https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, May 29, 2016

பேரா சுப்புரெட்டியார் அவர்களின் 1988 சொற்பொழிவு புத்தக வடிவில்   தமிழ் இலக்கியத்தில் அறம்-நீதி-முறைமை என்பதாக வெளியிடப்படது. முதல் வால்யூம் 367 பக்க அளவில் அய்ந்திணைப் பதிப்பக விற்பனையாக வந்தது. படித்துக்கொண்டிருக்கிறேன்.. அதிலிருந்து  பிடித்தவை...
காமஞ் சான்ற கடைகோட் காலை
ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே           
செய்தவற்றை இனி செய்யவேண்டியதில்லை என உணர்தல்- அடுத்த நம் வாரிசுகளிடம் அதை விடுதல்- நெஞ்சினால் துறத்தால் என்கிறார் ஆசிரியர்
மணிவாசகரின் இப்பாடல் அற்புதமானது
புல்லாகி பூடாகிப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பரவையாய் பாம்பாகிக்
கல்லய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்துளைத்தேன் எம்பெருமான்
மனம் பண்படும் இடம் காதல் வாழ்க்கை- பயன்படும் இடம் பொதுவாழ்க்கை- வாழும் இடம் தனிவாழ்க்கை
மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (குறள் 204)
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
வேலன்று வெற்றி தருவது;மன்னவன்
கோல்; அதூஉம் கோடாது எனின்

சங்க காலப் பொதுமக்கள் வாழ்க்கை சிறந்திருந்தது என்று வானளாவ புகழ்வது பொருந்தாது.. பாடல்கள் சில சான்றோரது வாழ்க்கையை பேசின- பொதுமக்கள் வாழ்க்கையை காட்டுவன அல்ல என்கிறார் சுப்பு ரெட்டியார்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
மனத்தூய்மை ஆற்றலை பெருக்கும்  மனச்சான்று நின்று என ஆசிரியர் விளக்குகிறார்.
சென்றதினி மீளாது மூடரே ( பாரதியின் கடுப்புஎப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்( பொறுப்புடன் அறிவுரை) இன்று புதிதாய் பிறந்தோம்- எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு இன்புற்றிருந்து வாழ்வீர்( நம்பிக்கை)
அறமென்பது தக்கது. தக்கதனை சொல்லி நிற்றல் என்கிறார் ரெட்டியார்.
காலதாமதமின்றி அறஞ்செய்க என்பதற்கு பல பாடல்களை எடுத்தாள்கிறார்
மின்னும் இளமை உளத்ஹம் என மகிழ்ந்து
பின்னை அறிவெ என்றல் பேதமை

வைகலும் வைகல் வரக்கண்டும் அது உணரார்.. நாள் தோறும் பொழுது கழிதல் குறித்து உணராது...
இது என வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்-முதுநீர் உலகில் முழுவதும் இல்லை
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குள் படும்பரம்பொருளே...
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அருளும் அன்பும் நீங்கி நீங்கா
நிரயம் கொள்பவரொ டொன்ராது காவல்
குழவி கொள்வோரின்  ஓம்புமதி
அளிதோ தேயது பெறலருங் குரைத்தே
நிரயம் எனில் நரகம்    ஓம்புமதி- பாதுகாப்பு
குழவி காப்பதுபோல நாட்டினை காத்திடு என்ற பொருளில்..


No comments:

Post a Comment