https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, May 10, 2017

லண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் Marx's London Environment 2

II
பிரிட்டன் தொழில்களின் உலகப் பட்டறையாக இருந்ததுசுதந்திர வர்த்த்கம் பேச்சானது. போட்டி மூலம் வளர்ச்சி என்றனர். தனிநபர் லிபர்ட்டி என்கிற பேச்சு பெருகியது. பிரிட்டனின் தராளவாதம் உலகை கவ்விப்பிடித்தது. தொழிற்சங்கவாதம், லிபரல் கட்சியின் ஜூனியராக தொழிற்சங்கங்கள் செயல்படுவது என்பன நடந்தேறின. இவைகளால் வேலை நிறுத்தங்கள் நடைபெறாமல் தடுக்க முடியவில்லை இல்லை. சுதந்திர  வர்த்தகம் , போட்டி சூழல் என்பது வெளிரத் துவங்கியது, மீண்டும் நிலசீர்திருத்தம், சோசலிசம் என்கிற முழக்கங்கள் பெருகலாயின. சோசியல் டெமாக்ரடி ஃபெடெரேஷன் உருவானது. உருவாக்கிய H M Hyndman  மார்க்சிய கொள்கைகளை , வர்க்கப்போராட்டத்தை பேசினார். சிட்னிவெப் போன்றோர் முன்நின்று பாபியன் சோசலிஸம் உருவாக்கினர்
Liberal Labourism என்பதை  வலியுறுத்தி Gladstone போன்றவர்கள் Labour to Cabinet முழக்கம் வைத்தனர். தொழிலாளர் தலைவர்கள், சோசலிஸ்ட்கள் அமைச்சர்களாகட்டும் என்றனர். 1886  Henry Broadhurst என்பவர் கிளாட்ஸ்டோனின் வலக்கரம் என அறியப்பட்ட்வர் அரசாங்கத்தின் Under Secretary , 1892ல் தாம்ஸ் பர்ட் நாடாளுமன்ற செயலர், 1906ல் ஜான் பர்ன்ஸ் அமைச்சரவைக்குள்ளும்  சென்றனர்.
மார்க்ஸ் லண்டன் வந்தவுடனேயே அவர் குடும்பம் துயர்களை அனுபவித்தது. குழந்தைகள் மாண்டனர். வறுமை வாட்டியது. எங்கெல்ஸ் தந்தையுடன் கொண்ட கருத்து வேறுபாட்டில் தொழிலை நாய் வேலை என விமர்சித்து வந்தார். ஆனால் சூழல் அவரை மான்செஸ்டர் வேலைக்கு அனுப்பியது. மார்க்ஸை அறிந்திருந்த நியுயார்க் டிரிப்யூன் ஆசிரியர் அவரை தொடர்ந்து எழுதுமாறு பணித்தார், ஆரம்பத்தில் எங்கெல்ஸ் உதவியுடன் ஆங்கில போதாமை உணர்ந்து கட்டுரைகள் அனுப்பிய மார்க்ஸ் ஓராண்டிலேயே தானே எழுதி அனுப்பினார். கட்டுரை ஒன்றிற்கு சில நேரங்களில் 10 டாலர் பெற முடிந்து குடும்பத்தை ஒட்ட வேண்டியிருந்தது. ஆனால் 1857 நெருக்கடியால் பாதிக்கப்பட்ட டிரிப்யூன் வெள்நாட்டு நிருபர்களை எழுத்தாளர்களை நிறுத்தியது.
பிற நாட்டு எழுச்சிகளுக்கு தங்கள் பரிவும் ஆதரவும் உண்டு என்ற அளவில் லண்டன் தொழிலாளர்கள் நின்றனர். இத்தாலியின் கரிபால்டி லண்டன் வந்தபோது அவர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர்.. பிரஞ்சு தொழிலாளர் இயக்கம் தனது சர்வதேசத்தன்மையில் சற்று தீவிரமாக இருந்தது.  ஆஸ்திரியாவிலிருந்து இத்தாலியை விடுவிக்கும் பிரச்சனயில், ஆரம்பத்தில் மார்க்சின் சீடராக இருந்த  லஸ்ஸேல் மார்க்ஸ்- எங்கெல்ஸ் உடன் 1859ல் முரண்பட்டார். லஸ்ஸேல் பிரஷ்யாவிலிருந்து இயங்கி வந்தார், ஜெர்மன் தொழிலாளி வர்க்கத்தை கட்டிய பெருமித உணர்வுபட்டவராக அவர் இருந்தார். தான் practical politician என்றும் மார்க்ஸ்போல் doctrinaire இல்லை எனவும் பேசினார். மார்க்சின் பல்வேறு கருத்துக்களை அவர் தொழிலாளர் கூட்டங்களில் அறிமுகப்படுத்தும்போது பொருளாதார அறிஞர் என மார்க்சை குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டார். புரட்சிகரவாதி, கம்யுனிஸ்ட் என்றெல்லாம் சொல்லி தொழிலாளர்களை பயமுறுத்த முடியாது என்றார் லஸ்ஸேல். அவர் உற்பத்தியாளர் கூட்டுறவுமுறை என்பதற்கு அழுத்தம் கொடுத்தார். அனைவருக்கும் வாக்குரிமை என பெற்றுவிட்டால் 90 சத நாடாளுமன்ற இடங்களுக்கு தொழிலாளர் பிரதிநிதிகள் போகமுடியும் என்கிற பிரமையை பரப்பினர். இக்கருத்துக்களில் கண்டிப்பாக மார்க்சிற்கு வேறுபாடுகள் வராமல் இருக்க முடியாது. ஏமாற்று என மார்க்ஸ் விமர்சித்தார். லஸ்ஸேல் பிஸ்மார்க்குடன் உறவுடன் உள்ளார் என்கிற செய்தி பரவி அவரின் செல்வாக்கு வீழத்துவங்கியது.
1860களில் லண்டன் டிரேட்ஸ் கவுன்சில் தொழிலாளர்களின் செல்வாக்கை பெற்ற அமைப்பாக இருந்தது. Odger, Creamer, Howell போன்றவர்கள் முக்கியமானவர்களாக செயல்பட்டனர். சர்வதேச உறவுகளை வளர்த்துக்கொள்தல் என்பதை லண்டன் பிரஞ்சு தொழிலாளர் உணர்ந்தனர். போலந்தின் விடுதலை என்கிற பிர்ச்சனை தோற்றுப்போனாலும் அதற்கான இயக்கங்களை இத்தலைவர்கள் பேராசிரியர் பீஸ்லியுடன் எடுத்தனர். பாரிசில் பிரெளதான் செல்வாக்கில் தொழிலாளர் இயக்கங்கள்  இருந்தன. அவர் political capacity of working class  என்ற நூலை எழுதியதாகவும் ஆனால் அது வெளியாவதற்கு முன்னர் பிரெளதான் மறைந்துவிட்டார் என்கிற செய்தியை டேவிட் ரியாஸ்னாவ் தருகிறார். 1861 செப்டம்பரில் இருநாட்டு தொழிலாளர் பிரதிநிதிகள் சந்திப்பும் அதில் மூலதன சுரண்டல் பிரச்சனை, workers of the wold must unite முழக்கமும் எதொரொலித்ததாக டேவிட் பதிவு செய்கிறார்.
1862ல் பாரிஸ் தொழிலாளர்கள் சர்வதேச கண்காட்சி ஒன்றிற்கு வரும்போது இங்கிலாந்தில் தொழிலாளர் இயக்கம் பற்றி நேரடி அனுபவங்களை  பெற விரும்பினர்.. மாநாடு ஒன்றின்மூலம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒன்றை நிறுவும் முடிவு வந்தது.  1864 செப்டம்பர் 28ல் மாநாடும் நடந்ததுபொதுக்கூட்டம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு லண்டன்வாழ்  தலைவர்கள் பேசவும் அழைக்கப்பட்டனர்.  இதற்கான அழைப்பை கிரீமர் கார்ல் மார்க்ஸ்க்கு அனுப்புகிறார். மார்க்ஸ் அவர்களும் அழைப்பை ஏற்று வருகிறார். George Odger செப்28 1864 கூட்டத்தை கூட்டியிருந்தார்.  Prof Edward Spencer Beesly தலைமை. ஓட்ஜெர் தலைவர், கிரீமர் பொது செயலர் என்கிற குறிப்புகளும் காணப்படுகின்றன. முதலில் மாஜினி ஆதரவாளர்களாலும், ஓவனின் ஆதரவாளர்களும் எழுதப்பட்டவை ஏற்கப்படவில்லைமார்க்ஸ் எழுதிய  Address to the working classes என்பது ஒருமனதாக ஏற்கப்பட்டது. ஏறத்தாழ IWMAக்கு சார்டிசம் பாணியில்தான் மார்க்ஸ் எழுதியிருந்ததாக பீர் குறிப்பிடுகிறார்.அவரின் தீர்க்கமான தொழிலாளர் வர்க்க பொருளாதார அறிவின் மூலம் தலைமை பாத்திரம் எடுக்க அவரால் முடிந்தது. நவம்பர் 1,1864ல் மார்க்ஸ் எழுதிய அறிக்கை சில திருத்தங்களுடன் இவ்வமைப்பினரால் ஏற்கப்பட்டது. முதலில் பெயர் கூட இல்லாமலிருந்த அமைப்பிற்கு  தொழிலாளர்கள் Eccarius, Whitlock வற்புறுத்தலால்  IWMA International working Men Association என்கிற சர்வதேசதொழிலாளர் சங்கம், அகிலம் என்கிற பெயரிடப்பட்டதாக அதன் மினிட்ஸ்களை ஆய்ந்த டேவிட் ரியாஸ்னாவ் குறிப்பிடுகிறார்.
பிரிட்டிஷ் மக்கள்பாற் உள்ள வறுமை, அதை ஒழிப்பதாக பேசிய நாடாளுமன்ற பேச்சுகள், பெருகிய அரசு கஜானா, அதிகரித்துவரும் சுரண்டல், நிலமும் மூலதனமும் சிலர் கையில் எப்படி குவிந்து வருகிறது  போன்ற பல அம்சங்களை மார்க்ஸ் தன் உரையில் கொண்டுவருகிறார். பட்டினி சாவு நேர்ந்ததை குறிப்பிடுகிறார். சார்ட்டிஸ்ட்கள் இயக்கம் பெற்ற வெற்றிகளையும் தாண்டி முன்னேறவேண்டும் என்றார். 10 மணிவேலை சட்டம் பெற்றதை வரவேற்றார். அனைத்தயும் விஞ்சி தொழிலாளர் வர்க்கம் தனக்கான அரசியல் அதிகாரத்தை பெற்றாக வேண்டும் . அரசு எந்திரத்தை தங்கள் நலனுக்கான கருவியாக்கிடவேண்டும் என்றார். உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என முழங்கினார் மார்க்ஸ். The Emancipation of the working class must be achieved by the working class themselves.. for the abolition of class rule என்று மார்க்ஸ் அவ்வுரையில் எழுதியிருந்தார்.


மார்க்ஸ் லண்டனில் வாழ்ந்த கடைசி 15 ஆண்டுகளில் அவரது ஆங்கிலம் அற்புதமாக மாறியது என்கிறார் ஆய்வாளர் பீர். சில நேரங்களில் தாய்மொழி ஜெர்மனைவிட அவரது ஆங்கிலம் மேம்பட்டு இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். தொழிலாளர் ஏதும்  செய்ய இயலாத வகையற்ற வெறும் கூட்டமல்ல. அவர்கள் வருங்கால சுரண்டலற்ற சமுகத்தின் கட்டுமான மாஸ்டர்கள் என மார்க்ஸ் எழுதிவந்ததை பீர் குறிப்பிடுகிறார்
மூலதனம் என்பது சமுக சக்திகளின் சேகரம்  திரட்சி கொண்ட சக்தியுடையது. ஆனால் தொழிலாளர் தங்களின் தனிமனித சக்தியை மட்டுமே கொண்டுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை மட்டுமே அவர்களின் சமூக சக்தி. வேற்றுமைகளால் அதையும் அவர்கள் பலவீனமாக வைத்துக்கொண்டுள்ளனர் என்றார் மார்க்ஸ். உடனடி பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் அவர்கள் அடிப்படையான உற்பத்திமுறை குறித்த கவனம் செலுத்தவில்லை. இதனால் பொதுவான சமூக அரசியல் போராட்டங்களிலிருந்து அவர்கள் விலகி நிற்கிறார்கள் என பிரிட்டிஷ் தொழிற்சங்கங்களின் செயல்பாட்டை கண்ணுற்ற அனுபவத்திலிருந்து  பொதுமைப்படுத்தி விளக்கினார். The trade unions must now learn consciously to act as the foci of the working classes என்றார் மார்க்ஸ்.
தங்களுக்கு என தனித்த கட்சியை துவக்குவதும் உற்பத்தியை தேசிமயமாக்குவதும் அரசியல் அதிகாரம் பெறும்வரை வர்க்கப்போரை நீடித்து நடத்துவதும் அவசியம் என்கிற அறிவுரையை சர்வதேச தொழிலாளர் சங்கத்திற்கு மார்க்ஸ் தந்தார். IWMA என்கிற சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் மாநாடுகள் 1865 லண்டன், 1866 ஜெனிவா, 1867 லசான்னே, 1868 பிரஸ்ஸல்ஸ், 1869 பாசில், 1872 ஹேக் பகுதிகளில் நடந்தது. ஆரம்பத்தில் பிரிட்டிஷ் தொழிற்சங்கத்தலைவர்கள் பலர் பங்கேற்றாலும் பின்னர் அவர்கள் விலகிக்கொள்ளத் துவங்கினர். பொதுக்குழு உறுப்பினர்களாக பிரிட்டிஷ் தோழர்கள் பலர் இருந்தனர். அங்கு பிரஞ்சு, ஸ்விஸ், ஜெர்மன், பெல்ஜியம், ருஷ்யா என பல நாட்டுப் பிரதிநிதிகள் விவாதம் கருத்து மோதல்கள் அதிகமாயின.
மூலதனம் புத்தகத்தை முடிக்கும் வேலையில் தீவிரமாக இருந்ததால் மார்க்ஸ் 1866ல் ஜெனிவாவிற்கு போகவில்லை என ரியாஸ்னாவ் தெரிவிக்கிறார். இங்கிலீஷ் பிரதிநிதிகள் மார்க்சின் நிலைப்பாட்டை உயர்த்திப் பிடித்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். 1868 பிரஸ்சல்ஸ் அமர்வில் மூலதனம் நூல் மிகுந்த பாராட்டை பெற்றது . அனைத்து நாட்டு தொழிலாளி வர்க்கமும் அதை படித்து அறியவேண்டும் என தீர்மானமும் நிறைவேறியது. 1869 Basle பாசில் காங்கிரசில் பகுனின் பங்கேற்றார். தொழிலாளி வர்க்கம் என்பதற்கு அதீத முக்கியத்துவம் மார்க்ஸ் தருகிறார். மாணவர், அறிவுஜீவிகள், மத்தியதர வர்க்க ஜனநாயகவாதிகள் புரட்சிகர சக்திகள் என்றார் பகுனின்.  Social alliance என்கிற தங்களின் தனி சர்வதேச அமைப்பையும்  War against God and State முழக்கத்தையும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர். பகுனின் மார்க்ஸிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் தான் அவரின் சீடன் என்பதில் பெருமை கொள்வதாக எழுதினாலும் அவர் குறித்த விமர்சனங்களை சுற்றறிக்கையாக விநியோகித்தார்.

 பாரிஸ் கம்யூனின் மார்ச் 18-மே 29, 1871 தோல்வி அனுபங்களை பெறவைத்தது . பகுனின் கம்யூன்களை உருவாக்குவோம் என முழங்கினார். பாசில் காங்கிரஸ்  கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து லண்டனில் 1871ல் அகிலம் கூடியது. பகுனிஸ்ட்கள் முறியடிக்கப்பட்டனர். 1872 ஹேக் மாநாட்டில் மார்க்ஸ் பங்கேற்றார், பகுனின் வரவில்லை. அவரை வெளியேற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எங்கெல்ஸ் அகில அமைப்பின் ஜெனரல் கவுன்சில் நியூயார்க்கிலிருந்து செயல்படும் என்கிற தீர்மானத்தை முன்மொழிந்தார். 1876ல் நியூயார்க்கில் அகைலம் கலைக்கப்பட்ட அறிவிப்பு வெளியானது. அகிலத்தில் 300 உறுப்பினர்கள் இருந்ததாக பதிவு ஒன்றை காணமுடிகிறது.
ஓவன் ஆதரவாளர்கள், பிரெளதான் ஆதரவாளர்கள் மற்றும் சில அனார்க்கிஸ்ட்கள் ஆகியவர்களுடன் மார்க்ஸ்க்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சர்வதேச அமைப்பு பலவீனமாக துவங்கியது. 1872ல் பிரிட்டிஷ் தொழிற்சங்க தலைவர்கள் 1864 மார்க்ஸ் உரையுடன் சில கருத்துக்களையும் இணைத்தனர். வயது வந்தோர் வாக்குரிமை, விகிதாச்சார பிரதிநிதித்துவம், மதசார்பற்ற இலவச கல்வி, அரசாங்க சர்ச்சுகள் என்கிற முறை கூடாது, பட்டங்களும் சலுகைகளும் உள்ள முறை ஒழிப்பு, அயர்லாந்த்தில் சுய ஆட்சி, நிலம், சுரங்கம் உற்பத்திமுறைகளை தேசஉடைமை ஆக்குதல், நாணய பரிவர்த்தனைக்கு ஸ்டேட்பாங்க் முறை என பல்வேறு கோரிக்கைகளை பிரிட்டிஷ் அமைப்புகள் வைத்தன. Working men had ceased to think and wanted to hear no thoughtful talk என 1850களில் அவர்கள் முன்னேற்றத்திற்காக போராடிய மூத்த தலைவர்கள் 1860 இறுதிகளில் வருத்தமுற துவங்கினர். அவர்களின் பொருளாதார வாழ்க்கை சற்று மேம்பட்டுள்ளதாக அவர்கள் கருத்து தெரிவிக்க துவங்கினர்.
London working Men Union ,  Labour Electoral Association, Labour Representation League போன்ற செல்வாக்கு நிறைந்த அமைப்புகள் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் பிரச்சனைகளை கொண்டுபோய் தீர்க்கவிரும்பின. LRL அமைப்பு IWMA வை ஏற்காமல் விமர்சித்தது. அதற்கு புகழ்வாய்ந்த ஜே எஸ் மில் போன்றவர்களின் ஆதரவும் கிட்டியது. மார்க்ஸ் நோய்வாய்ப்பட்டு வெளிஉலக நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத 1882-83 களில்  சோசியல் டெமாக்ரடிக் ஃபெடெரேஷன், பாபியன்கள், சோசலிஸ்ட் லீக் போன்றவர்கள் இணைந்து சோசலிச கொள்கைகள் என போராடிவந்தனர்.

எங்கெல்ஸ் தனது பாக்டரி தொடர்புகளை விடுவித்துக்கொண்டு 1870 செப்டம்பரில் லண்டன் வந்து சேருகிறார். அமைப்பு வேலைகளில் மார்க்சின் பளுவை குறைக்கிறார். அப்போது ஜெர்மனியில் பேராசிரியர் டூரிங் சிந்தனைகள் செல்வாக்கு பெற்று வந்தன. கண்பார்வை இல்லாததையும் கடந்து பல ஊர்களில் அரசியல் பொருளாதாரம், தத்துவம் குறித்து அவர் உரை நிகழ்த்தினார். அவருக்கு மறுப்பு எழுதவேண்டிய கடமை எங்கெல்ஸ்க்கு வந்தது. எங்கெல்ஸ் ஆரம்பத்தில் தயங்கினாலும் மார்க்சின் துணையுடன் வோர்வார்ட்ஸ் ஜெர்மன் பத்ரிக்கையில் 1877ல்  தொடர்களாக எழுதி பின்னர் 1878ல் டூரிங்குக்கு மறுப்பு வெளியானது.   பெர்ன்ஸ்டைன் உள்ளிட்டவர் எங்கெல்ஸை விமர்சித்தனர் . மார்க்சியத்திற்கும் கேபிடலுக்கும் மிக சிறந்த அறிமுகம் அப்புத்தகம் என ரியாஸ்னாவ் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment