Skip to main content

CAD Document vol 7 Debate on UCC சீரான உரிமையியல் சட்டம்

 CAD Document vol 7     Debate on UCC 

அரசியல் அமைப்பு சட்ட அசெம்பிளியில் சீரான உரிமையியல் சட்டம் குறித்து நவம்பர் 23, 1948ல் நடந்த விவாதம் இங்கு தரப்பட்டுள்ளது. அப்போது அந்த ஷரத்து 1948 நகலில் 35 ஆக இருந்தது. அரசியல் அமைப்பு சட்டம் ஏற்பிற்கு பின்னர் அது இன்றுவரை ஷரத்து 44 ஆக இருந்து வருகிறது. 

அவையை துணைத்தலைவர் டாக்டர் எச் சி முகர்ஜி வழிநடத்தினார். இந்த விவாதத்தில் அவையில் இருந்த முஸ்லீம் உறுப்பினர்கள் பங்கேற்று திருத்தங்களை கொடுத்து தங்கள் அய்யப்பாடுகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். தனிச்சட்டத்திற்கு பாதிப்பு வந்துவிடுமோ என்கிற சந்தேகம் அவர்களிடம் இருந்தது.

முகம்மது இஸ்மாயில் கான், நசிருதின்  அகமது, மகபூப் அலி பைக், தெல்லிச்சேரி போக்கர், ஹீசைன் இமாம் போன்றவர்கள் திருத்தங்களை கொடுத்து விவாதித்தனர்.  ஆர்ட்டிகல் 35 ஏற்கப்படவேண்டும் என அனந்தசயனம் அய்யங்கார், எல் கிருஷ்ணசாமி பாரதி, கே எம் முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ஆகியோர் விவாதித்தனர். கிருஷ்ணசாமி பாரதி நாவலர் சோசசுந்தரபாரதியின் மகள் லட்சுமி பாரதியை மணந்தவர்.

திருத்தங்களை ஏற்கவியலாது என விளக்கமளித்து அம்பேத்கர் விவாதத்திற்கு பதில் அளித்தார். அம்பேத்கர் அவர்களின் விளக்கத்தையடுத்து துணைத்தலைவர் முகர்ஜி அவர்கள் திருத்தங்கள் ஏற்கப்படவில்லை என்பதுடன் அந்த 35 ஷரத்து அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்கப்பட்டு இடம்பெற்றதாக அறிவித்தார். இந்த விவாதங்கள் இங்கு அப்படியே சிறு பிரசுரமாக தரப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர் வாசித்து புரிந்து கொள்ளலாம்.

7-7-2023    


click the link to read the DOC

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு