https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, April 25, 2024

Organisation

 எந்த ஓர் அமைப்பிலும் விமர்சகர்கள் இருப்பர். அவர்கள் இருவகையாக தொழிற்படுவர். அமைப்பின் தலைமை வைத்திருக்கக்கூடிய கருத்துக்கள் மற்றும் எடுக்கக்கூடிய முடிவுகள் குறித்து அவர்களிடம் விமர்சன பார்வையிருக்கும்.

ஒருவகையினர் passive critics ஆக இருப்பர். பிரச்சனையின் வேறு ஒரு பக்கத்தை, தலைமை பார்க்க விரும்பாத கோணத்தை- தாங்கள் மிக முக்கியமான ஒன்று எனக் கருதும் பக்கத்தை முன் வைக்கிறவர்கள். இவர்களுக்கு அந்த அமைப்பில் position power என்பது நோக்கமாக இருக்காது. தன் கருத்து பெரும்பான்மையினரிடம் செல்லாது என அறிந்தும் , சொல்வது தேவை, அவசியம் எனக் கருதி தன் பார்வையை வைத்து வருபவர்கள். Convert செய்யமுயலுமா எனப்பார்ப்பவர்கள். Destroying organisation or replacing the leadership or downgrading their image என்பதை ‘அஜண்டா’ வில் இவர்கள் வைத்துக்கொள்வதில்லை. அவர்களின் ‘லிமிட்டேஷன்’ உணர்ந்து தான் அறிந்த அளவில் சொல்லிவிட்டு obscure - ஆக ஒதுங்கிவிடுவர். இப்படிப்பட்ட விமர்சகர்கள் அமைப்பின் உள்ளும் , வெளியிலும் கூட இருப்பர். இருக்கின்ற தலைமையின் ஆற்றலை இவர்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை. மாற்றம் வந்தால் அதற்கான over claim இவர்களிடம் இருக்காது.
மற்றொருவகை விமர்சகர்கள் active role ல் இருப்பர். உள்ளும் வெளியிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கலாம். இவர்கள் தலைமைக்கு மாற்றான கருத்தை உணர்ந்தால் அதை வலிமையாக எடுத்துச் செல்ல விழைபவர்கள். தலைமையின் தவற்றை சுட்டிக்காட்டுவது என்பதுடன் அவர்களால் நிற்கவியலாது. அம்பலப்படுத்துவது என்பது அப்புறப்படுத்திடவே என்ற கண்கொண்டு கடும் பிரயத்தனங்களை செய்பவர்கள். கருத்தில் மாற்றம் கொணரமுடியாவிட்டாலும், தலைமை மாற்றத்தை நிகழ்ச்சி நிரலில் ஏற்றிக்கொள்பவர்களாக இவர்கள் செயலாற்றுவர். இவர்களிடம் கோபம் ஆக்ரோஷம் குடியேறும். தீவிர எதிர்வினைக்குரிய மொழியாடல் இருக்கும். இவர்கள் தலைவர்கள் போலவே வெளிச்ச வளாகத்தில் இருக்க முயற்சிப்பர். சிறு மாற்றம் வந்தாலும், தங்களால் தான் என்கிற over claim இவர்களிடம் இருக்கும். இப்படிப்பட்ட activists தீவிரம் அதிகமாகும் போது அமைப்பு சிக்கல் அதிகமாகலாம். அரவணைத்துப் போகும் ஜனநாயக முறைகளை மதிக்கத் தெரிந்த Matured Leadership இல்லாவிடில் அமைப்பு உடைவுகளை காணும். இரு அமைப்பு , இருவேறு தலைமை எனப் பிரிந்து ஒன்றின்மேல் ஒன்றின் தாக்குதல் சில காலம் நீடிக்க வேண்டிய நிலை உருவாகலாம்.
வாழ்க்கை எவரையும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி செயல்பட விடுவதில்லை. சூழலின் தாக்கம் பொறுத்து, ஒன்று அவரிடம் ஏற்படுத்தும் influence பொறுத்து தான் ஒருவர் வினையாற்றலும் அமைகிறது. வாழ்வை விமர்சனங்கள் செய்தே கடந்து போகிறவர்களும் உண்டு. விமர்சனங்களை பெரும்பாலும் தாங்கியே கடந்து போகிறவர்களும் உண்டு. விமர்சனம் என்கிற ஒன்றை பெரும்பாலும் செய்திடாமல் , எதிர்பார்ப்பு அல்லது ஏமாற்றம் என்பதை மட்டுமே அடைந்து , எவரோ ஒருவரை நம்பியே வாழ்க்கையை கடத்தியவர்களும் இருப்பர்.
பலருக்கு எவராவது ஒருவர் ஹீரோவாக திசை காட்டவேண்டும். சிலருக்கு தானே ஹீரோவாக திசையாக இருக்க வேண்டும். எங்கும் என் திசை - வேறு திசை ஏன் என்கிற உச்சத்தில் ஒருஹீரோ மாபெரும் வில்லனாக உருமாற்றம் பெறுகிறான். வீடு அமைப்பு நாடு எங்கும் இது பொருந்தும்.
இந்தியாவில் ஹீரோ கொடூர வில்லனாகும் உருமாற்றம் நடந்து வருகிறது என்றே தோன்றுகிறது. புதிய ஹீரோ எவரோ யாரோ .. மக்கள் வதம் எப்படி அமையுமோ …

No comments:

Post a Comment