என்னால் எளிய தக்கையான விஷயங்களை படிக்கமுடியாதோ என்ற நிலை இருந்து வந்தது. மண்டை காயக்கூடிய மார்க்சிய எழுத்துக்களை மட்டும்தான் பழக்கம் காரணமாக படிக்க முடியுமோ என்ற நிலை..
சில நண்பர்கள் என்னை Raw எனக்கூட விமர்சித்த காலமுண்டு.. சில இலக்கிய எழுத்துக்களை தற்போது படிக்க முடிகிறது. தக்கையான சாதாரணமாக புரிந்து கொள்வதற்கு எந்த உழைப்பும் தேவைப்படாத சாவி அவர்களின் என்னுரை 101 பக்க தொடர் கட்டுரைகள்- வார இதழில் வந்து புத்த்கமாக மாறியதொன்று.. ஒரே மணியில் படிக்க முடிந்தது. கலைஞர் கருணாநிதி அவர்கள் முன்னுரை.. ராஜாஜி, சதாசிவம், பெரியார், காந்தியென மிகச் சாதாரண பதிவுகள். கண்டிப்பாக படிக்க வேண்டும் என பரிந்துரைக்க வேண்டிய புத்தகமாக படவில்லை.
No comments:
Post a Comment