Skip to main content

தேவுடு நரசிம்ம சாஸ்திரி

 தேவுடு நரசிம்ம சாஸ்திரி அவர்கள் எழுதிய கன்னட நாவல் மகாபிராமணன் . இறையடியான் மொழிபெயர்ப்பில், சாகித்ய அகாதமி தமிழில் 2012ல் கொணர்ந்த நாவல்.

கெளசிகன் என்கிற சத்திரிய பேரரசன் தன் தவ வலிமையால் விஸ்வாமித்திரராகி வசிட்டரையும் விஞ்சப் போராடி மகாபிராமணனாகிறார் என்கிற கதையாடலை ஆங்காங்கே சில தெறிப்புகளுடன் தேவுடு நரசிம்மர் நகர்த்துகிறார். தமிழில் வந்து ஒரு மாமங்கம் ஆகிவிட்டது.
ரொம்ப raw ஆக வளர்ந்த என் மனம் எப்போதாவது நாவல் பக்கம் எட்டிப்பார்க்கும்.
தேவுடு எழுத்திலிருந்து
பிராணன் சொன்னான் - இதோ இவனே வாயுதேவன்! உடல் முழுவதுமாக பரவி அதனைத் தரித்துக்கொண்டுள்ள திரிவிக்கிரம வடிவினன். இவன் இருப்பதால்தான் உடலில் வெப்பம் இருக்கிறது. இவன் எந்தப் பகுதியை விட்டு நீங்கினாலும் அங்கே குளிர்ந்து அனைத்து செயற்பாடுகளும் சூன்யமாகிவிடும்.
இவன் அபான தேவன். உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் பணி இவனுடையது.இவன் செயலை ஒரு வினாடி நிறுத்திவிட்டால் எமதேவன் எடுத்துச் சென்றுவிடுவான்.
நான் மத்யமன். அபானம் அனைத்தும் என்னுடையது. நீ மூச்சு வாங்கி விடும்போது மூச்சாக இருப்பது அபான தேவனுடையது. உயிரை உள்ளே இழுப்பது நான். யோகத்தின் மூலமாக என்னை ஆராதனை செய்து சஞ்சலமுடைய என்னை அமைதிப்படுத்தின் மனபலம், புத்திபலம், உடல்பலம் அதிகரிக்கும். நான் சினந்தால் நோய்.
இவன் உதான தேவன். உன்னுடலில் நடந்து வரும் ஒலியின் வேலைகள் அனைத்தும் அவனுடையது. அவனே உனக்கு ஜெகநாத தேவனின் தேர். எங்களின் இன்ப துன்பங்களை எடுத்துரைப்பவன் இவனே. இவன் இல்லையெனில் காது செவிடாகும். புலன்கள் ஆற்றல் இழக்கும்.
இவன் சமான தேவன். எல்லோரையும் விட சிறியவனாயினும், வாமனைப் போல ஒளிமயமானவன். வெளியிலிருந்து வரும் எதுவும் பகையாகாமல் அனைத்தையும் செரித்துக் கொண்டு, அவற்றை உணவு இரசமாக்கி, உடலில் எதுஎது யாருக்கு வேண்டுமோ அதனையே கொடுப்பவன். அனைவரையும் காப்பாற்றி நிலையாக இருப்பவன்.
ஐவரையும் சொந்தமாக்கிக்கொண்டு உடலில் எப்போதும் ஓய்வின்றி நடந்து வரும் படைப்பின் சுருதி லயத்தின் செயல் அனைத்தும் நம்முடையதென தெரிந்து செய்வதே பஞ்சாக்னி..
தேவரீர் (என்றான் விஸ்வாமித்திரன்) இந்த பஞ்ச பூதங்கள் அனைத்தும் என்னுடலில் நடைபெறுமாறு ஆசிர்வதிக்கணும்…

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...