Skip to main content
ஆனந்த் டெல்டும்டே எழுதிய Anti Imperilaism and Caste Annihilation 2005ல் வெளியானது. அப்புத்தகம்  தோழர் எஸ் வி ராஜதுரை மொழியாக்கத்தில் தமிழில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்’ என 2009ல் விடியல் பதிப்பகத்தால் கொணரப்பட்டுள்ளது. டெல்டும்டே  அம்பேத்காரிய மார்க்சிய அறிஞர். IITயில் பணிபுரிபவர். அம்பேத்கார் பேரன் என்ற அடையாளத்தைவிட தனது சுய சிந்தனை செயல் அடையாளங்களுடன்  திகழ்ந்து வருபவர். தலித்-மார்க்சிய இயக்கங்களின் போதாமையை தொடர்ந்து நட்புடன் விமர்சித்து வருபவர் . இரு இயக்க ஒத்திசைவிற்கு கருத்துக்களை முன்வைத்துவருகிறார். சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக களப்பணியாற்றி வருகிறார்.

 இப்புத்தகம் 260 பக்கங்களே ஆனாலும் மிகுந்த கவனத்துடன் படிக்கவேண்டிய புத்தகம். தலித்- மார்க்சிய இயக்கஙகளுக்களின் நடைமுறை- சித்தாந்த உரையாடல் நிரம்ப இடம் பெற்றுள்ள புத்த்கம். 10 பகுதிகளையும் ஒருவரால் படிக்க முடியாமல் போனாலும் Ch 2. சாதிதான் பிரச்சனை, 3. சாதி பற்றிய இடதுசாரிகள் புரிதல், 7. சாதியும் வர்க்கமும்  9. செய்யவேண்டியதென்ன போன்ற நீள் கட்டுரைகள் தலித் மற்றும் மார்க்சிய இயக்கத்தார்கள் படித்து விவாதிக்க வேண்டிய பகுதிகளாக எனக்குப் படுகிறதுஇடதுசாரிகள் மீதான அம்பேத்காரியர்கள்- தலித் இயக்கங்கள் வைக்ககூடிய அனைத்து விமர்சனங்களும் இருந்தாலும், தலித்களின் விடுதலை இடதுசாரி இயக்கங்கள் இல்லாமல் இல்லை என்ற பார்வையை இப்புத்தகத்தில் டெல்டும்டே அழுத்தமாக வைக்கிறார். தலித் இயக்கங்கங்கள் மீதான விமர்சனத்தையும் அவர் மட்டுப்படுத்தவில்லை. மிக நேர்மையான சாதி ஒழிப்பு போராட்டத்திற்கு அவ்சியமென கருதப்படும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சாதி வெளிப்பாடுகளான வன்கொடுமைகள், பாரபட்சம், இல்லாமைக்கெதிரான போராட்டங்கள் ஆகியவற்றை முன் நிறுத்துகிறார் டெல்டும்டே.. 80 ஆண்டுகளுக்கு மேலாகியும் தலித் இயக்கங்களுக்கு மேலாக இடதுசாரி இயக்கங்கங்கள் இல்லை- பிளவுபட்டுக்கொண்டே இருக்கின்றன. அதேபோல் கம்யூனிச இயக்கங்கங்கள் தற்போது கற்றுவரும் பாடத்திற்கு இணையான பாடங்களை தலித் இயக்கங்கங்கள் கற்பதாக தெரியவில்லை என கவலையுடன் விமர்சன பார்வையை நகர்த்துகிறார். நேற்று 14-10-2016 சம்பத் அவர்கள் ஆங்கில இந்து நாளிதழிலும் ஜெய்பீம் லால் சலாம் ஓத்திசைவு இயக்கங்களை பரிந்துரைத்திருந்தார். உழைப்பை மட்டுமே நம்பி வாழும் இரு இயக்க  ஒத்திசைவு- இணை இயக்கங்கள் சமுக மாற்றத்தில் முன்னேற்றத்தில் பெரும் பங்களிக்கும் என்பதே இன்றைய சூழல்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு