https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, May 26, 2016



26-5-16 கம்பராமாயணம் இதுவரை 100 பாடல்கள் படிக்க முடிந்தது. முதல் 50 பாடல்களில் படித்தபோது பிடித்த 5 பற்றி முந்திய பதிவை செய்திருந்தேன். இந்தப் பதிவில் படித்தபோது பிடித்த அடுத்த 5 பாடல்களை தந்திருக்கிறேன்
69.
கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா,
நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும், ஒழுக்கம்-குடிக்கு எலாம்.

குடிக்கு  எலாம்- கோசல நாட்டு மக்களுக்கெல்லாம்; நிதியம் கலம் சுரக்கும்செல்வத்தைக்  கப்பல்கள் கொடுக்கும்; நிலம் கணக்கு இலா நிறை  வளம்  சுரக்கும்நன்செயும்  புன்செயும்  ஆகிய  நிலங்கள் அளவற்ற  நிறை  வளத்தைக்  கொடுக்கும்; பிலம் நல் மணி சுரக்கும்-சுரங்கங்கள்  நல்ல  இரத்தினங்களைக்  கொடுக்கும்; பெறுதற்கு அரிய தம் குலம்   ஒழுக்கம்  சுரக்கும்பெறுவதற்கு  அரியதாகிய  குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும்

70 கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இல்லமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தனையின் செம்மையால்;
ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்,
ஏற்றம் அல்லது, இழித்தகவு இல்லையே.
ஓர்   குற்றம்  இல்லாமையால்- கோசல நாட்டில் எவரிடமும் ஒரு குற்றமும்  இல்லாமையால்கூற்றம்  இல்லை- கூற்றுவனது கொடுமை அந்நாட்டில்  இல்லை; தம்  சிந்தையின்  செம்மையால்அந்நாட்டு மக்களின்  மனச்   செம்மையால்; சீற்றம் இல்லை- சினம் அந்நாட்டில் இல்லை; நல் அறம்  அல்லது ஆற்றல் இல்லாமையால்- நல்ல அறச்செயல்    செய்வதை தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால்; ஏற்றம் அல்லது  இழிதகவு  இல்லைமேன்மையைத்  தவிர  எவ்வகையான இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை.

78.

நெல் மலை அல்லன் - நிரை வரு தரளம்;
சொல் மலை அல்லன் - தொடு கடல் அமிர்தம்;
நல் மலை அல்லன் - நதி தரு நிதியம்;
பொன் மலை அல்லன் - மணி படு புளினம்.
நெல்மலை    அல்லன  - அந்த நாட்டில் நெற் குவியல்களில்லாத இடங்களில்;   நிரைவரு   தரளம்-   வரிசை   வரிசையாக   முத்துக்குவியல்கள்  காணப்படும்;   சொல்மலை  அல்லனசொன்ன  அந்த முத்துக்  குவியல்கள் இல்லாத  இடங்களில்தொடுகடல்  அமிர்தம்-தோண்டப்பட்ட  கடலில் எடுத்த   உப்புக் குவியல்கள் நிறைந்திருக்கும்;நன்மலை  அல்லன- அந்த உப்புக் குவியல்கள்  இல்லாத இடங்களில்;நதிதரு  நிதியம்நதிகளால்  கொண்டுவந்து  குவிக்கப்பட்ட  பொன் முதலிய  பொற்  குவியல்களில்  பல  இடங்களில்; மணிபடு புளினம்-மணிகள் நிறைந்த மணல் மேடுகள் இருக்கும்.
கோசல   நாட்டில் நெல்லும், முத்தும், உப்பும், பொன்னும், மணியும் எங்கும்  குவிந்து  மலைகளைப்  போல  மண்டிக்  கிடந்தன   என்பது கருத்து. புளினம்: மணல் திட்டு.        

80.

கோகிலம் நவில்வன, இளையவர் குதலைப்
பாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன; கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன, நகை புரை தரளம்.

கோகிலம்    நவில்வன- குயில்கள் கற்றுப் பேசுவன; இளையவள் குதலைப்  பாகு  இயல்  கிளவிகள்- அந்நாட்டுப்  பெண்களின் பாகு போன்ற  இனியனவாகிய  மழலைச் சொற்களையாம்கேகயம் நவில்வன அவர்  பயில்  நடமேமயில்கள் நடந்து பழகுவன  அப்பெண்களின் நடையையாம்; கிளர் இள வளையின் நாகுகள்- விளங்கும் இளம்பெண் சங்குகள்உமிழ்வன  நகை புரைதரளம்- உமிழ்வது அப்பெண்களின் பற்களை ஒத்த முத்துக்களையேயாம்.
இள   மகளிரைப் போலக் குயில்கள் பேசும்; அவர்களது நடையைப்போல மயில்கள் நடக்கும்; குயிலும் மயிலும்   உவமானங்கள் அவற்றை உவமேயங்களாக்கிக்    கூறியதால்   இது    எதிர்நிலையுவமையணி”; எதிர்மறை  அணி என்றும் கூறுவர். பாகு இயல்  கிளவி: பாகு போன்ற இனிய  மொழிகேகயம்மயில்நகை: பல்கிளவி: சொல். தரளம்:முத்து 


84.

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.

ஓர்    வறுமை   இன்மையால்- (அந்த நாட்டில்) வறுமை சிறிதும் இல்லாததால்வண்மை  இல்லைகொடைக்கு  அங்கே இடமில்லை;நேர்    செறுநர்   இன்மையால்நேருக்கு   நேர்   போர்புரிபவர் இல்லாததால்திண்மை  இல்லைஉடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை;   பொய்   உரை இல்லாமையால்பொய்ம்  மொழி இல்லாமையால்;     உண்மை    இல்லை-   மெய்ம்மை    தனித்து விளங்கவில்லை; பல்கேல்வி மேவலால்- பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து   விளங்குவதால்;   வெண்மை   இல்லைவெள்ளறிவாகிய அறியாமை இல்லை.
கோசலை     நாட்டில் வறுமை சிறிதும் இல்லாதலால்  வண்மையின் சிறப்புத்  தெரிவதில்லைபகைகொண்டு    போர்புரிபவர் இல்லாதலால் உடல்    வலிமையை   உணர   வழியில்லை;   பொய்     பேசுவோர் இல்லாமையால்  உண்மையின்  பெருமை தெரிய வழியில்லை;   கேள்வி ஞானம்  மிகுந்திருப்பதால்  அங்கு அறியாமை சிறிதுமில்லை   என்றார். ‘யாதும். கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை’    என்று

                                                 

No comments:

Post a Comment