Skip to main content
டிசம்பர் 29 அன்று விருதுநகரில் மிக முக்கிய கருத்தரங்கம் ஒன்றை CPI 90 ஆண்டுகள் நிறைவின் முகத்தான் நடத்தப்பட்டது. தமிழகத்தில் போற்றப்படவேண்டிய இரு ஆளுமைகளான சிங்காரவேலர், ஜீவா அவர்களின் பங்களிப்பை அவர்களின் முழு எழுத்துக்களை தங்களது கடும் உழைப்பால் தொகுத்த புலவர் வீரமணி மற்றும் பேரா அரசு ஆகியோர் முதன்மை உரையாற்றினர்.தோழர்கள் தோதாத்ரி, பொன்னீலன், ஆனந்தகுமார், ராஜா, சுதாகர்ரெட்டி ஆகியோரும் உரை நிகழ்த்தினர். சிங்காரவேலர், ஜீவா ஆகியோருடன் பெரியார் என மூன்று ஆளுமைகள் குறித்தும் அம்பேத்கார் குறித்தும் செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பேரா அரசு பெரும் முயற்சியுடன் தனது உரையை focused ஆக தந்தார்.

 நிகழ்த்தப்பட்ட உரைகளில் சிங்காரவேலர் குறித்த பதிவுகளில் மிக முக்கியமாக விடுபட்டதாக நான் கருதுவது அவரின் புரிதலான நமது சோசலிசம் போல்ஷ்விசம் அன்று- வன்முறை வழிப்பட்டதன்று- ஜனநாயக தன்மையுடனான இந்துஸ்தான் பஞ்சாயத்து.. பஞ்சாயத்துவழிப்பட்ட மக்கள் நிர்வாகம் என்பதும், மனித முன்னேற்ற திட்டத்தில் சுத்தம்- ஆரோக்கியம் குறித்த  இணைப்பும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மிக முக்கியமானதாக இருந்தது. பேரா அரசின் மைய செய்தியாக பெரியார் கொள்கை நிலைப்பாடுகளில் இடதுசாரிகள் விமர்சனம் மோதல் என்பது நடைமுறை வேறுபாடு என புரிந்து கொள்ளப்படாது மோதலாகி இரு இயக்க வீழ்ச்சிக்கும் கூட வழியானது என்பதாக இருந்தது.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...