Skip to main content

நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள்

                  தோழர் பட்டாபியின் புதிய புத்தகம்- கட்டுரைத்தொகுப்பு
நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள்

படிக்க சொடுக்குக: https://archive.org/details/converted_20190630

ஆசிரியர் விழைவு
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆளுமைகள் வெவ்வேறு இடங்களில் பிறந்து வளர்ந்தவர்கள்அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சி, மேற்கு கல்வி, ஆண்ட இஸ்லாம்-  கிறிஸ்துவம் என்ற பொதுச்சூழலில் வளர்ந்தவர்கள். இந்துமதத்தின் நிறைகுறைகளை அறிந்து அதன் பின்னணியில் வளர்ந்தவர்கள்சிலர் இந்திய பண்பாடு  என்பதை மேற்கு பண்பாட்டிற்கு இளைத்த ஒன்றல்ல என  நிறுவ முயன்றவர்கள்ஆங்கிலக்கல்வி, மேற்குலக பயணங்களால் தங்கள் சிந்தனையை கூர்தீட்டிக்கொண்டவர்கள். இந்திய விடுதலை என்கிற கனவை சுமந்தவர்கள். அய்ரோப்பிய தத்துவ பலத்திற்கு முன்னால் கையைக்கட்டிக்கொண்டு நிற்காமல் தங்கள் சிந்தனையை உலகறிய செய்யவேண்டும் என தவிப்புகொண்டவர்கள். இந்தியாவின்கடைக்கோடி மனிதனுக்கும் வாழ்க்கை’ என்கிற பேரவா அவர்களை துரத்தி செயல்பட  வைத்தது.  அவர்கள் தவறே செய்யாதவர்களாக இருந்திருக்க முடியாது. விமர்சனத்திற்கு ஆளாகாமல் செயல்பட்டிருக்க முடியாது.  அவமதிப்புக்களைக்கூட அவர்கள் தாங்கி பல வாய்ப்புக்களில் பிரகாசித்தவர்கள்.
நவீனகால இந்தியாவை கட்டுவதில் இவர்களது சிந்தனை செயல்களுக்கு பெரும் பங்கிருக்கிறது. இவர்களின்  மண்சார்ந்த ஞானம்  அவர்களது ஆக்கங்களை படிக்கும்போது நம்மை பிரமிக்க செய்கிறது. தாகூரும், விவேகானந்தரும், ராதாகிருஷ்ணனும் நம்மை மட்டுமல்ல உலகை வியக்க வைத்தவர்கள். சாளரமாக இருந்தவர்கள். லாலாஜி, பிபின், ராஜாஜி, கிருபளானி , நரேந்திரதேவா குறித்தும்   முன்கூட்டி நிற்கும் அனுமானங்கள் (prejudice)  எதிலும் ஆட்பட்டுக்கொள்ளாமல் அவர்கள் ஆக்கங்களை படித்து அதன்மூலம் அவர்கள் இக்கட்டுரைகளில் பேசப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் பற்றி உணரப்பட்ட உன்னத சிறப்புகள், விமர்சனங்கள் அப்படியே கொடுக்கப்படுகின்றன.
இந்தியாவில் இன்று நிலவும் அரசியல்    சூழலில் இப்பெரியவர்களின் எவரையும் விலக்கி ஒதுக்கா ஞானம் (wisdom of Inclusiveness) இளம் தலைமுறைக்கு சென்று சேர வேண்டும் என்பதே கட்டுரை ஆசிரியரின் விழைவு. அவர்கள் சிந்தனையின் உன்னதங்கள் நின்று நிலைபெறட்டும். வழக்கொழிந்தவைகள் மங்கி மறையட்டும்.
21-1-18                                        - ஆர். பட்டாபிராமன்

பதிவிறக்கம் செய்திட:
https://ia601503.us.archive.org/33/items/converted_20190630/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-converted.pdf

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு