https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, April 20, 2019

அனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை


             அனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை
                                    -ஆர். பட்டாபிராமன்
அம்பானிகளின்  கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை கட்டிய   துருபாய் அம்பானி 2002ல் மறைந்தார். அவரின் இளைய மகன் அனில் அம்பானி  தனது  சகோதரன் முகேஷ் அம்பானியுடன் கசந்து 2006ல் வெளியேறினார். குடும்ப பஞ்சாயத்தை தாயார் கோகிலாபென்,  ஆடிட்டர் எஸ் குருமூர்த்தி  கே வி காமத் மற்றும் அரசியல் உயர்மட்டத்தினரும் தலையிட்டு முடித்தனர். சகோதரர்கள் No compete Agreement  போட்டதாகவும் சொல்லப்பட்டது.
துருபாய் அவர்கள் கோலோச்சியபோது 1977ல் எடுத்த கணக்கின்படி 20லட்சம் பங்குதாரர்கள் கும்பலாக சேர்ந்த ’பெரும்முதலீட்டு’    நிறுவனமாக ரிலையன்ஸ் இருந்தது. மிகப்பெரும் ஸ்டேடியங்களில்தான்  ஆண்டுப்பேரவையே நடக்கவேண்டியிருந்தது. அந்த அளவிற்கு முதலீட்டு பங்குதாரர்கள் குவிந்திருந்தனர்.
சகோதரர்கள் இருவரும் ஏறக்குறைய சம சொத்து மதிப்புடன் தொழில்களை பிரித்துக்கொண்டு கார்ப்பரேட் களமாடினர். பாகப்பிரிவினையில் அனிலுக்கு நிதி கம்பெனிகள், டெலிகாம், பவர் ஜெனரேஷன் கிடைத்தன. முகேஷிற்கு பெட்ரோகெமிக்கல்ஸ், ரிஃபைனரிகள் கிடைத்தன. கறவை பசுக்களை முகேஷ் பெற்றுக்கொண்டு அனிலுக்கு எலுமிச்சை கொடுத்துவிட்டார் என கார்ப்பரேட் வட்டாரங்கள் தங்கள் கமெண்ட்களை தந்தன.
 2007ல் 45 பில்லியன் டாலர் மதிப்புடன் இறங்கிய இளையவர் அனில் அம்பானி. ஆனால் 2018 ஃபோர்ப்ஸ் கணக்கெடுப்பின்படி 2.44 பில்லியன் டாலருக்கு சரிந்தார். அவரின் சொத்துக்களில் 60 சதம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் முகேஷ் அம்பானியின் வளர்ச்சி கூடிக்கொண்டே போனது. கூட்டு ஆண்டு மதிப்பு வீதப்படி சேல்ஸ் பகுதியில் 11.2 சதம், இலாபத்தில் 9.4 சதம், ரிடன்ஸ் வீதம் 17.8 சதமாகவும்  அவருக்கு உயர்ந்தது. அனிலுக்கோ விற்பனை 9.4 சதம், நட்டம் 12.4 சதம், ரிடர்ன்ஸ் மைனஸ் 1.7 என வீழ்ச்சியாக இருந்தது. முகேஷின் மார்க்கெட் காபிடலிசேஷன் 98.7 பில்லியன் டாலர் எனில் அனிலின் மார்கெட் காபிடலிசேஷன் 4 பில்லியன் டாலர் என வீழ்ந்தது. அனிலின் மார்கெட் காபிடலிசேஷன் 2008ல் 1.65 லட்சம் கோடி என்றால் பிப்ரவரி 2019ல் அது 1687 கோடியாக 1 %  ஆக வீழ்ந்தது.

இந்திய டெலிகாமில் நடைபெற்றுவரும் கழுத்தறுப்பு போட்டி, கட்டணங்கள் மூலம் பெரும் யுத்தம், வங்கி பிறவகைப்பட்ட கடன்கள் அனிலையும் வீழ்த்தின. அனிலின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 2017ல் நட்டம் மற்றும் கடன் சுமையால் முறிந்து போனது. திவால்  சூழல் காரணமாக பிரச்சனை தேசிய கம்பனி சட்ட டிரிப்யூனலுக்கு சென்றது. ஸ்வீடனின் எரிக்சன் தனது பாக்கியை வசூலிக்க உச்சநீதிமன்றம் சென்றது.
NCLT திவால் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாமல் இருப்பதற்காக ஜியோ மற்றும் ப்ரூக்பீல்ட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அனில்  அறிவித்தார். அலைவரிசையை பெற்றுக்கொள்வது என்பதாலேயே அனிலின் Rcom வைத்துள்ள பாக்கிகளுக்கு தான் பொறுப்பாக முடியாது என DOT க்கு முகேஷ் கடிதம் எழுதினார்.  நிலைமையை உணர்ந்த DOT இருவருக்குமான அலைக்கற்றை பரிமாற்றம் விதிகளின்படி இல்லை என  தெரிவித்தது.
 2010ல் ஏர்டெல்ல்லுக்கு நெருக்கமான போட்டியாளராக இரண்டாம் இடத்திற்கு 17 சத மார்க்கெட்டுடன்  அனிலின் ஆர்காம் நிறுவனம் இருந்தது . ஆறு ஆண்டுகளில் 2016ல் அது 10 சதமாக வீழ்ச்சியை கண்டது. 2010ல் 25000 கோடி கடனில் இருந்த ஆர்காம் 2016ல் 45000 கோடி கடன்கார நிறுவனமானது. அனில்  கடனில் பாதி அலைக்கற்றை வாங்குவதற்காக பெறப்பட்டது என பத்திரிகைகள் எழுதின.
எரிக்சன் கம்பெனிக்கு ரூ 260 கோடி தரத்தயார்- அதற்கு தனது பிடிக்கப்பட்ட வரியை SBI கொடுத்திடவேண்டும் எனக்கோரிக்கை வைத்தார் அனில். ஆனால் டிரிப்யூனல் அதை ஏற்கவில்லை. எரிக்சன் கம்பெனிக்கு தான் செலுத்திய 118 கோடி தவிர 453 கோடிய அவர் தரவேண்டிய நிலை இருந்தது. அனிலும் ஆர்காம்  சேர்மன் சதிஷ் சேத், இன்பிராடெல் சேர்மன் சாயா விரானி உடனடியாக எரிக்சனுக்கு 453 கோடியை தரவில்லையெனில் மூன்று மாதம் சிறை கம்பியை எண்ண நேரிடும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முகேஷ் உதவி செய்து சிறை செல்லாமல் சகோதரனை காப்பாற்றியதாகவும் , அனில் தனது அண்ணன் அண்ணியாருக்கு நன்றி பாராட்டியதாகவும் செய்திகள் வெளியாயின.. .

 அனிலின்  டெலிகாம் CDMA  வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது. உலகில்  GSM- CDMA  கார்ப்பரேட் யுத்தத்தில் GSM   மார்க்கெட் ஓங்கத்துவங்கியது. இதனால் காலம் கடந்து அனில் ஜி எஸ் எம் பக்கம் நகரத்துவங்கினார். ஆனால் முகேஷின் வரவு மான்சூன் ஹங்காமாவின் அதிரடி தள்ளுபடிகள் மார்க்கெட்டை மயக்கின. தான் பிற டெலிகாம் கம்பெனிகளைவிட  மலிவில் விற்பனை செய்பவன் என முகேஷின் முழக்கங்கள் கவ்விப்பிடித்தன. மக்கள் ஜியோவிடம் சாயத்துவங்கினர்..
அனிலும் தன்னால் சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் 13 மாநிலங்களில் 3G யில் 8500 கோடிக்கு GSM  முதலீடு செய்தார். தன்னால் பிறைரைவிட 60 சதம் குறைவாக கட்டணம் வைத்து தரமுடியும் என்றார். ஆனாலும் அவரால் எழமுடியவில்லை. அண்ணன் முகேஷின் ஜியோ வரவால்  சகோதரன் அனிலின் டெலிகாம் கார்ப்பரேட் சாம்ராஜ்யம் இற்று வீழந்தது என எகானமிக் டைம்ஸ் எழுதியது
 டிசம்பர் 2010ல் தன்னிடம் 12 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதாக ஆர்காம் தெரிவித்தது. ஆனால் ஜியோ வந்து 3 ஆண்டுகளில் 30 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றது. முன்பாக டெலிகாமில் டெலினார்,TTSL, எம் டி எஸ் வீழ்ந்தன. ஏர்செல்லும் வீழ்ந்தது. ஜியோ வருவதற்கு முன்பே 9.5 சதம் மார்க்கெட்டை மட்டுமே வைத்திருந்த அனிலால் 2017ல் 5 சத மார்க்கெட்டை மட்டுமே தக்கவைக்க முடிந்தது..
ஜியோ வந்த பின்னரும் ஏர்டெல் தாக்குப்பிடிப்பதற்கு சில காரணிகள் உதவின என  மார்க்கெட் ஆய்வாளர்கள் எழுதினர். ஏர்டெல் தனது டவரை, பைபர் பிரிவை, ஆப்ரிக்கா நில சொத்துக்களை பணமாக்குதல் முறையை ஏர்டெல் கையாண்டது
நட்டம் அடையத்துவங்கிய BSNL கூட  தன்னை மீட்டுக்கொள்ள ஏர்டெல் போர்ட் ரூம் முடிவைகளையே மாடல் ஆக கருதி செயல்பட்டுவருகிறது . ஆனாலும் பெருமளவு அதனால் தன்னை மீட்டுக்கொள்ள முடியவில்லை. தனியார் வர்த்தக நலன்கள் முடிவுகள் என்பதற்கும் பொதுத்துறை நலன்கள் என்பதற்கும் முழுமுதல் ஒற்றுமை இருக்கமுடியாது. அவைகளின் நோக்கங்கள் அடிப்படையில் மாறுபட்டவை என்பதை உலகமயமாக்கலுக்கு பின்னர் ஆட்சியாளர்கள் உணரத்தவறியுள்ளனர். பொதுத்துறையை காக்கவேண்டிய சக்திகள் (அதிகாரதட்டு, தொழிலாளர், தேசபக்த சக்திகள்) இடையில் நிலவிவரும் மெத்தனம்,  செக்குமாட்டுத்தன்மையும் காரணிகள் ஆகாமல் இல்லை என்கிற சுயவிமர்சனமும் அவசியமாகிறது..
 அனில் அம்பானி மீடியா வெளிச்சத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்- அடிக்கடி பிரஸ் மீட் என  செலவிடுவார். சில மைல்கள் மட்டுமே உள்ள நவிமும்பாய்க்கு கூட ஹெலிகாப்டரில்தான் பறப்பார். பாலிவுட் நட்சத்திரங்களுடன் பெரும் நட்புவட்டாரம் இருந்தது. சமாஜ்வாடி அமர்சிங் நெருகியவராக இருந்தார். ஆனால் இது அரசியல் வட்டாரத்தில் அவருக்கு எதிர்மறை விளைவையே தந்தது. அனிலே பாலிவுட் நடிகையாக இருந்த டினா முனிம் அவர்களைத்தான் 1991ல் மணம் புரிந்து இருந்தார்.
Anil was prone to taking up capital-guzzling projects immediately after the family split. "His decisions did not come out of a carefully crafted strategy; they were driven by ambition, charges a stock market analyst who did not wish to be named. "It was fashionable to bid for huge projects, which were financed by public sector banks (PSBs) at the behest of politicians  என இந்தியா டுடே எழுதியது.  Unrestrined borrowings and lower revenues eroded the worth of Reliance Group  என பத்திரிகைகள் எழுதத்துவங்கின.
அனில் ஏராள வழக்குகளில் சிக்கி அதில் கவனம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. வருவாய் பெருகாமல் கடன் மட்டும் கூடியது. தொட்டதற்கெல்லாம் வழக்கு என்கிற அனிலின் குணத்தால் பலர் அவருடன் பகைமை பாராட்டும் நிலைக்கு சென்றனர் 2ஜி வழக்கிலும் அனில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டார். தனது சகோதரர் முகேஷ் உடன் 2009ல் தாத்ரி பிளாண்ட்  K G Basin   வழக்காடினார்.
 2010ல் சகோதரகள் போட்டுக்கொண்டபோட்டி கூடாது’ என்கிற நிபந்தனை நீக்கப்பட்டது. உடனேயே முகேஷ் இன்போடெல் பிராட்பாண்டில் 5000 கோடி அளவு முதலீட்டை செலுத்தி தான் டெலிகாமை கைப்பற்ற போவதை சூசகமாக்கினார். அக்டோபர் 2016ல் அனைவரையும் அலறவைக்கும் வகையில் 2.7 லட்சம் கிமி பைபர் ஆப்டிக் உடன் ஜியோ பெரும்பூதமாக நுழைந்தது. 2018ன் மத்தியில் ஜியோ 20 சத மார்கெட்டை கைப்பற்றியது. ஆர்காம் 2 சதமாக வீழ்ந்தது, பி எஸ் என் எல்கூட 10 சதமாக இருந்தது..
 அனில் தனது 14வது ஆண்டுப்பேரவை கூட்டத்தில் (செப் 2018ல்) டெலிகாமிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். “ As we have moved out of the mobile sector, we will monetise our enterprise business at an appropriate stage. Reliance Realty will be the engine of growth for the future of this company." This includes monetising 30 million square feet of commercial space at DAKC”  என பேசினார். சொத்துக்களை விற்றால்தான் 40000 கோடி கடனிலிருந்து மீளவழி என்ற நிலை ஏற்பட்டது.
 அவரின் 24000 மெகாவாட் பவர் ஜெனரேஷன் யூனீட்டுகளும் மூடப்பட்டன. அதில் அவர் 1.2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளதாக இந்தியா டுடே தெரிவித்தது. அனில் 2015ல் வாங்கிய பிபவவ் பாதுகாப்புத்துறை வர்த்தகம், தற்போது அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள ரபேல் டீல்  ஆகியவற்றில் சிக்கினார்.

 அனிலின் நிதி கம்பெனிகள் ஓரளவிற்கு அவரை காப்பாற்றி வருவதாக அறியமுடிகிறது. ரிலையன்ஸ் காபிடல், இன்ஸ்சூரன்ஸ், ஹோம் பைனான்ஸ் போன்றவை  தாக்குப்பிடித்து வருகின்றன. டெலிகாம் தவிர பிற அனைத்து கடன்களும் அவருக்கு செப் 2018 படி 1.72 லட்சம் கோடி  இருப்பதாக  செய்திகள் வெளியாயின. அவர் தனது  ரிலையன்ஸ் இன்ஃபிரா வர்த்தகத்தில் சில பகுதியை அதானியிடம் விற்று 19000 கோடியை புரட்டிக்கொண்டார் என்ற செய்தியும் வெளியானது.
 அனில் மீள என வழி? அவரது மகன் அன்மோல் நிதி கம்பெனிகளின் டைரக்டர் ஆக்கப்பட்டுள்ளார். அப்பாவின் சரிவை அவர் மீட்பாரா?
 இது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வீழ்ச்சியின் கதை மட்டுமா? அந்த வீழ்ச்சியை அரசின் கொள்கைபாற்பட்டு எப்படி விளக்குவது? அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்காமல், சம்பளத்திற்காக  BSNL  போல் அதிகம் செலவழிக்காமல் ஆர் காம் வீழ்ந்ததை எவ்வாறு புரிந்துகொள்வது.? 
டெலிகாம் தனது அரசின் ஏகபோகமான  இலாகாவிலிருந்து போட்டி, கழுத்தறுக்கும் போட்டி. மிதமிஞ்சிய உற்பத்தி, மலிவு விலை, இனி கொள்வார் இல்லா தேக்கம், வீழ்ச்சி, எவரோ ஒரு கார்ப்பரேட் இராட்சச விழுங்கியின் ஏகபோகம், ஊழல்கள் என  சுழல்சுற்றுகளின்  பாதையில்தான் பயணிக்குமா?
1848ல் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ்- எங்கெல்ஸ் இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர்.
முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது.
 முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைகள் என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு, சீன மதிலையொத்த தடைச்சுவர்களை எல்லாம் தகர்த்தெறிகின்றது;
முதலாளித்துவ வர்க்கம் இந்த நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கிறது? ஒருபுறம், உற்பத்தி சக்திகளில் பெரும்பகுதியை வலிந்து அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை வென்றெடுப்பதன் மூலமும், பழைய சந்தைகளை இன்னும் ஒட்டச் சுரண்டுவதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது. அதாவது மேலும் விரிவான, மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழி வகுப்பதன் மூலமும், நெருக்கடிகளை முன்தடுப்பதற்கான வழிமுறைகளைக் குறைப்பதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது.”
மேற்கூறிய அம்மேதைகளின் வரிகள் இக்கட்டுரையின் சாரமான வரிகளாகவும் அமைகிறது போல் தோன்றுகிறது.
19-4-19

No comments:

Post a Comment