Skip to main content

Organisation

 எந்த ஓர் அமைப்பிலும் விமர்சகர்கள் இருப்பர். அவர்கள் இருவகையாக தொழிற்படுவர். அமைப்பின் தலைமை வைத்திருக்கக்கூடிய கருத்துக்கள் மற்றும் எடுக்கக்கூடிய முடிவுகள் குறித்து அவர்களிடம் விமர்சன பார்வையிருக்கும்.

ஒருவகையினர் passive critics ஆக இருப்பர். பிரச்சனையின் வேறு ஒரு பக்கத்தை, தலைமை பார்க்க விரும்பாத கோணத்தை- தாங்கள் மிக முக்கியமான ஒன்று எனக் கருதும் பக்கத்தை முன் வைக்கிறவர்கள். இவர்களுக்கு அந்த அமைப்பில் position power என்பது நோக்கமாக இருக்காது. தன் கருத்து பெரும்பான்மையினரிடம் செல்லாது என அறிந்தும் , சொல்வது தேவை, அவசியம் எனக் கருதி தன் பார்வையை வைத்து வருபவர்கள். Convert செய்யமுயலுமா எனப்பார்ப்பவர்கள். Destroying organisation or replacing the leadership or downgrading their image என்பதை ‘அஜண்டா’ வில் இவர்கள் வைத்துக்கொள்வதில்லை. அவர்களின் ‘லிமிட்டேஷன்’ உணர்ந்து தான் அறிந்த அளவில் சொல்லிவிட்டு obscure - ஆக ஒதுங்கிவிடுவர். இப்படிப்பட்ட விமர்சகர்கள் அமைப்பின் உள்ளும் , வெளியிலும் கூட இருப்பர். இருக்கின்ற தலைமையின் ஆற்றலை இவர்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை. மாற்றம் வந்தால் அதற்கான over claim இவர்களிடம் இருக்காது.
மற்றொருவகை விமர்சகர்கள் active role ல் இருப்பர். உள்ளும் வெளியிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கலாம். இவர்கள் தலைமைக்கு மாற்றான கருத்தை உணர்ந்தால் அதை வலிமையாக எடுத்துச் செல்ல விழைபவர்கள். தலைமையின் தவற்றை சுட்டிக்காட்டுவது என்பதுடன் அவர்களால் நிற்கவியலாது. அம்பலப்படுத்துவது என்பது அப்புறப்படுத்திடவே என்ற கண்கொண்டு கடும் பிரயத்தனங்களை செய்பவர்கள். கருத்தில் மாற்றம் கொணரமுடியாவிட்டாலும், தலைமை மாற்றத்தை நிகழ்ச்சி நிரலில் ஏற்றிக்கொள்பவர்களாக இவர்கள் செயலாற்றுவர். இவர்களிடம் கோபம் ஆக்ரோஷம் குடியேறும். தீவிர எதிர்வினைக்குரிய மொழியாடல் இருக்கும். இவர்கள் தலைவர்கள் போலவே வெளிச்ச வளாகத்தில் இருக்க முயற்சிப்பர். சிறு மாற்றம் வந்தாலும், தங்களால் தான் என்கிற over claim இவர்களிடம் இருக்கும். இப்படிப்பட்ட activists தீவிரம் அதிகமாகும் போது அமைப்பு சிக்கல் அதிகமாகலாம். அரவணைத்துப் போகும் ஜனநாயக முறைகளை மதிக்கத் தெரிந்த Matured Leadership இல்லாவிடில் அமைப்பு உடைவுகளை காணும். இரு அமைப்பு , இருவேறு தலைமை எனப் பிரிந்து ஒன்றின்மேல் ஒன்றின் தாக்குதல் சில காலம் நீடிக்க வேண்டிய நிலை உருவாகலாம்.
வாழ்க்கை எவரையும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி செயல்பட விடுவதில்லை. சூழலின் தாக்கம் பொறுத்து, ஒன்று அவரிடம் ஏற்படுத்தும் influence பொறுத்து தான் ஒருவர் வினையாற்றலும் அமைகிறது. வாழ்வை விமர்சனங்கள் செய்தே கடந்து போகிறவர்களும் உண்டு. விமர்சனங்களை பெரும்பாலும் தாங்கியே கடந்து போகிறவர்களும் உண்டு. விமர்சனம் என்கிற ஒன்றை பெரும்பாலும் செய்திடாமல் , எதிர்பார்ப்பு அல்லது ஏமாற்றம் என்பதை மட்டுமே அடைந்து , எவரோ ஒருவரை நம்பியே வாழ்க்கையை கடத்தியவர்களும் இருப்பர்.
பலருக்கு எவராவது ஒருவர் ஹீரோவாக திசை காட்டவேண்டும். சிலருக்கு தானே ஹீரோவாக திசையாக இருக்க வேண்டும். எங்கும் என் திசை - வேறு திசை ஏன் என்கிற உச்சத்தில் ஒருஹீரோ மாபெரும் வில்லனாக உருமாற்றம் பெறுகிறான். வீடு அமைப்பு நாடு எங்கும் இது பொருந்தும்.
இந்தியாவில் ஹீரோ கொடூர வில்லனாகும் உருமாற்றம் நடந்து வருகிறது என்றே தோன்றுகிறது. புதிய ஹீரோ எவரோ யாரோ .. மக்கள் வதம் எப்படி அமையுமோ …

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு