Skip to main content

changes In Relations of Production in India

 changes In Relations of Production in India- Our political program  என்கிற சிபிஅய் மாவோயிஸ்ட் 272 பக்க பெரும் ஆவணம் 2021ல் வெளிவந்தது. இந்திய சமூகம், வர்க்க உறவுகள், இந்தியாவில் நடந்த சமூக மாற்றங்கள் குறித்து அத்தோழர்களின் மத்திய கமிட்டி புரிதலை அவர்கள் இதில் தந்துள்ளனர். 


பல இடங்களில் மார்க்ஸ் லெனின் மாவோ மேற்கோள்கள் பார்முலா வகைப்பட்டு வந்தாலும், அத்தோழர்கள் தாங்கள் சரி என வந்தடைந்த புரிதலுக்கான உழைப்பை தந்துள்ளனர் . சிந்துவெளி ஆர்ய சமூகத்திலிருந்து அவர்கள் இந்திய வரலாற்று பொருள்முத வாதத்தை கட்ட முயல்கின்றனர். வர்ண- சாதி பதங்களையும் வர்க்க பதங்களுடன் இணைத்து தங்கள் புரிதலை தருகின்றனர். 


வழக்கமான  அரைக்காலனிய அரை நிலபிரபுத்துவ ஆயுதம் தாங்கிய நிலம் சார்ந்த போராட்ட புரிதலே முன்வைக்கப்படுகிறது. இவர்கள் சிபிஎம்மிலிருந்து விலகி நக்சல் பாதை எனப்போய் 55 ஆண்டுகள் ஆகிறது. இந்தியா முதலாளித்துவ பாதையில் நுழைந்துவிட்டது என்று சொல்பவர்களை ஏகாதிபத்திய தாசர்கள் என்பர். இங்கு இருப்பது தரகு முதலாளித்துவம் என மதிப்பிடுவர்.


பண்டைய இந்திய சமூக உருவாக்கத்தை அவர்கள் 4 கட்டங்களாக சொல்கின்றனர். 1800-1000 பி சி- கால்நடை வளர்ப்பு ஆரம்ப விவசாயம் . இக்கட்டம் பற்றி  கால் நடை மேய்ச்சல் தொழிலைவிட ஆரம்ப விவசாயம் அதிகமானதென்றாலும், வர்க்க சமூகங்கள் உருவாகவில்லை என கணிக்கின்றனர்.


அடுத்தக் கட்டம் 1000- 600 பி சி- கலப்பை உழவு- நாடோடி வாழ்விலிருந்து நிலையான விவசாய வாழ்க்கை நோக்கி- இரும்பின் பயன்பாட்டால் உற்பத்தி கருவிகளில் மாற்றம். உற்பத்தி பெருகி உபரி உருவானதாம். இங்கு அவர்கள் தருவது

varana system provided new social system and new relations of production..shudra varna rose from non Aryans. Kshatriyas and Brahmins became the ruling class and Vysas the agri making peasants. Dasas and other non Aryan savages were turned servants and shudra by varna


இங்கு அம்பேத்கர் பார்வையிலிருந்து சற்று மாறுபட்டு இவர்கள் எழுதுகின்றனர். அம்பேத்கர் சூத்திரர்கள் ஆர்யர்களிலிருந்து வீழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதினார்.


கிரேக்க சமூகம் போல அடிமை சமூகம் இந்தியாவில் இல்லை. ஆரம்பத்தில் சூத்திரர் நேரிடையாக உற்பத்தியில் பங்கேற்கவில்லை என மாவோயிஸ்ட்கள் சொல்கின்றனர். In this stage Shudras did not have direct participation in production.


மூன்றாம் கட்டம் வர்ண சமுதயம் 600-200 பி சி இக்கட்டம் நிலபிரபுத்துவம் நோக்கி நகரும் கட்டம் என்கின்றனர். இங்கு மாவோயிஸ்ட் எழுதுவது

The heads and priests from Aryan gens were taken into Kshatriya and Brahman varnas and the defeated Aryan and non Aryans tribes changed to Shudra varna. இங்கு அம்பேத்கர் ஆய்வை கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

பிராமண புரோகித வர்க்கம் வர்ணாஸ்ரம தர்மத்தை உருவாக்கியது. நாளடைவில் விவசாயம், தொழில்களை செய்வோர் சூத்திரர் ஆயினர். விவசாயம் செய்த சூத்திரர் நால்வகை வர்ணத்தில் வந்தாலும், தசாக்கள் கால்நடை தோல் உரித்தல் போன்ற வேலைகளில் வைக்கப்பட்டனர்.


புத்த, ஜைன காலத்தில் கிராமங்கள் நிலைப்பெற்று , பழங்குடிகள் கான்பெடரேஷன் என்பது அரசுருவாக்கம் பெற்று, நகரங்கள், சாம்ராஜ்ய வளர்ச்சிகள் என மாறின. புத்தம் அமைதியை அகிம்சையை போதித்தது. வர்த்தகர்கள் ஆதரவைப் பெற்றது. அரசு ஆதரவும் கிடைக்கலானது. விவசாய வர்க்க சமூகம் உருவாதலில் அதன் பங்காற்றியது.


அடுத்த 4வது கட்டம் 200 பி சி- 400 ஏ டி. வர்ண சமுகம் சாதி சமூகமாக எழுதல். நிலபிரபுத்துவ சமூகத்திற்கு நல்ல அடித்தளம் எழலானது. புத்தத்திற்கு போட்டியாக பிராம்மணியம் எழுந்தது. மனுஸ்மிருதி இக்காலத்தை பிரதிபலிக்கிறது எனலாம்.


சூத்திர என்கிற வர்ணப்பிரிவு உருவாக்கம் என்பது அடிமை சமூகம் போன்றதல்ல. இங்கு  they were not personal slaves to anyone  என்கிற முக்கிய கருதுகோளுக்கும் மாவோயிஸ்ட்கள் வருகின்றனர். ஆர்யர் அல்லாதவர் சூத்திரர் வர்க்கப்போராட்டமே இல்லை என சொல்ல முடியாவிட்டாலும். வர்ண முறை என்பதால் வலிந்த போராட்டங்கள் இல்லாமல் போனதெனலாம்.


பண்டைய சமூக கட்டங்கள் பற்றி மட்டுமே அவர்களின் ஆவனத்திலிருந்து சில கருத்தாக்கங்களை இங்கு வெளிப்படுத்தியுள்ளேன். பிரபுத்துவ சமூகம், பிரிட்டிஷ் ஆட்சியில் காலனி உற்பத்தி முறை, 1947-90 கால செமி கலோனியல் செமி ஃப்யூடல் முறை, இந்த அரை காலணி சமூகம் மீதான் உலகமய தாக்கம் 1991-2020 என அவர்கள் ஒவ்வொரு காலத்தின் உற்பத்தி உறவுகள் தாக்கம் பற்றி இந்த ஆவணத்தில் பேசுகின்றனர்.


வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்.





Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு