சாகித்ய அகாதமி தமிழில் 2012ல் கொணர்ந்த நாவல்.

கெளசிகன் என்கிற சத்திரிய பேரரசன் தன் தவ வலிமையால் விஸ்வாமித்திரராகி வசிட்டரையும் விஞ்சப் போராடி மகாபிராமணனாகிறார் என்கிற கதையாடலை ஆங்காங்கே சில தெறிப்புகளுடன் தேவுடு நரசிம்மர் நகர்த்துகிறார். தமிழில் வந்து ஒரு மாமங்கம் ஆகிவிட்டது.
ரொம்ப raw ஆக வளர்ந்த என் மனம் எப்போதாவது நாவல் பக்கம் எட்டிப்பார்க்கும்.
தேவுடு எழுத்திலிருந்து
பிராணன் சொன்னான் - இதோ இவனே வாயுதேவன்! உடல் முழுவதுமாக பரவி அதனைத் தரித்துக்கொண்டுள்ள திரிவிக்கிரம வடிவினன். இவன் இருப்பதால்தான் உடலில் வெப்பம் இருக்கிறது. இவன் எந்தப் பகுதியை விட்டு நீங்கினாலும் அங்கே குளிர்ந்து அனைத்து செயற்பாடுகளும் சூன்யமாகிவிடும்.
இவன் அபான தேவன். உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் பணி இவனுடையது.இவன் செயலை ஒரு வினாடி நிறுத்திவிட்டால் எமதேவன் எடுத்துச் சென்றுவிடுவான்.
நான் மத்யமன். அபானம் அனைத்தும் என்னுடையது. நீ மூச்சு வாங்கி விடும்போது மூச்சாக இருப்பது அபான தேவனுடையது. உயிரை உள்ளே இழுப்பது நான். யோகத்தின் மூலமாக என்னை ஆராதனை செய்து சஞ்சலமுடைய என்னை அமைதிப்படுத்தின் மனபலம், புத்திபலம், உடல்பலம் அதிகரிக்கும். நான் சினந்தால் நோய்.
இவன் உதான தேவன். உன்னுடலில் நடந்து வரும் ஒலியின் வேலைகள் அனைத்தும் அவனுடையது. அவனே உனக்கு ஜெகநாத தேவனின் தேர். எங்களின் இன்ப துன்பங்களை எடுத்துரைப்பவன் இவனே. இவன் இல்லையெனில் காது செவிடாகும். புலன்கள் ஆற்றல் இழக்கும்.
இவன் சமான தேவன். எல்லோரையும் விட சிறியவனாயினும், வாமனைப் போல ஒளிமயமானவன். வெளியிலிருந்து வரும் எதுவும் பகையாகாமல் அனைத்தையும் செரித்துக் கொண்டு, அவற்றை உணவு இரசமாக்கி, உடலில் எதுஎது யாருக்கு வேண்டுமோ அதனையே கொடுப்பவன். அனைவரையும் காப்பாற்றி நிலையாக இருப்பவன்.
ஐவரையும் சொந்தமாக்கிக்கொண்டு உடலில் எப்போதும் ஓய்வின்றி நடந்து வரும் படைப்பின் சுருதி லயத்தின் செயல் அனைத்தும் நம்முடையதென தெரிந்து செய்வதே பஞ்சாக்னி..
தேவரீர் (என்றான் விஸ்வாமித்திரன்) இந்த பஞ்ச பூதங்கள் அனைத்தும் என்னுடலில் நடைபெறுமாறு ஆசிர்வதிக்கணும்…

No comments:

Post a Comment