Skip to main content

Glimpses of World History

 இந்திராவிற்கு நேரு தன் சிறைவாழ்வில் எழுதிய உலக வரலாறு குறித்த கடிதங்களின் தொகுப்பு Glimpses of World History வந்து 90 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்திரா ஆட்சிக்காலத்தில் 1982ல் மீள் பதிப்பும், சோனியா முன்னுரையுடன் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே தொகுதியாக 1100 பக்கங்களில் நேருவின் அப்புத்தகம் வந்துள்ளது.

பெங்குவின் ரூ 900க்கு இப்பெரும் புத்தகத்தை அப்போது போட்டிருந்தனர். இப்போது கூட கிடைக்கலாம். விடுதலைக்கு முன்னரான நேருவின் மூன்று மிக முக்கிய புத்தகங்களில் Glimpses of world History ம் ஒன்று. மற்ற இரண்டு Autobiography, Discovery of India.
நேருவின் historiography வரலாற்றைப் புரிதலும் அதை முன்வைத்தலும் விரிவான வாசிப்பிற்குரிய ஒன்றாகவே எனக்குப்படுகிறது. அவர் நடந்த வரலாற்று நிகழ்வுகளை வெறும் மோதல் பாதைக்கான நிகழ் களமாக மாற்றிவிடாமல், பொருத்தமான இணைக்கத்தேர்வுகளை, composite culture காரணிகளை தேட முயற்சிப்பவராக இருப்பதைக் காணமுடியும்.
இந்திய பண்டைய வரலாறாக இருந்தாலும், உலக நாடுகளின் வரலாறுகளாக இருந்தாலும் எதுவும் still civilisation or stagnated ஒன்றாக இருக்கவில்லை என்ற புரிதலை அவர் மனம் கொள்கிறார். மானுட வரலாற்றின் நீள் திசையின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளை நொடிதோறும் எவரும் உள்ளது உள்ளபடி எழுதி வைத்திருக்கவும் முடியாது. பேசி சென்றிருக்கவும் முடியாது. கிடைத்தவற்றை ஏ எல் பாசம் சொல்வது போல controlled imagination யைத் தூவித்தான் வரலாறு அதை பிரதியாக்குபவர்களால் நமக்கு கைமாற்றித் தரப்படுகிறது.
முழுமையான இருட்டில் துழாவுதற்குப் பதில் ஆங்காங்கே கிடைக்கும் சிறு கைவிளக்குகளாக இந்த history யை narrativeயை எடுத்துக்கொள்வது நலம். அதை முடிந்தவரை பகுத்தறிவின் எல்லைக்குள் வைத்திருப்பதும் நலம். அதை வழிபாட்டு நம்பிக்கை பல்லக்கில் வைத்து திருப்பணிகள் நடத்துவதும், அதையே நம்பி பழிதீர்த்துக்கொள்ளும் கள விளையாட்டுக்களை நடத்துவதும் வரலாற்றை துப்பாக்கியாக்கும் முயற்சியாகிவிடும்.
வரலாற்றை எழுதும்போது விடுபடல்கள் எவருக்கும் நேரலாம். அது conscious or unconscious attempt ஆக இருந்திருக்கலாம். அதை நேர்செய்தல் வேறுவகைப்பட்ட வரலாற்றாய்வாளர்க்கு அவசியமாகலாம். விடுபடல்களைச் சொல்வது, சொன்னதில் தரவுகளின்படி தவறு இருந்தால் அதைச் சுட்டி சரிசெய்வது , ஹிஸ்டோரியாகிராபி குறித்த ஆரோக்கியமான முறையாகலாம். தேவைப்படும் அரசியலுக்கேற்ப வரலாற்றை தைப்பது என்பது அரசியலுக்கும் வரலாற்றிற்குமே ஆபத்தாகலாம்.
நேரு சிறையில் தனக்கு கிடைத்த எச் ஜி வெல்ஸ் உள்ளிட்டவர் எழுத்துக்களைக்கொண்டு , கடித வழி இலக்கியமாக உலக வரலாற்றை இந்திரா எனும் மகள் மாணவிக்கு சொல்ல முயன்றுள்ளார். 196 கடிதங்கள்..சில இடங்களில் மட்டுமே அன்பை வெளிப்படுத்தும் personal touch மிகக் குறைந்த வரிகளாக ஏக்கத்துடன் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். எடுத்துக்கொண்ட task ல் கவனமாக நேரு travel செய்திருப்பார். அய்ரோப்பா, ஆசியா நாடுகளின் முன்னோடி நாகரிகப் பகுதிகள் குறித்து - கிரீஸ் ரோம் இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி, இந்தியா சீனா ஜப்பான் அராபியா, பின்னர் வந்த அமெரிக்கா குறித்து ஏராள செய்திகளை அவற்றின் வரலாற்று போக்கில் நேரு தந்திருப்பார்.
வரலாறு என்கிறபோது சுவாரஸ்யமான, சற்று தொய்வு ஏற்படுத்தும் எழுத்துக்கள் கலந்தே இருக்கும். நேருவின் இந்த புத்தகமும் அதற்கு விதிவிலக்கு என சொல்லமுடியாது. முதல் 600 பக்கங்களுக்கு மேல் அவர் நன்கறிந்த உணர்ந்த 19- 20 ஆம் நூற்றாண்டின் வரலாற்று கதைகள் பின்னப்பட்டிருக்கும்.
வரலாற்றில் ஆர்வம் இருந்தவர், நேரு அபிமானிகள் என பலரும், நேரு வெறுப்பாளர்களில் சிலரும் இந்நூலை படித்திருப்பர். இக்கால இளைஞர்களுக்கும் சற்று எளிய வகையில் ஒரே நூலில் உலக வரலாற்றின் சில வெளிச்சப்புள்ளிகளை அல்லது தொடுகோடுகளை இந்நூல் 20 ஆம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகள்வரை காட்டும்.
வாய்ப்புள்ளவர் சற்று மல்லுக்கட்டினால் இந்நூலை வாசிக்க இயலும் என்று நம்புகிறேன்.
20-2-2024

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு