Skip to main content

ஆச்சார்ய கிருபளானி ( சிறு வெளியீடு இணைப்பில்)

 




https://ia801608.us.archive.org/34/items/kripalani-jb/kripalani%20jb.pdf

ஆச்சார்ய கிருபளானி  (  சிறு வெளியீடு இணைப்பில்)


நவீன இந்தியாவின் அரசியல் விவாத களத்தில் கிருபளானி குறிப்பிடத்தகுந்த பங்காற்றியவர் . ஆழமான அறிவு மற்றும் அனுபவங்களின்பாற்பட்டு கருத்துக்களை ஒளிவு மறைவின்றி எடுத்துவைத்தவர். பல சோசலிஸ்ட் தலைவர்கள் போலவே மார்க்சியம்- காந்தியம் குறித்த உரையாடல்களில் ஆழத்தோய்ந்தவர்.


விடுதலை இந்தியாவில் எதிர்கட்சி தலைவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் ஆச்சார்யா கிருபளானி . காங்கிரசில் இருந்தபோதும், பிரஜா சோசலிஸ்ட் தலைமையில் ஆனாலும் கட்சியின் கொள்கைகளை அப்படியே பிசகின்றி பின்பற்றும் மனோபாவம் கொண்டவராக கிருபளானி தன் அரசியலை அமைத்துக்கொள்ளவில்லை. தவறு என்று தான் உணரும் ஒன்றுடன் சேர்ந்து உழைப்பதில்லை என்கிற காந்திய மனோபாவம் அவரிடம் இருந்தது.

இந்த சிறு வெளியீடு இரு நீள் கட்டுரைகளை தாங்கி வருகிறது.  நவீன இந்தியாவின் கட்டுமானத்திற்கு ஏதோவொரு வகையில் பங்களித்த பல பெரியவர்கள் குறித்து மிகச் சுருக்கமாகவாவது தெரிந்துகொண்டு  அதை எழுதிப்பார்க்கவேண்டும் என்ற அவஸ்தையில் பலர் குறித்து நவீன இந்தியாவின் பன்முகக் குரல்கள் என்ற வெளியீட்டைக் கொண்டுவந்தேன். எவரும் அதை தரவிறக்கம் செய்து வாசித்துக்கொள்ளலாம். அதில் ஒரு கட்டுரை கிருபளானி குறித்த சில குறிப்புகளாக அமைந்தது.


 விடுதலைக்காலம்வரை காந்தி- நேரு- படேல்- பிரசாத் என மிக முக்கியமானவர்களுடன் இணைந்து பயணித்தவர் கிருபளானி. இணைந்து எனச் சொன்னால் உராய்வே இல்லை எனச் சொல்ல முடியாது. உராய்வுடன் உறவாடி பயணித்தவர். சிந்துவில் பிறந்து வளர்ந்து, அப்பகுதி பாகிஸ்தான் சென்ற பின்னரும் ஒன்றாக இருந்தபோதும், பிற இந்தியப் பகுதிகளில் ஊரைவிட்டு வெளிவந்து விடுதலைக்கால நிகழ்வுகளில் போராட்டங்களில் ஈடுபட்டவர் கிருபளானி.

விடுதலைக்குப் பின்னரான காலத்தில் நேருவுடன் சிக்கல் ஏற்பட்டது. வெளியேறி தனிக்கட்சி உருவாக்கியவர். ஜேபி- லோகியா போன்ற சோசலிஸ்ட்களுடன் கட்சிப் பணியாற்றியவர். தனி அங்கீகாரம் என அவர் வாழ்வில் பெற்றாலும் அரசியலில் பெரும் வெற்றியைக் காணாமல் – தொடர்ந்து இந்திய அரசியல் நினைவில் ’காணாமல் போனவர்களில்’ ஒருவர். 


அவரின் ’எனது காலம்’ பிரம்மாண்டமான நூல். இக்காலத்தில் போதிய கவனம் பெறாத நூல். அதை வாசித்த போது முகநூலில் அவ்வப்போது சில இடுகைகளை செய்தேன். இரண்டாவது கட்டுரை அந்த இடுகைகளின் சுருக்கமான தொகுப்பாக இங்கு இடம் பெற்றுள்ளது.

இரு கட்டுரைகளும் ஓரளவிற்கு கிருபளானியை அறிமுகப்படுத்தும் - அர்த்தப்படுத்தும் எனக் 

கருதுகிறேன்.


7-10-2022 - ஆர். பட்டாபிராமன்






https://ia801608.us.archive.org/34/items/kripalani-jb/kripalani%20jb.pdf

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு