Skip to main content

True Faces of Gandhi and Ambedkar by Sheshrao Chavan

 

True Faces of Gandhi and Ambedkar by Sheshrao Chavan என்கிற புத்தகம் முதல் பதிப்பு 2016ல் வெளிவந்தது. நான் 2021 பதிப்பை படித்தேன். சென்னை அட்லாண்டிக்புக்ஸ் வெளியிட்டுள்ளனர். டெல்லி அட்லாண்டிக்கின் கிளையது. நீதிமான் சந்திரசேகர் தர்மாதிகாரி சிறிய முன்னுரை ஒன்றை தந்துள்ளார். புத்தகம் 11 சாப்டர்களாக அடுக்கப்பட்டுள்ளது.



காந்தியுடனான அம்பேத்கர் சந்திப்பு, வட்டமேஜை மாநாடுகளில் இருவரும் முன்வைத்த கருத்துக்கள், அது தொடர்பான விவாதங்கள், கம்யூனல் அவார்ட் எனப்படும் ராம்சே பிரதமர் வெளிவைத்த முடிவு- காந்தியின் உண்ணாநோன்பு -  அப்பட்டினிப்போர் தொடர்பாக எழுந்த உரையாடல்கள், அம்பேத்கரின் எதிர்வினைகள்- புனே உடன்பாடு போன்றவை விரிவாக இரு ஆளுமைகளின் எழுத்துக்களின் வழியாக விவாதிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் சாதி மதம் சார்ந்த விவாதங்கள் காந்தி அம்பேத்கர் எழுத்துக்களின் வழியாக முன்வைக்கப்பட்டுள்ளன. வர்ணாஸ்ரமம்- சாதி- இந்துமதம்- இந்துயிசம்  ஆகியன குறித்த இருவர் பார்வையும் அப்படியே அவர்கள் எழுத்துக்களை- பேச்சை முன்வைத்து கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து மிக முக்கியமானதாக கோயில் நுழைவு என்பதில் இருவருக்கும் இருந்த பார்வை அவர்களின் எழுத்துக்களின் வழியாகவே முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்த விவாதங்களில் இறுதியாக அவர்களின் எழுத்து வகைப்பட்டு முன்வைக்கப்பட்ட ஒன்றாக ஹரிஜன் எனும் பதம் பற்றிய உரையாடலாக அமைந்துள்ளது.

இறுதி 11வது அத்தியாயத்தில்தான் நூலாசிரியர் இருவரின் தனிச்சிறப்புகள் அணுகுமுறை வேறுபாடுகள் குறித்து பேசுகிறார்.  அந்த சாப்டர்தான் True Faces of Gandhi and Ambedkar என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. காந்தி- அம்பேத்கர் குறித்த விவாதங்களில் ஒருவரை நிராகரித்து இன்னொருவரை ஏற்றும் தன்மை இருக்கும். ஒருவருக்கு ஒருவர் நிரப்பிகளாக இருக்கின்றனர் என்ற இணக்கப்படுத்தும் பார்வையும் இருக்கும். இதன் பொருள் அம்பேத்கர் காந்தி குறித்து எழுதிய விமர்சனங்களை மூடிவைப்பது என்பதாகாது. அதேபோல் அம்பேத்கர் நிலைப்பாடுகளின் மீது காந்தி முன்வைத்த கருத்துக்களை சொல்லாமல் விடுதலும் ஆகாது.

இந்த புத்தகத்தில் ஆசிரியர் மேற்கூறிய பல்வேறு பொருள்களில் அவர்கள் என்ன எழுதிக்கொண்டார்கள் என்பதை அப்படியே தந்துவிடுகிறார். அம்பேத்கர் தான் நியாயம் என நினைத்து போராடிய அம்சங்களில் அவரின் அறிவுக்கூர்மையும், depressed class க்கு இந்திய சமூகம் ஏற்படுத்திய கொடுமை களைந்து உரிமைதனை நிலைநாட்ட உறுதியாக தன் கருத்துக்களை வைப்பதையும் படிக்கும்போது உணரமுடியும். அதேபோல் காந்தியின் அமைதியான பிறரின் மரியாதையை குறைத்துவிடாமல் விரிவான பரந்துபட்ட பல்திரள் மக்கள் அனுபவத்தில் இதயத்துடன் நெருக்கமாக உரையாட விழையும் தன்மையும், தானே முன்நின்று தான் பேசுவது படி நடந்துகாட்ட முயற்சிக்கும் கடமை உணர்வும் இருப்பதை பார்க்கமுடியும்.

காந்தியின் எழுத்துலகம்முழுமையும் குறித்தோ- அம்பேதகரின் எழுத்துலகம் முழுமையும் குறித்தோ இப்புத்தகம் தனது உரையாடலை முன்வைக்கவில்லை.  அவர்கள் இருவரும் எப்புள்ளிகளில் முரண்பட்டு எப்படி விவாதங்களை நடத்திக்கொண்டனர் என்பதை அவர்கள் மொழியிலேயே இப்புத்தகம் பேசியுள்ளது. காந்தியிடம் விவாதங்களில் வெறுப்பு என்பது வெளிப்படவில்லை. தன்னை புரிந்துகொள்ளுங்கள் என்ற வேண்டுதல் இருந்திருக்கலாம். ஆனால் அம்பேத்கரிடம் காந்தி குறித்த விவாதங்களில் வெறுப்பும் வெளியானது என்ற புள்ளியை இந்த ஆசிரியர் வந்தடையாமல் இல்லை. அந்தப்பகுதியை மட்டும் இந்நூலாசிரியர் எழுதியதிலிருந்தே பதிவிட விரும்புகிறேன்.

I can only say that the relations between Gandhi and Ambedkar were that of love and Hate. Gandhi loved and respected and admired Ambedkar, whereas, Ambedkar missed no opportunity to criticize, condemn, humiliate Gandhi during his life and even after his life. Gandhi believed we can only win over the opponent by love never by hate..

Gandhi meticulously followed Buddha’s message in respect of all including Ambedkar. Gandhi believed that someday, he wold convert Ambedkar to love him. But it remained his hope against hope. May be because of his sufferings as untouchable. In that sense, it could be termed as natural reaction.

Buddha’s message was  For never in this world does hatredcease by hatred – hatred ceases by love “

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு