Skip to main content


26-5-16 கம்பராமாயணம் இதுவரை 100 பாடல்கள் படிக்க முடிந்தது. முதல் 50 பாடல்களில் படித்தபோது பிடித்த 5 பற்றி முந்திய பதிவை செய்திருந்தேன். இந்தப் பதிவில் படித்தபோது பிடித்த அடுத்த 5 பாடல்களை தந்திருக்கிறேன்
69.
கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா,
நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும், ஒழுக்கம்-குடிக்கு எலாம்.

குடிக்கு  எலாம்- கோசல நாட்டு மக்களுக்கெல்லாம்; நிதியம் கலம் சுரக்கும்செல்வத்தைக்  கப்பல்கள் கொடுக்கும்; நிலம் கணக்கு இலா நிறை  வளம்  சுரக்கும்நன்செயும்  புன்செயும்  ஆகிய  நிலங்கள் அளவற்ற  நிறை  வளத்தைக்  கொடுக்கும்; பிலம் நல் மணி சுரக்கும்-சுரங்கங்கள்  நல்ல  இரத்தினங்களைக்  கொடுக்கும்; பெறுதற்கு அரிய தம் குலம்   ஒழுக்கம்  சுரக்கும்பெறுவதற்கு  அரியதாகிய  குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும்

70 கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இல்லமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தனையின் செம்மையால்;
ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்,
ஏற்றம் அல்லது, இழித்தகவு இல்லையே.
ஓர்   குற்றம்  இல்லாமையால்- கோசல நாட்டில் எவரிடமும் ஒரு குற்றமும்  இல்லாமையால்கூற்றம்  இல்லை- கூற்றுவனது கொடுமை அந்நாட்டில்  இல்லை; தம்  சிந்தையின்  செம்மையால்அந்நாட்டு மக்களின்  மனச்   செம்மையால்; சீற்றம் இல்லை- சினம் அந்நாட்டில் இல்லை; நல் அறம்  அல்லது ஆற்றல் இல்லாமையால்- நல்ல அறச்செயல்    செய்வதை தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால்; ஏற்றம் அல்லது  இழிதகவு  இல்லைமேன்மையைத்  தவிர  எவ்வகையான இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை.

78.

நெல் மலை அல்லன் - நிரை வரு தரளம்;
சொல் மலை அல்லன் - தொடு கடல் அமிர்தம்;
நல் மலை அல்லன் - நதி தரு நிதியம்;
பொன் மலை அல்லன் - மணி படு புளினம்.
நெல்மலை    அல்லன  - அந்த நாட்டில் நெற் குவியல்களில்லாத இடங்களில்;   நிரைவரு   தரளம்-   வரிசை   வரிசையாக   முத்துக்குவியல்கள்  காணப்படும்;   சொல்மலை  அல்லனசொன்ன  அந்த முத்துக்  குவியல்கள் இல்லாத  இடங்களில்தொடுகடல்  அமிர்தம்-தோண்டப்பட்ட  கடலில் எடுத்த   உப்புக் குவியல்கள் நிறைந்திருக்கும்;நன்மலை  அல்லன- அந்த உப்புக் குவியல்கள்  இல்லாத இடங்களில்;நதிதரு  நிதியம்நதிகளால்  கொண்டுவந்து  குவிக்கப்பட்ட  பொன் முதலிய  பொற்  குவியல்களில்  பல  இடங்களில்; மணிபடு புளினம்-மணிகள் நிறைந்த மணல் மேடுகள் இருக்கும்.
கோசல   நாட்டில் நெல்லும், முத்தும், உப்பும், பொன்னும், மணியும் எங்கும்  குவிந்து  மலைகளைப்  போல  மண்டிக்  கிடந்தன   என்பது கருத்து. புளினம்: மணல் திட்டு.        

80.

கோகிலம் நவில்வன, இளையவர் குதலைப்
பாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன; கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன, நகை புரை தரளம்.

கோகிலம்    நவில்வன- குயில்கள் கற்றுப் பேசுவன; இளையவள் குதலைப்  பாகு  இயல்  கிளவிகள்- அந்நாட்டுப்  பெண்களின் பாகு போன்ற  இனியனவாகிய  மழலைச் சொற்களையாம்கேகயம் நவில்வன அவர்  பயில்  நடமேமயில்கள் நடந்து பழகுவன  அப்பெண்களின் நடையையாம்; கிளர் இள வளையின் நாகுகள்- விளங்கும் இளம்பெண் சங்குகள்உமிழ்வன  நகை புரைதரளம்- உமிழ்வது அப்பெண்களின் பற்களை ஒத்த முத்துக்களையேயாம்.
இள   மகளிரைப் போலக் குயில்கள் பேசும்; அவர்களது நடையைப்போல மயில்கள் நடக்கும்; குயிலும் மயிலும்   உவமானங்கள் அவற்றை உவமேயங்களாக்கிக்    கூறியதால்   இது    எதிர்நிலையுவமையணி”; எதிர்மறை  அணி என்றும் கூறுவர். பாகு இயல்  கிளவி: பாகு போன்ற இனிய  மொழிகேகயம்மயில்நகை: பல்கிளவி: சொல். தரளம்:முத்து 


84.

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.

ஓர்    வறுமை   இன்மையால்- (அந்த நாட்டில்) வறுமை சிறிதும் இல்லாததால்வண்மை  இல்லைகொடைக்கு  அங்கே இடமில்லை;நேர்    செறுநர்   இன்மையால்நேருக்கு   நேர்   போர்புரிபவர் இல்லாததால்திண்மை  இல்லைஉடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை;   பொய்   உரை இல்லாமையால்பொய்ம்  மொழி இல்லாமையால்;     உண்மை    இல்லை-   மெய்ம்மை    தனித்து விளங்கவில்லை; பல்கேல்வி மேவலால்- பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து   விளங்குவதால்;   வெண்மை   இல்லைவெள்ளறிவாகிய அறியாமை இல்லை.
கோசலை     நாட்டில் வறுமை சிறிதும் இல்லாதலால்  வண்மையின் சிறப்புத்  தெரிவதில்லைபகைகொண்டு    போர்புரிபவர் இல்லாதலால் உடல்    வலிமையை   உணர   வழியில்லை;   பொய்     பேசுவோர் இல்லாமையால்  உண்மையின்  பெருமை தெரிய வழியில்லை;   கேள்வி ஞானம்  மிகுந்திருப்பதால்  அங்கு அறியாமை சிறிதுமில்லை   என்றார். ‘யாதும். கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை’    என்று

                                                 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு