Skip to main content

லெனின் நான்கு கட்டுரைகள்(Lenin Four Essays)

 

லெனின் நான்கு கட்டுரைகள்(Lenin Four Essays)

இந்த சிறு மின் பிரசுரத்தில் லெனின் குறித்த நான்கு கட்டுரைகளை இடம்பெற செய்துள்ளேன். விடுதலைப் போராட்டக்காலத்தில் பல போராளிகளுக்கும் லெனின் இந்தியாவில்  எந்த அளவு ஆதர்ஷ வீரராக இருந்தார் என்பதை படம்பிடிக்கும் கட்டுரையாகவிடுதலைக்கு முன்னர் இந்தியாவில் லெனின் என்ற கட்டுரை அமைந்திருக்கும். இக்கட்டுரை இணைய தளங்களிலும் ஜனசக்தி மலரிலும் இடம் பெற்ற கட்டுரைதான்.



அடுத்த கட்டுரை லெனின் ஆட்சிக்கு வந்த பின்னர் என்பது பற்றிப் பேசும் கட்டுரை. புரட்சியை நடத்துவது  அதற்கு மக்களை இசைய வைப்பது என்பது எளிதான செயல் அல்ல என்றால் அப்படி புரட்சி நடந்து ஆட்சி பொறுப்பை ஏற்று அவர்கள் முன்மொழிந்த சமூக கட்டுமானத்தை செய்வது அதைவிட மிகக் கடுமையான பல சறுக்கல்களை சந்திக்கும் செயல்களாக அமைவதற்கும் வாய்ப்புண்டு என்பதை என்னால்  வெகு ஆண்டுகளுக்கு பின்னரே உணரமுடிந்தது. லெனின் ஆட்சி எப்படி இருந்தது என கொஞ்சம் தேடிப்பார்த்ததில் என் வாசிப்பிற்குள் வந்த அம்சங்களை இக்கட்டுரையில் தந்துள்ளேன்.  நேருவும் ஆட்சிக்கு வந்தவுடன் அவரிடம் கேள்வி கேட்ட போராளிகளிடம் then I was an agitator, now administrator  என பதில் சொன்னதும் நினைவிற்கு வருகிறது.

அடுத்த கட்டுரை தோழர் காந்தி என்பதற்காக எழுதப்பட்ட பல கட்டுரைகளில் ஒன்று. லெனினும் காந்தியும் என்பது. இது எளிய ஒப்பீடுதான். ஆனாலும் ஆரம்ப நிலை தோழர்களுக்கு சற்றாவது உதவும் மதிப்பீடாக இருக்கும். தோழர் டாங்கேவும் ரெனோ அவர்களும் இந்த ஒப்பீட்டை எந்த கோணங்களில் முன்வைத்தனர் என இக்கட்டுரை பேசுகிறது.  நான்காவது லெனின் சகோதரிக்கும் துணையாருக்கும் எழுதிய கடிதங்கள் எப்படி  அமைந்தன என்பது பற்றியதாக இருக்கும்.

லெனின் குறித்து ஏராள புத்தகங்கள்  கிடைக்கின்ற சூழலில் இந்த சிறு வெளியீடு அவர் குறித்து எழுதிப்பார்க்கவேண்டும் என்ற ஆர்வ உந்துதலால்  வந்துள்ளது என சொல்லலாம். எவருக்காவது பலனளிக்கும் என்றால் அதுவே எனக்கான வெகுமதி

 

டிசம்பர் 4, 2021                                              - ஆர். பட்டாபிராமன்

நூலைப்படிக்க  https://freetamilebooks.com/ebooks/lenin_four_essays/

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு