Skip to main content

மாவோ செகுவாரா ஆரம்ப வாசகர்களுக்கான புத்தகங்கள்




எழுத்தாளர் மருதன் கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் ரிபோர்ட்டர் பத்திரிக்கை துறையிலிருந்து 10 ஆண்டுகளாக பல புத்தகங்களை கிழக்கு பதிப்பகம் சார்பில் எழுதி வந்துள்ளார் . 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாரூரில் இன்பஜோதிவிலாஸ் என்ற புத்தகக்கடையில் அவரது இருபுத்தகங்களை காஸ்ட்ரோ - லெனின் வாங்கியதாக நினைவு. கிண்டிலில்( KINDLE) தமிழ் பத்தகங்கள் வருவதாக எங்கள் வீட்டு இரு இளைஞர்கள்  (கார்த்தி நிர்மலிடம் சொல்லி) மூலம் எனக்கு தெரிய வந்ததுமுதலில் என்னை கிண்டிலில் கவர்ந்த தமிழ் புத்தகம் ராமச்சந்திர குஹா எழுதியுள்ள புத்தகம். இந்தியாவின் நவீன சிற்பிகள் பற்றிய எளிய குறிப்புகளும் இன்றுள்ள சூழலில் தேவைப்படும் அவர்களது முக்கிய ஆக்கங்களுமானது. பின்னர் மருதனின் இரு புத்தகங்களை மூன்று நாட்களில் படிக்க முடிந்தது. கிண்டிலில் கண்ணுக்கு சிரமம் இல்லாமல் படிக்க முடிகிறது. கிண்டில் உபயம் நிர்மல்.
மருதனின் புத்தகங்கள் ஒன்று மாவோ வாழ்க்கை, மற்றது செகுவாரா வாழ்க்கை. மிக எளிய நடை. பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் எழுத்து நடை. எனக்கு காமிக்ஸ் போல் பட்டாலும் மாணவர்களுக்கு மாவோவை, காஸ்ட்ரோவை, செகுவாராவை எளிய வகையில் அறிமுகப்படுத்தும் புத்தகங்களாக இருக்கும்ஆரம்பநிலை வாசகர்களுக்கும் கூட மருதன் புத்தகங்கள் உதவலாம். அவர்  Private Life of Mao( மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் படித்துவிட்டு  டாக்டர் ஒருவரிடம் பிரைவேட் லைபை படிக்க பரிந்துரைத்ததாக செய்தி) Unknown Story of Mao, கனவிலிருந்து போராட்டத்திற்கு- செகுவாரா போன்ற புகழ்வாய்ந்த புத்தகங்களை மருதன் ரெபெரன்ஸில் காட்டியுள்ளார். 2002ல் சே கனவிலிருந்து போராட்டம் புத்தகம்  ரூ 300க்கு விடியல் வெளியிட்டது. அப்புத்தகம் வந்தவுடன் 5 புத்தகங்கள் எனக்கு அனுப்பப்பட்டன. திருவாரூர் கல்லூரிக்கு அப்புத்தகத்தை அறிமுகப்படுத்தினேன்.    NFTE மாநில செயலர் பொறுப்பில் இருந்த ஆர்.கே ஒன்றை பெற்றுக்கொண்டது நினவிற்கு வருகிறது.

தற்போது சுவாரஸ்யமான  எழுத்து முறையிலிருந்து விடுபட்டு ஆழமாக எழுதி வருவதாக மருதன் குறிப்பிட்டுள்ளார். ஏராள புத்தகங்களை எழுதிவரும் அவரது பணி தொடரட்டும்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு