Skip to main content

தேவுடு நரசிம்ம சாஸ்திரி

 தேவுடு நரசிம்ம சாஸ்திரி அவர்கள் எழுதிய கன்னட நாவல் மகாபிராமணன் . இறையடியான் மொழிபெயர்ப்பில், சாகித்ய அகாதமி தமிழில் 2012ல் கொணர்ந்த நாவல்.

கெளசிகன் என்கிற சத்திரிய பேரரசன் தன் தவ வலிமையால் விஸ்வாமித்திரராகி வசிட்டரையும் விஞ்சப் போராடி மகாபிராமணனாகிறார் என்கிற கதையாடலை ஆங்காங்கே சில தெறிப்புகளுடன் தேவுடு நரசிம்மர் நகர்த்துகிறார். தமிழில் வந்து ஒரு மாமங்கம் ஆகிவிட்டது.
ரொம்ப raw ஆக வளர்ந்த என் மனம் எப்போதாவது நாவல் பக்கம் எட்டிப்பார்க்கும்.
தேவுடு எழுத்திலிருந்து
பிராணன் சொன்னான் - இதோ இவனே வாயுதேவன்! உடல் முழுவதுமாக பரவி அதனைத் தரித்துக்கொண்டுள்ள திரிவிக்கிரம வடிவினன். இவன் இருப்பதால்தான் உடலில் வெப்பம் இருக்கிறது. இவன் எந்தப் பகுதியை விட்டு நீங்கினாலும் அங்கே குளிர்ந்து அனைத்து செயற்பாடுகளும் சூன்யமாகிவிடும்.
இவன் அபான தேவன். உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் பணி இவனுடையது.இவன் செயலை ஒரு வினாடி நிறுத்திவிட்டால் எமதேவன் எடுத்துச் சென்றுவிடுவான்.
நான் மத்யமன். அபானம் அனைத்தும் என்னுடையது. நீ மூச்சு வாங்கி விடும்போது மூச்சாக இருப்பது அபான தேவனுடையது. உயிரை உள்ளே இழுப்பது நான். யோகத்தின் மூலமாக என்னை ஆராதனை செய்து சஞ்சலமுடைய என்னை அமைதிப்படுத்தின் மனபலம், புத்திபலம், உடல்பலம் அதிகரிக்கும். நான் சினந்தால் நோய்.
இவன் உதான தேவன். உன்னுடலில் நடந்து வரும் ஒலியின் வேலைகள் அனைத்தும் அவனுடையது. அவனே உனக்கு ஜெகநாத தேவனின் தேர். எங்களின் இன்ப துன்பங்களை எடுத்துரைப்பவன் இவனே. இவன் இல்லையெனில் காது செவிடாகும். புலன்கள் ஆற்றல் இழக்கும்.
இவன் சமான தேவன். எல்லோரையும் விட சிறியவனாயினும், வாமனைப் போல ஒளிமயமானவன். வெளியிலிருந்து வரும் எதுவும் பகையாகாமல் அனைத்தையும் செரித்துக் கொண்டு, அவற்றை உணவு இரசமாக்கி, உடலில் எதுஎது யாருக்கு வேண்டுமோ அதனையே கொடுப்பவன். அனைவரையும் காப்பாற்றி நிலையாக இருப்பவன்.
ஐவரையும் சொந்தமாக்கிக்கொண்டு உடலில் எப்போதும் ஓய்வின்றி நடந்து வரும் படைப்பின் சுருதி லயத்தின் செயல் அனைத்தும் நம்முடையதென தெரிந்து செய்வதே பஞ்சாக்னி..
தேவரீர் (என்றான் விஸ்வாமித்திரன்) இந்த பஞ்ச பூதங்கள் அனைத்தும் என்னுடலில் நடைபெறுமாறு ஆசிர்வதிக்கணும்…

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு