https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, October 15, 2020

வட்டமேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் சிறுவெளியீடு

                                   வட்டமேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர்

சிறுவெளியீடு  

கீழ்கண்ட இணைப்பில் பார்க்கமுடியும்

https://ia601407.us.archive.org/25/items/web_20201015/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8Dweb.pdf

முன்குறிப்பு

அம்பேத்கர் குறித்த புத்தகம் ஒன்றிற்காக எழுதப்பட்ட கட்டுரைகளில் இதுவும் ஒன்று. சிறுபிரசுர மின்வடிவம் பெறுகிறது. வட்டமேசை மாநாட்டு விவாதங்களில் அம்பேத்கரின் மேதாவிலாசம்- அறிவுக்கூர்மை எவ்வாறு வெளிப்பட்டது என்பதை இந்த விவாதங்கள் தெளிவுபடுத்தும். இன்று ஒடுக்கப்பட்டோர் சிறிய அளவாவது பெற்றுள்ள அரசியல் அதிகார பகிர்வு, நிர்வாக அதிகார பகிர்வுகளுக்கு அம்பேத்கர் எவ்வளவு கடுமையான பணியை மேற்கொள்ளவேண்டியிருந்தது என்பதை இந்த விவாதங்கள் புலப்படுத்தும். ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டு விரவிக்கிடக்கும் விவாதங்களை படிக்க முடியாதவர்களுக்கு இச்சிறு பிரசுரம் துணையாக இருக்கலாம். முழுமையான விவாதங்களை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தலாம்.

அம்பேத்கர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதை புதிய யுகம் என வர்ணித்தார். பல உரைகளில் எவரையும் கடவுளாக்காதீர்- என்னையும் கடவுளாக்காதீர் என்றார். எந்த தலைமையின் மீதும் வழிபாட்டுணர்வு அவசியமில்லை என்றார். விடுதலை அரசியல் உரிமைகளில் இருக்கிறதே தவிர யாத்திரைகளில் இல்லை. சொந்தக் கால்களில் கடமையுணர்ச்சியுடன் நிற்க கற்பீர் என்பதை அவர் அறிவுறுத்திவந்தார்.

சட்டமியற்றும் அதிகாரம் என்பதே அவர் விவாதத்தின் சாரம் என சொல்லமுடியும். முதலாவது வட்டமேசை மநாடு, இரண்டாம் மாநாடு, அரசியல் சட்ட சீர்திருத்த இணைந்த குழுவின் சார்பில் சாட்சியங்களை பெறுதல்- சர்ச்சில் உட்பட பலரிடம் குறுக்கு விசாரணை  போன்றவை இச்சிறு பிரசுரத்தில் சுருக்கமாக இடம் பெற்றுள்ளது. அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோர் மாநாட்டில் பேசிய உரை, காந்தி- அம்பேத்கர் இடையே சிறுபான்மை குழுவில் நடந்த விவாதம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இப்பிரசுரம்  உணர்த்தலாம்.

புனே உடன்பாடு குறித்து ஏராளம் எழுதப்பட்டிருக்கிறது. அது குறித்த சாட்சிய விசாரணைகளில் வந்த கருத்துக்களில் சில இங்கு வைக்கப்பட்டுள்ளன. தாகூர் உட்பட சர்ச்சையில் வருகிறார். இந்து மகாசபை புனே உடன்பாட்டிற்கு எதிராக நின்றதா என்பது விசாரணைக்கு உட்படுகிறது. மத்திய மாநில அரசுகளின் உறவுகள் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலில் இன்றும் தொடரும் பல்வேறு சர்ச்சைகள் குறித்த நீள் விவாதமாக வட்டமேசை விவாதங்களை பார்க்கமுடியும்.

15-10-2020                                              ஆர். பட்டாபிராமன்


No comments:

Post a Comment