Skip to main content
பிபின் சந்திரபால் (1858-1932) காந்திக்கு முன்னரான முப்பெரும் இணைத்லைவர்கள் லால்-பால்-பால் வரிசையில் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடியவர். தேசிய சிந்தனையை கட்டியமைத்த வீரத்தலைவர். புரட்சிகர கருத்துக்களின் தந்தை என அவர் காலத்திலேயே பெயர் பெற்றவர். ஆங்கிலேயே கல்வி மட்டுமல்லாது பெர்ஷிய- சமஸ்கிருத பின்புலமும் நிறைந்தவர்..படிப்பாளி- பேச்சாளர்- எழுத்தாளர்- பத்திரிகைவாதி- கல்வியாளர். ”அய்ரோப்பிய சிந்தனை மேம்பட்டது- இந்திய சிந்தனை முறை தாழ்ந்தது - இந்தியாவிற்கென வரலாறு ஏதுமில்லை- காட்டுமிராண்டி நாகரிகத்துடன் மிருகங்களை வணங்குபவர் என்ற எழுத்து முறைகளுக்கு எதிராக” அப்போதிருந்த தேசியத் தலைவர்கள் போராடவேண்டியிருந்தது.பிபின் அதனை விரிவாக செய்தார். இந்தியாவின் தொனமையை பேசினார். இந்து கலாச்சாரத்தின் மேலான சிந்தனைமுறையை எடுத்து விளக்கினார். ஆனால் இன்றுள்ள இந்துத்துவ வாதிகள் முறையைப் போன்று பிறறை தாக்கி அழிப்பது என்ற வகையில் இல்லாமல் நமது மேம்பட்ட மரபை பிரிட்டிஷ்காரர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அவர் 1911ல் எழுதிய புத்தகம் The Soul Of India-இந்தியாவின் ஆன்மா. பிரிட்டிஷ் குழந்தைகளுக்கு அன்புடன் விளித்து எழுதப்பட்ட கடித நடை. இந்திய தத்துவ மரபும்- சிந்தனை முறையும் விவாதிக்கப்படுகின்றன. பொதுவாக ஆரியமேன்மை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய தாக்கம் குறித்தும் அதே நேரத்தில் இரண்டும் சமவாழ்வு வாழ்ந்து வந்த நிலையும் விவரிக்கப்படுகின்றன. புத்தமதம் விவாதிக்கப்படுகிறது. அய்ரோப்பிய சிந்தனமுறைக்கும் இந்து சிந்தனைமுறைக்கும் உள்ள வேறுபாடு பெருமளவில் விவாதிக்கப்படுகிறது. தேக-மன-புத்தி சுத்தம் பேசப்படுகிறது நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க பத்திரிகைகள், பிரிட்டிஷ் பத்திரிகைகள், ஏராள அறிவியல் நூல்கள் எல்லாவற்றையும் பிபின் பெற்று படித்து உள்வாங்கி பிரிட்டிஷாருடன் கூர்மையான விவாதம் நடத்தியிருக்கிறார். தேசபக்தி, அறிவியல் பார்வை , அடுத்தவரை புண்படுத்தாத மதபக்தி , சுய கலாச்சார பெருமிதம், பொருளாதர அறிவு பிரமிக்க வைக்கிறது. 
The Soul Of India வில் நடை பல இடங்களில் poetic ஆக- அவரின் பெரும் மேதாவிலாசத்தை காட்டுவதாக அமைந்துள்ளது. அவரின் இந்திய வரலாற்று அறிவு குறித்த விமர்சனத்தை ரொமிலா தாப்பர், இர்பான் போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்களா என எனக்கு தெரியவில்லை. வைஷ்ணவ நண்பர்களுக்கு மிக இதமான புத்தகமாக இருக்கும் ராதையும்- கிருஷ்ணனும் கொண்டாடப்படுகிறார்கள். விலையும் ரூ150க்குள்தான் இருக்கும்

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு