Skip to main content
குஜராத் கோப்புகள் என்ற புத்தகம் இளம் பெண் பத்திரிகையாளர் ரானா அயூப் ஆல் பல அபாயங்களை ஆபத்துக்களை எதிர்கொள்ளும் கடும் போராட்டத்திற்கு பின்னர் எழுதப்பட்டுள்ளது. இன்று மீண்டும் குஜராத் கலவரங்களை பற்றிய விவாத சூட்டினை ரானா புத்தகம் அதிகப்படுத்தியுள்ளது. ரானா மைதிலிதியாகி என்ற பெயரில் மோடி முதலமைச்சராக- அமித்ஷா உள்துறை அமைச்சராக இருந்த 2010ல் அகமதாபாத்தில் 8 மாத காலம் தங்கி உயிரை பணயம் வைத்து சேகரித்த ரியல் திரில்லர் பேட்டிகள்- மாநில அரசின் உயர் அதிகாரிகளின் மனதிறப்புகள்-அரசாங்க எஸ்டாபிலிஷ்மெண்ட் தான் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க நடத்திய மனசாட்சியில்லா அதர்ம செயல்கள்- அதிரடி கொலைகள் என சம்பவங்களின் அடுக்காக பதிவிடப்பட்டுள்ளது. இந்திய மனோதர்மம்- தர்ம சாஸ்திரம் என கொள்கை பிரகடனங்கள் செய்வர்கள் தமக்கு அரசியல் எதிரி- பண்பாட்டு எதிரி என பிறரை அழித்தொழிக்கும் அடாவடிகள் கோப்புகளில் பதிவாகி வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இப்பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புவோர்- அவ்வாறு நடந்திருந்தால் அவை கண்டிக்கவும் அம்பலத்தப்படுத்தவும் தகுந்தவையே என சொல்வதில்லை.

இப்புத்தகம் குறித்த அமர்வு ஒன்றை தோழர் பீட்டர் அக் 8 2016ல்(மாலை) பல்லாவரத்தில் அமைத்துள்ளார். பீட்டர் தனது சிந்தனை பேரவை மூலம் இது போன்ற டாபிகல் அமர்வுகளை 40க்கும் மேற்பட்டு நடத்தியுள்ளார். அவரின் தொடர் முயற்சி வியக்கதகுந்தது. கடந்த மாதம் தனது பெரும் உழைப்பால் சிறையில் பல்லாண்டுகளாக வாடும் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க அமர்வு ஒன்றை எக்மோரில் ஏற்பாடு செய்திருந்தார். பல்வேறு மார்க்சிய அறிஞர்களும் தோழர் முத்தரசனும் அதில் பங்கேற்றனர்சிந்தனை பேரவையில் கட்சி சார்ந்த- கட்சி சாராத மார்க்சிய பெருமக்கள், மனித உரிமை இயக்க போராளிகள் என பலரையும் பயன்படுத்தி வருகிறார் பீட்டர். அமர்த்யாசென்  ஆக்கங்கள் குறித்து நான் கூட உரையாற்றியதாக நினைக்கிறேன். தோழர் பீட்டர் சென்னை பெருநகர AITUC  தலைவர்களுள் ஒருவர். கண்டோன்மெண்ட் தொழிற்சங்க பொதுச் செயலராக இருந்தவர். அதன் அகில இந்திய பேச்சுவார்த்தை ஜேசிஎம்மில் இருந்தவர். தோழர் ஜெகனை தங்கள் சங்கத்திற்கு தலைவராக வேண்டும் என வற்புறுத்தி வைத்திருந்தவர் தோழர் பீட்டர். குடவாசல் சார்லஸ் என்ற  சிறுகதை எழுத்தாளரின் சகோதரர். பீட்டரின் பன்முகப்பணி தொடர்ந்து சிறக்கட்டும்!

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு