Skip to main content

பட்ஜெட் 2021-22 சில குறிப்புகள்

 

பட்ஜெட் 2021-22 சில குறிப்புகள்

பாரதிய ஜனதா கட்சியின் மோடி அவர்கள் ஆட்சி பட்ஜெட்டில் சில மாற்றங்களைக் கொணர்ந்தது. ரயில்வே தனி பட்ஜெட் நீக்கப்பட்டது. பிப்ரவரி 1 பட்ஜெட் எனத் தேதிமாற்றம் வந்தது. இம்முறை  paperless- digital budget  என்றனர்.



காங்கிரஸ் காலமானாலும் தற்போதுள்ள பா ஜ க காலமானாலும் போடப்படும் பட்ஜெட்டில்  ஒன்றுமேயில்லை என்பதும்-  சொர்க்கபுரிக்கு பட்ஜெட் ஏணிப்படி என்பதும் மிகைப்படுத்தப்பட்ட  statements   என்றே சொல்லலாம்.  எந்த பட்ஜெட்டிலும் ஆதரவாக பேசுவதற்கும் விமர்சனங்களுக்கும் இடம் இருக்கும்.

இந்த பட்ஜெட்டில் வருகிற 2021-22க்கான செலவினங்களுக்கு 35 லட்சம் கோடி (3483236) தேவை என முன்மொழிவுகளை நிதி அமைச்சர் வைத்துள்ளார். அமைச்சரவைவாரியாக, திட்டங்கள்வாரியாக, மாநில பகிர்வுகள் என  allocation  செய்யப்படுகிறது. உண்மையாக ஆகப்போகிற செலவு கூடலாம்- குறையலாம்.

 Allocation  எப்படி செய்யப்பட்டுள்ளது- யாருக்கு சாதகமானது- பாதகமானது என்கிற விவாதம் விமர்சனங்கள் இதைப்பொறுத்து எழுகின்றன. வருகிற மாதங்களில் செலவினம் எதில் வெட்டப்படுகிறது என்கிற நடைமுறை சார்ந்து விமர்சனங்கள் வரலாம்.  உதாரணமாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்றால் அதன் பயனாளிகள் அன்றாட உழைக்கும் மக்கள்- இதில் செய்யப்படும் நிதி ஒதுக்கிடு - உண்மையான செலவு என்பது எப்போதும் கூர்மையாக கவனிக்கப்பட்டு விவாதம்- விமர்சனங்களுக்கு இடமளிக்கும்.

 அரசாங்க ஊழியர் எனில் அவர்கள் ஊதியத்தின் பகுதியாக  ஊதிய அரிப்பைத் தடுக்கும் கிராக்கிப்படி நிறுத்தம்- செலவின வெட்டு என வரும்போது அது விமர்சனத்திற்கு உள்ளாகும். பாதுகாப்புத்துறை செலவினங்கள் கூடினாலும்- குறைந்தாலும் விவாதம் விமர்சனம் பெருகும். கொரோனா காலம் என்பதால் ஹெல்த் பட்ஜெட் ஒதுக்கீடுகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு அதில் விமர்சனங்கள் எழும். இதேபோல் கல்வி, ஊரக மேம்பாடு விஷயங்களை சொல்லலாம்.

இந்த 35 லட்சம் கோடி செலவிற்கு அரசாங்கம் வருவாயைப் பெறவேண்டும். அதற்கு வரியினங்கள், வரியற்ற இனங்கள் வருவாய், கடன் பெறுதல் ஆகியவற்றை  அரசாங்கம் நம்புகிறது. வருகிற ஆண்டில் ரிசிப்ட்ஸ் என்கிற வகையில் வருவாய் 20 லட்சம் கோடி (1976424) எதிர்பார்க்கப்படுகிறது. மீதி 15 லட்சம் கோடி (1506812)  Borrowings மூலம் என அறிவித்துள்ளனர். வருவாய் பற்றாக்குறையை ஜி டி பி யில் சொல்கின்றனர்.

வருவாய் என்பதற்காக  Finance Bill ல் வரி முன்மொழிவுகளை செய்கின்றனர். வருமான வரியில் மத்தியதர- மாதந்திர வருவாய் பிரிவினருக்கு மாற்றம் ஏதுமில்லை- ஏமாற்றம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. முக்கியமாக இம்முறை  Agri and infra dev cess  என பெட்ரோல் டீசலில் லிட்டருக்கு ரூ 2.50, ரூ 4 போட்டுள்ளனர். இதனால் சாதாரணமக்களுக்கு சுமை கூடியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்த உயர்விற்கு இணையாக எக்சைஸ் ட்யூட்டி வெட்டு இருப்பதால் சாதாரண மக்கள் செலவு கூடாது என்கிற பதில் அரசாங்க தரப்பில் தரப்பட்டுள்ளது.

கஸ்டம்ஸ் மாற்றம் காரணமாக மொபைல், பட்டு, பருத்தி, ஆட்டோ பகுதியில் விலை கூடலாம். நுகர்வோர் பாதிப்புக்குள்ளாகலாம்.

 கொள்கை முடிவுகளாக இன்ஸ்யூரன்ஸ் பகுதியில் அந்நியநேரடி மூலதனம் அனுமதி  49 % லிருந்து 74 % ஆக்கப்பட்டுள்ளது. 49 சதம் வந்தபோது காங்கிரசை பா ஜ க விமர்சித்தது. இந்த அரசின் முடிவு விமர்சனங்களுக்கு உள்ளாகும் -ஆர்ப்பாட்ட இயக்கங்கள் பெருகும்.

பங்குவிற்பனை என்பது பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் தீவிரத்தன்மை வெளிப்படும்போது விமர்சனக் கணைகள் அதிகரிக்கும். இவ்வாண்டில்  Air India, IDBI, Pawan hans பங்குவிற்பனை முற்றுறும் என தெரிவித்துள்ளனர். எல் அய் சியில் ஐ பி ஒ நடைபெறும். பொதுக்காப்பீட்டு நிறுவனம் ஒன்றும், இரு வங்கிகளும் தனியார்மயமாக்கப்படும். அரசாங்கம் பொதுத்துறையில்  startegic disinvestment policy  ஒன்றை வகுத்து ஏற்றுள்ளது. நான்கு துறைகள் தவிர பிற தனியார்மயம் நோக்கி அழைத்து செல்லும் கொள்கையாக அது இருக்கும் போன்ற அறிவிப்புகள் போராட்டங்களுக்கு இட்டுச் செல்லும். மாநிலங்கள் பங்குவிற்பனை செய்தால் அம்மாநிலங்கள்  incentivised  எனக் குறிப்பிட்டுள்ளனர்.  இதற்கு ஆசைப்படும் மாநிலங்கள் இந்த வலையில் சிக்கலாம்.

Labour and employment குறித்த அறிவிப்பு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மாநிலம் விட்டு வெளிமாநிலங்கள் சென்று பிழைப்போருக்கு ஏதுமில்லை என்பது விமர்சனம். அரசாங்கம் அவர்களுக்கு எங்கிருந்தாலும் செல்லத்தக்க ரேஷன்கார்டை அறிமுகப்படுத்தியுள்ளோம்.  GIG workers, construction workers  என அனைவரின் டேட்டாக்கள் உருவாக்கப்படும். ஹெல்த், ஹவுசிங், இன்ஸ்யூரன்ஸ் திட்டங்களில் அவர்கள் இணைக்கப்படுவர் என்கிற பதிலை தந்துள்ளது. இதில் உடனடி நிறைவு வராது.

கடுமையான குளிர் சூழலில் தலைநகர் வாயிலில் ( ஜனவரி 26 ஒரு பகுதியினரின் அத்துமீறல் நீங்கலாக) அமைதியாக நாட்கணக்கில் போராடிவரும் விவசாயிகள் பிரச்னை தீர்விற்கு அறிவிப்பு இல்லை என்பதும் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

 தேர்தல் என்பதால் குறிவைத்து தமிழ்நாடு, மே.வ, கேரளா மாநிலங்களில்  சாலைக் கட்டுமான திட்டங்களுக்கு ஒதுக்கீடு என விமர்சனம் எழுந்துள்ளது. அறிவிக்கப்பட்டவை தேர்தல் காலத்திற்கு பின்னர் வருகிறதா அமுலாகிறதா எனப் பார்த்தால்தான் உண்மையான நோக்கம் வெளிப்படும்.

சென்ற 20-21 பட்ஜெட்படி பார்க்கும்போது Large Ministries 13 மொத்தசெலவில் 53 சதம் எடுத்துக்கொள்கின்றன.  Top 15 schemes வருவாய் ஒதுக்கீட்டில் 13 சதம் எடுத்துக்கொள்கின்றன.  பாதுகாப்பு 4.71 லட்சம் கோடி, உள்துறை 1.67 லட்சம் கோடி, விவசாயம் 1.42 லட்சம் கோடி ( இதில் பி எம் கிசான் திட்டம் 75000 கோடி சேர்கிறது- ரூ 6000 திட்டம்), நுகர்வோர்- உணவு- பொது விநியோகத்துறைக்கு 1.22 லட்சம் கோடி ( இதில் உணவு மான்யம் தான் முக்கிய செலவினம்), ஊரகத்துறைக்கு 1.22 லட்சம் கோடி ( இதில்தான் வீடு, சாலை திட்டங்கள் வருகிறது. 50 சதம் மகாத்மா காந்தி வேலைத்திட்ட செலவாகிறது), ரயில்வே 2.25 லட்சம் கோடி ( இதில் ஊதியம்- பென்ஷன் செலவினம் 66 சதமாகிறது), மேலே சொல்லப்பட்ட அமைச்சர்துறைகள்தான் லட்சம் கோடிக்கு மேல் செலவினங்களை கொண்டவை. அதேபோல் 50 ஆயிரம் கோடிக்கு மேல் கொண்டவைகளாக மனிதவளம் 99 ஆயிரம் கோடி ( இதில் கல்வி, மதிய உணவு போன்றவை), சாலை போக்குவரத்து 91 ஆயிரம் கோடி, டெலிகாம் 66432 கோடி உள்ளிட்டவை வந்தன. இம்முறை ஹெல்த் அலோகேஷன் அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

வருவாய் செலவினங்களை விட இம்முறை மூலதன செலவினங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர். சென்றமுறையைவிட 29 சதம்  capital expenditure ஒதுக்கீடு கூடுதலாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பங்குவிற்பனையில் 2019-20ல் உண்மையில் பெற்றதைவிட 3.5  times இம்முறை ’இலக்கு நிர்ணயித்துள்ளது’ அடையமுடியாத ஒன்று என்கிற பார்வையும் தீவிர சீர்திருத்த ஆர்வலர்களால் வைக்கப்படுகிறது. வருமானவரி மூலம் 5.61 லட்சம் கோடி எதிர்பார்த்துள்ளனர். கார்ப்பரேட்வரி 5.47 லட்சம் கோடி என காட்டியுள்ளனர். இவையெல்லாம் அரசிற்கு வரவேண்டும். செலவினங்கள் வெட்டப்படாது என்பதற்கு எந்த அரசாங்கமும் உத்தரவாதம் தருவதில்லை.

பொருளாதார எண்களை அரசியல் பார்வையில் வைத்து எடைபோடும்போது பா ஜ க ஆதரவாளர்களால் நூற்றாண்டில் சிறந்த பட்ஜெட் போன்ற உச்ச புகழாரங்கள் செய்யப்படுகின்றன. பா ஜ க ஆட்சியை விமர்சிக்கும் அரசியல் வட்டாரங்களில் மோடியின் முதலாளித்துவ நண்பர்களுக்காக போடப்பட்டுள்ள பட்ஜெட் என்கிற கடும் விமர்சனங்களும் வருவதைக் காண்கிறோம். 2013ல் சிதம்பரம் போட்ட பட்ஜெட்டை அருண்ஜேட்லியும், சுஷ்மா சுவராஜ் அவர்களும் கடுமையாக விமர்சித்தனர். இந்த பட்ஜெட்டை சிதம்பரம் விமர்சித்துள்ளார்.. இரண்டு தரப்பிலும் போடப்பட்ட பட்ஜெட்களை முன்பும் சரி, இப்பொழுதும் முதலாளித்துவ ஆதரவு பட்ஜெட் என்றே இடதுசாரிகள்  விமர்சித்துள்ளனர்.

வளர்ச்சியை முன்வைத்து பட்ஜெட் என்கின்றனர். இதனால் வேலை வாய்ப்புகள் (முதலாளித்துவ வளர்ச்சிக்கு உகந்த சூழலில்- லேபர் சட்டங்கள் உட்பட்ட அம்சங்களில்)  உருவாக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. வளர்ச்சி பெருகினாலும் அசமத்துவம் வளர்வது தவிர்க்க முடியாதது என்பதும் பொதுவாக ஏற்கப்பட்டுள்ளது.

6-2-2021

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு