Skip to main content

தீரன் தியாகி ராஜகுரு


தீரன் தியாகி ராஜகுரு 
                                  
                             முன்னீடு

சிவராம் ஹரி ராஜகுரு பகத்சிங்குடன் தூக்குமேடை ஏறிய தியாகி. பகத்சிங் ராஜ்குரு சுக்தேவ் என மூவர் பெயரும் பொதுவாக அனைவராலும் உச்சரிக்கப்படுகிறது. பகத்சிங் குறித்து - அவரது ஆளுமை குறித்து ஏராளம் பேசப்பட்டுள்ளது - எழுதப்பட்டுள்ளது – உணரவைக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் ராஜ்குரு, சுக்தேவ் குறித்து போதுமான அளவு பேசப்படவில்லை- எழுதப்படவில்லை.

பகத்சிங் ஆளுமை மேலானது என்பதில் சந்தேகமில்லை.  பகத்சிங்கில் அவர்களும் அடக்கம் என்பதுடன் நிற்காது அந்த ஆளுமைகளின் உருவாக்கம் மற்றும் உயரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் - அவர்களையும் தேடவேண்டும் என்ற எண்ணத்துடன் வெளிவந்தவை மிகக்குறைவே.  தமிழில் ராஜ்குரு குறித்தும், சுக்தேவ் குறித்தும் கொஞ்சமாவது எழுதிப்பார்க்கவேண்டும். பலதரப்புகளிலிருந்து வரலாற்றைத் தேடும் மாணவர்களுக்கு உதவியாக சில பக்கங்களாவது தரவேண்டும் என்ற முயற்சியால் ராஜ்குரு பற்றி படித்தறிந்த செய்திகள் சிறு பிரசுர வடிவில்  இங்கு தரப்பட்டுள்ளது.

புரட்சிகர இளைஞர்களாகிய அவர்களின் தேடல்- தெளிவு- விளையாட்டுத்தனம்- பொறுப்பான நகர்வுகள்- தேசபக்தி- தியாகம் செய்வதில் இருந்த போட்டி உணர்வு ஆகியவற்றை ராஜ்குருவின் வாழ்க்கை நிகழ்வுகளின் வழியே வெளிக்கொணர இப்பிரசுரத்தில் முயற்சிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தியாகம் மெச்சத்தகுந்தது. ஆனால் வழிமுறை விவாதத்திற்குரியது. அது ஒன்றே சரியான முன்மாதிரி என காட்ட முடியுமா- வன்முறை வழிப்பட்ட எதுவும் எதை இறுதி இலக்கு என வைக்கிறதோ அதை அடைந்தவுடன் ஒடுக்குமுறை கருவியாகாமல் இருக்குமா – அகிம்சை வழி ஏற்குமா  போன்றவை தீவிர விவாதத்திற்குரியவை. இங்கு ராஜ்குரு வாழ்க்கை அவர்களது தோழர்களுடன் இணைந்து பேசப்பட்டுள்ளது.

 2-2-2020                          ஆர்.பட்டாபிராமன்



முன்பு ’இளைஞர்களுக்கு பகத்சிங்’ மற்றும் ’பகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி’ என்கிற இரு நீள் கட்டுரைகளை எழுதி இணையத்தில்  வெளியிட்டிருந்தேன்.

 வி என் தத்தா அவர்கள் எழுதிய காந்தியும் பகத்சிங்கும் என்ற நூல் தோழர் அக்களூர் இரவியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஏராள விவரங்களுடன் வந்துள்ளது. சந்தியா வெளியிட்டுள்ளனர்.

மேற்கூறிய தமிழ் ஆக்கங்களுடன் ராஜ்குரு குறித்த இச்சிறு பிரசுரமும் சேர்கிறது. இணையத்தில் கீழ்கண்ட இணைப்பில் ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்.

https://archive.org/details/1converted_202002
            or
https://ia601405.us.archive.org/1/items/1converted_202002/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%811-converted.pdf



Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு