Skip to main content

SPECIFIED BANK NOTE (SBN) WITHDRAWAL

SPECIFIED BANK NOTE (SBN) WITHDRAWAL
நவம்பர் 8 இரவு பிரதமர் மோடி அரசாங்கம் தனது  அதிரடி அறிவிப்பின் மூலம் ரூ 500, ரூ 1000 தாள்கள் செலாவணியாகாது- செல்லத்தக்கவையல்ல என நாட்டு மக்களுக்கு தெரிவித்தார். மக்கள் கவலைப்பட தேவையில்லை. டிசம்பர் 30வரை தங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தி சேமிப்பாக வைத்துக்கொள்ளலாம் என்றார். நோக்கம் குறித்தும் - சரி தவறு- மக்கள் துன்பம் பற்றி ஏராள கட்டுரைகள்- மீடியாக்களில் விவாதங்கள் தினம் நடத்தப்பட்டுவருகின்றன. மக்கள் வாய்ப்புள்ளவற்றை கவனித்து வருவர். போராட்டங்களும் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் சில தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும்.
 மார்ச் 2016வரை 500, 1000 கரன்சி 14.18 லட்சம் கோடி மதிப்பில் புழக்கத்திற்கு விடப்பட்டிருந்தது. நவம்பர் 8 வரை கணக்கிட்டால் 15.44 லட்சம் கோடி என பாரத வங்கியின் பொருளாதார ஆய்வு மையம் கணக்கிட்டுள்ளது . மார்ச் வரை தாள்கள் எண்ணிக்கை  என பார்த்தால் 1507.7 கோடி தாள்கள் 500 ஆகவும், 632.6 கோடி தாள்கள் 1000 ஆகவும் வெளியிடப்பட்டிருந்தது. அதாவது மொத்த ரொக்கத்தில் 86 சதம். ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி நவம்பர் 10-27 18 நாட்களில் 8.44 லட்சம் கோடி மதிப்புள்ள 500, 1000 வங்கிக்கு வந்து சேர்ந்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் அறிவிப்புப்படி 10 லட்சம்கோடி வரலாம். டிசம்பர் 30க்குள் 13 லட்சம் கோடி அளவில் வந்துவிடலாம் என்கிறார்கள். எனவே ரொக்கப்பணம் அப்படியே கருப்புபணம் என பேசப்பட்டது ஏமாற்று என ஆகலாம். வங்கி டெபாசிட்டில் வந்த பின்னர் அந்த வெள்ளைப்பணத்தில் கருப்புப்பணம் கண்டுபிடிப்போம் என்கிறது அரசாங்கம் .புரியவில்லை.
அடுத்து மக்கள் அவதி. நீள் வரிசை. சிலரின் சாவு என்கிற வேதனையெல்லாம் மாபெரும் அரசிற்கு பெரிய விஷயமாக இருக்காது.

பாவம் ரிசர்வ் வங்கி. பலிகடாவாகியுள்ளதுகடந்த நவம்பர் 10 முதல் டிசம்பர் 19 வரையிலான வேலை நாட்களீல் தாங்கள் 5,92,613 கோடி மதிப்பில் செலாவணி ஆகக்கூடிய கரன்சியை கவுண்டர்களுக்கும், ஏடிஎம்களுக்கும் கொடுத்ததாக டிசம்பர் 21 அன்று அதன் உதவி அட்வைசர் மூலம் அறிவிப்பை கொடுத்துள்ளது. அதாவது கட்டுகட்டாக 6லட்சம் கோடி மதிப்பிற்கு ரொக்கத்தை வங்கிகளுக்கு பட்டுவாடா செய்திட அனுப்பியுள்ளதக தெரிவிக்கிறதுதாள்களின் எண்ணிக்கை என பார்த்தால் 2260 கோடி தாள்கள். இதில் 10, 20, 50, 100 க்கான மொத்த எண்ணிக்கை தாள்கள் 2040 கோடி . புதிய 2000, 500 தாள்கள் 220 கோடி.  ஒப்பீட்டு பார்த்தால் மக்கள் கஷ்டம் புரியும்மோடியும் அமைச்சர்களும் பழைய அரண்மனை ராணி போல் கேக் இல்லயெனில் ரொட்டி சாப்பிடலாமே என பேசி வருகிறார்கள். ரொக்கமற்ற பரிவர்த்த்னை. அதற்கு லாட்டரி லக்கி பரிசு என..
500, 1000 மதிப்புகளில் ஏறத்தாழ 2200 கோடி தாள்கள்- 14 லட்சம் கோடி மதிப்பில் செல்லாது என அறிவிக்கப்பட்டு  வெறும் 6 லட்சம் கோடி மதிப்பில் 10,20,50,100, 500, 2000 புதிய புழக்கத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதிலும் புதிய 2000, 500 தாள்கள் வெறும் 220 கோடிதான். அதாவது முன்பு இருந்த புழக்க எண்ணிக்கையில் 10 சதவீத எண்ணிக்கை தாள்கள்சில மாதங்களில் சற்று கூடுதலாக அச்சிடப்பட்டால் கூட 30 சத எண்ணிக்கையை எட்டலாம். மீதி முழுக்க மொபைல் வங்கி, நெட்பேங்கிங், காசோஅலி பரிவர்த்தனை மூலமே ந்டைபெறவேண்டும் என்கிறது அரசாங்கம். இந்த 35 நாட்களில் பேடிஎம் என்கிற நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை பல மடங்கு பெற்றுவிட்டட்து. 400 கோடிக்கு மேல் கமிஷன் சம்பாதித்து விட்டது. ஜியோ பாரத வங்கி இணைந்து மொபைல் வங்கியை ப்ரொமோட் செய்கிறார்கள். வலுத்தவன் எல்லாம் தனது மொபைல் வங்கியை பயன்படுத்து என ஆதாயம் பார்க்க நினைக்கிறான். பிஎஸ்என் எல் கூட பாரத வங்கியுடன் முயற்சிக்கிறது.

மார்க்ஸ்பசுவை வணங்கிறான் குரங்கை கும்பிடுகிறான்.. அவனிடம் முதலாளித்துவம் வளர்க்க  பிரிட்டன் முயற்சி குறித்து’ 160 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார். ஆமாம் ஆச்சர்யமாக இருக்கிறது. வலதின் அரசியல் ஒருபக்கம் படு மூடநம்பிக்கைகளை வளர்ப்பதுமாகவும் மற்றொருபுறம் அதிரடி கார்ப்பரேட் முதலாளித்துவ சந்தையுடன் எவனையும்- கிராம மனிதனையும் கட்டிப்போடுவது என்பதாகவும் இருக்கிறது. இதுதான் இந்தியவகை முதலாளித்துவம் போலும்முதலாளித்தும் எல்லா நாடுகளிலும் எல்லா நேரங்களிலும் பிரபுத்துவ சிந்தனைகளை ஒழிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தன் வளர்ச்சிக்கு தொந்திரவு இல்லையெனில் இருந்து விட்டு போகட்டும் என அனைத்து  பூர்வோத்திர அம்சங்களையும் விட்டுவிடுகிறது. இனி எல்லாமே’ பே ட்டி எம்’ தான். இல்லையென்றால் பட்டினிதான்.

Comments

Post a Comment

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு