Skip to main content

மறைமலை அடிகள் நாட்குறிப்பிலிருந்து

 


மறைமலையடிகளார் நாட்குறிப்புகளிலிருந்து..

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள் அவரது மகன் வித்துவான் மறை. திருநாவுக்கரசு அவர்களால் தொகுக்கப்பட்ட ஒன்று. சிறு நூலாக கொணர்ந்துள்ளனர். .இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த இந்நூல் 1988ல் வந்தது. 1898-1950 காலத்திற்கான  சில குறிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

அடிகளார் அவர்கள் தனது குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதியிருந்தாராம். காரணம்  ஏன் எனத்தெரியவில்லை. இளம் வயது முதலே ஏராள ஆங்கில நூல்களை வாசித்தவராகவும், தனது கருத்துக்களை ஆங்கிலம் வழியாகவும் தந்தவராகவும் அடிகளை நாம் பார்க்கமுடியும்.

ஏறத்தாழ 50 ஆண்டுகள் கால இடைவெளியுடன் கூடிய  இக்குறிப்புகள் 1000 பக்கங்கள் அளவிலானவையாம். அதில் சிலவற்றை தேர்ந்து இங்கு தொகுத்து பதிப்பித்துள்ளனர்.

இக்குறிப்புகள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல, அன்றைய காலத்து தவிப்புகொண்ட மனதின் தேடல்களுக்கான வரலாறும் கூட. அவர்கள் தமிழ் புலமையில், ஆங்கில மற்றும் வடமொழி அறிவில் மட்டுமல்லாது, நாட்டுப்பற்று, நிகழும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து தம்மளவில் வினையாற்றுதலாகவும் இருந்துள்ளனர். தம் காலத்தில் பல துறைகளில் புகழ் வாய்ந்தவர்களுடன் தொடர்பில் இருத்தல், அவர்களிடமிருந்து கற்க தயாராக இருத்தல், அதே நேரத்தில் அவர்களுடன் முரண்பட்டால் அதை வெளித்தெரிய மரியாதையுடன் சொல்லுதல் போன்ற பண்புநலன்களையும் இந்தக் குறிப்புகள் நமக்குக் காட்டுகின்றன.

அப்போது இருந்த தமிழ் அறிஞர்கள்  பலரும் அவரை சந்தித்த நூல்கள், கொடுத்து வாங்கிக்கொண்ட செய்திகள் பதியப்பெற்றுள்ளன. காந்தியுடன் உடன்பாடின்மை, பெரியாருடன் பிணக்கு, நேயம் சொல்லப்பட்டுள்ளது. காந்தி சுடப்பட்ட மறுநாள் சென்னையில் இரயில் ஓடாமை, என்ன நேருமோ என்கிற கவலையைக் காண்கிறோம். காந்திக்கு முன்னவர்களான திலகர், பிபின் பால், சுரேந்திர பானர்ஜி, தாகூர், பெசண்ட் பற்றியும் குறிப்புகள் உள்ளன.

ரூ 90 க்கு பல்லாவரத்தில் அவரால் வீட்டு மனை வாங்க முடிந்துள்ளது. மகன், மகள் குறித்த செய்திகள்- மகன் காங்கிரஸ் இயக்க ஈர்ப்பை தடுத்த செய்தி, பிராமணர் அல்லாத இயக்கத்தில் அடிகளார் ஆர்வமுடன் இருந்தமை, இந்தி எதிர்ப்பில் முன் நின்றமை குறிப்பாக எழுதப்பட்டுள்ளன.

ரூ 30 ஊதியம் வாங்கும் காலத்தில் தன் தாகம் காரணமாக ரூ 11க்கு புத்தகம் அடிகளார் வாங்கியதைக் காண்கிறோம். இப்படிச் செய்தால் வீட்டில் எவராவது முகமா கொடுத்திருப்பார்கள்? பாரதிதாசன் விழாவிற்கு வர மறுத்துள்ளார் அடிகள். பாரதியார் பற்றி இக்குறிப்புகளில் ஒரு வரியைக் கூட என்னால் பார்க்கமுடியவில்லை. ஏன் எனத்தெரியவில்லை.

என் போன்ற வாசகர் வசதிக்காக 4 பகுதிகளாக இக்குறிப்புகளில் சிலவற்றை மட்டும் எடுத்து தந்துள்ளேன். என் நோக்கில் அவை எடுக்கப்பட்டுள்ளன. நூலை முழுமையாக படிக்க முடியாதவர்க்கு இந்த சிறு பிரசுரம் உதவலாம். வாசித்துப் பாருங்கள்..

21-7-2023                                           - ஆர். பட்டாபிராமன்


https://ia902704.us.archive.org/24/items/1_20230722_20230722_0529/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%201.pdf

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு