https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, August 16, 2017

BAKUNIN பகுனின் 5

V
 அகிலத்தில் மார்க்ஸ் உடன் பணியாற்றியபோதும் வேறுபாடுகள் எழுந்தன.  மார்க்ஸ் பகுனை ஜாரின் ஏஜெண்ட் என சொன்னார். ஆனால் பகுனின் சிறைவதைகளை அறிந்த ஹெர்சன், மாஜினி இருவரும் மார்க்ஸ் தனது வார்த்தைகளை திரும்ப பெறவேண்டும் என வற்புறுத்தினர். ஆனால் மார்க்ஸ் திரும்பபெறவில்லை. லண்டனில் பகுனின் தியாகத்தை மட்டுமே அங்கிருப்பவர் அறிந்திருந்தனர். அவர் குறித்த ருஷ்ய ஆவணங்கள் 60 ஆண்டுகளுக்கு பின்னர்தான் வெளியாயின.
1847-48 ல் பிரஸ்ஸல்சில் மார்க்சை பகுனின் சந்தித்தார். அவரது நண்பர் ஹெர்வேவிற்கு மார்க்ஸ் குறித்த தனது எண்ண ஓட்டத்தை பகுனின் எழுதியிருந்தார்.. The German workers espaecially Marx poison the atmosphere. Vanity, malevolence, gossip, pretentious and boasting in theory and cowardice in practice. Dissertations about life, action.. and complete absence of life  என்ற கடும் விமர்சனத்தை அதில் அவர் வைத்தார்.
 1862-72 காலங்களில் பகுனின் அவர்களின் மிக உயர்ந்த கருத்துக்கள் வெளியாயின. Mentally and physically, he attained his prime  என்று தெரிவிக்கிறார் ஆல்ட்ரெட். பிளாங்கி சொல்வதுபோல ஒருவரை அவரது நேரடி ரிசல்ட் என்பதிலிருந்து அல்லாமல் அவர் ஏற்படுத்தும் மறைமுக விளைவுகளிலிருந்தும் எடைபோடவேண்டும். It may be said that his works have done more for the revoultionary education of the proletariat than all the heavy scholastic treatises of the doctrinaire socialists put together.  பகுனிடம் எந்த ரெடிமேட் பார்முலாவும் இல்லை. ஒருவர் தனது சொந்த மூளையை கசக்கி கொள்ளாமல் அவரது புத்தகங்களில் விடைதேடிக்கொண்டிருந்தால் கிடைக்காது என்கிறார் அல்ட்ரெட்.
1869ல் பகுனின் சமாதானம் மற்றும் விடுதலை காங்கிரஸ் லீகில் உரையாற்றினார். சிலர் மட்டும் மதிப்புமிகு மனித வாழ்க்கை வாழ்ந்திட பெரும்பான்மை உழைப்பாளர் மிருகத்தனமாக நடத்தப்படும் நாகரீகத்தை அவர் சாடினார். அவர்  economical and social equalisation of classes and of individuals என்றார்.  I did not oppose the idea of  Communism but only the authoritarian concept of Communism that Marxists stood  என்கிற விளக்கத்தை  பகுனின் தந்தார். தான் கலெக்டிவிசம் என கம்யூனிசத்தை விளக்குவதாக குறிப்பிட்டார்.   My principle is abolition of state itself... I want the orgnisation of society and the distribution of property to proceed from below not downwards from above, by the dictate of the authority. I desire the abolition of personal hereditary property, which is merely an institution of the State, and a consequence of state principles. In this sense I am a collectivist not a communist  என்றார் பகுனின்
 1848ன் பிரஞ்சு எழுச்சி ஒடுக்கப்பட்டதில் மனம் ஒடிந்தார் ஹெர்சன். ருஷ்யா ஏன் முதலாளித்துவத்தை அடையாமல் சோசலிச குடியரசாக மலரக்கூடாது என்ற கேள்வியை அவர் எழுப்பினார். அது தொழிலாளர் விவசாயிகள் குடியரசாக எழட்டும் என்றார். லண்டனில் இருந்த பகுனின் உடன் தொடர்புகளை தொடர்ந்தார். கான்ஸ்டிட்யூஷன் என்பதெல்லாம் மாஸ்டருக்கும் அடிமைக்கும் இடையேயான ஒப்ப்ந்தம் என்றார். குரோப்ட்கின் பகுனின் செல்வாக்கை அவரது எழுத்துக்களை மட்டும் வைத்து மார்க்சை எடைபோடுவதுபோல் போடவேண்டாம் என்றார். அது legendary and oral  என்றார்.
தொழிலாளர்வர்க்கம் தங்களின் உயிர்ப்பான வர்க்கப்போராட்டத்தை மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரவர்க்கத்திடம் சர்வாதிகாரம் என்கிற பெயரில் சரண்டர் செய்து கொண்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கையை பகுனின் விடுத்தார். அவரின் சிறந்த படைப்பாக  God and State  விளங்குகிறது. The State is the negation of Mankind.. To strive for an International justice and freedom and lasting peace, and therewith seek the maintenance of the State, is a ridiculous naivete  என்பதை அழுத்தமாக தெரிவித்தவர் பகுனின்.
மார்க்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் தன்னைப்பற்றி ஜார் ஏற்பாட்டில் ஷாம்பெயின் பார்ட்டி, பெண்களுடன் கொண்டாட்டமாக இருப்பதாக எழுதுகின்றனர். சிறைக்கொட்டடியில் வதைப்பைட்டிருந்த தன்னைப்பற்றி அவ்வாறு எழுதியதை அவர்  infamous and stupid   என்ற பதங்களை கொண்டு  விமர்சித்தார். 1864ல் 16 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் சந்தித்துகொண்டனர். சந்திப்பு குறித்து இருவரும் பதிவிட்டுள்ள்னர். மார்க்ஸ் பகுனின் சந்திப்பு குறித்து எங்கெல்ஸ்க்கு தெரிவித்தார்.  மார்க்ஸ் அவரை எனது பழைய நண்பன் என குறிப்பிடுகிறார். மார்க்சின் அரசியல் குழாம் நண்பர்கள் வட்டம் பற்றி பகுனின் தனது விமர்சன மதிப்பீட்டை கொண்டிருந்தார்.  Marx loved his own person much more than he loved his friends and apostles, and no friendship could hold water against the slightest wound to his vanity.. Marx will never forgive a slight to his person. You must worship him, make him an idol of him , if he is to love you in return; you must at least fear him, if he is to tolerate you. He likes to surround himself with pygmies, with lackeys and flatterers  என்கிற கடும் விமர்சனத்தை பகுனின் வைத்தார்.
மார்க்சின் மேதாவிலாசம் மீது பகுனினுக்கு  மரியாதையும் இருந்தது. கம்யூனிஸ்ட் அறிக்கையை பகுனின் 1862ல் ருஷ்யனில் மொழிபெயர்த்தார். காபிடல் படித்துவிட்டு பிரமிப்பை வெளிப்படுத்தினார். ஹெர்சனுக்கு எழுதிய கடிதத்தில் தன்னைப்பற்றிய சுயவிமர்சனத்துடன் மார்க்சை அங்கீகரித்து அவர் எழுதினார்.  For  20 years Marx has served the cause of Socialism ably, energetically, taking the lead of every one in this matter. I should never forgive myself if, out of personal motives, I were to destroy or diminish Marxs beneficial influence. Still, I may be involved in a struggle against him, not because he has wounded me personally, but because of the State Socialism he advocates என தான் வேறுபடும் இடத்தை தெளிவுபடுத்தினார்.
ஜெனிவாவில் பிலிப் பெக்கர் எனும் கம்யூனிஸ்ட் மார்க்சின் காபிடலை பகுனினுக்கு கொடுக்கிறார்.  மிக முக்கிய, ஆழமான, கற்றறிந்த விஷயங்கள் கொண்ட ஆனால்  abstract  ஆன புத்தகம் என்று சொன்ன பகுனின்  தான் மார்க்சிற்கு நன்றி தெரிவித்தோ பாராட்டியோ எழுத மறந்ததாக சொல்கிறார். தனது மறதி மார்க்ஸிற்கு இழைக்கப்பட்ட மரியாதை குறைவாக பார்க்கப்பட்டுவிட்டது என்பதையும் பகுனின் உணர்கிறார். ஜென்னியும் பகுனின் ஒருவார்த்தைக்கூட எழுதாதை பற்றி குறிப்பிட்டு ருஷ்யர்களை நம்பவே முடியாது என பெக்கருக்கு கடிதம் எழுதுகிறார்
லீப்னெக்ட், பெபல் போன்றவர்கள் தங்கள் பத்ரிக்கை எழுத்துக்கள் மூலம் பகுனினை விமர்சித்து ஜாரின் கைகூலி என எழுதினர். அகிலத்தில் கருத்துவேறுபாடுகள் அதிகமான நிலையில் கூட நண்பர் ஒருவருக்கு பகுனின் ஜனவரி 28 1872 கடிதத்தில் ஜெர்மன் குழுவின் தலைவர் மார்க்ஸ் போன்றவர்கள் லண்டனில் அகிலத்தில் கடுமையாக உழைத்துவருகிறார்கள் என்றே எழுதினார். ஆனால் இந்த மதிப்பிற்குரிய மனிதர்கள் என்னை பகைவனாக சித்தரிக்கிறார்கள். அவர்களுக்கு நான் பகைவன் இல்லை என உணராமல் தவறிழைக்கின்றனர். அவர்களது அறிவுத்திறன், பாட்டாளிகள் பக்கம் நிற்கும் உறுதிப்பாடு ஆகியவற்றை நான் மதிக்கிறேன். Marx is the supreme economic and socialist geneius of our day  என குறிப்பிட்டார் பகுனின். மார்க்சின் நண்பர் எங்கல்ஸ்கூட பெரும் புத்திமான் என்றார் பகுனின். அவர்களது சேவையை முக்கியத்துவத்தை அங்கீகரிக்காமல் இருப்பது நன்றிகொன்றமைக்கு சமம் என்றார் அவர்.

பகுனின் தான் மார்க்ஸ் இடமிருந்து வேறுபடுவதை சுட்டிக்காட்டுகிறார். மார்க்ஸ் அரசு மூலம் நிர்வாகம் என மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்காக நிற்கிறார். சர்வாதிகாரம் என்று சொல்கிறார். நிலங்கள், அனைத்து மூலதனங்களும் அரசிற்கே சொந்தம். அரசாங்க அதிகாரிகள், வல்லுனர்கள் நிர்வாகம் செய்வர் என அங்கு நம்பப்படுகிறது. நான் சொல்வது அரசியல் சமுக சமத்துவம் ஆனால் அரசு இல்லாமல் என்பதுதான் அதில் முக்கியமானது. நாம் கட்டமைக்க விரும்பும் சமூகம் மேலிருந்த கட்டளைகளால் அமையக்கூடாது- சுதந்திரமாக கூட்டிணைவு கொண்ட தொழிலாளர்களால் சமூகம் கட்டமைக்கப்படவேண்டும் என்றார் பகுனின்.
மார்க்ஸ் குறித்த மற்ற விமர்சனம் அவரது இயல்பு குறித்ததாக இருந்தது. மார்க்ஸ் மற்றவர் புகழ் அடைவதை சகிக்காமல் இருந்தார். பொறாமைக்கூட கொண்டார். புருதானை தேவையில்லாமல் அவர் அடைந்துவந்த புகழுக்காகவே தாக்கினார். மார்க்ஸ் எப்போதும்  my ideas  என பேசுவார்.  ideas என்பது பொதுவானது- அனைத்து மிகச்சிறந்த எண்ணங்களும் பலரின் கூட்டுழைப்பின் வெளிப்பாடு என்பதும் தானே சரியானது என பகுனின் தனது வாதத்தின் மூலம் மார்க்சை விமர்சித்தார். மார்க்ஸ்- எங்கெல்ஸ் சோசலிச ஜனநாயக அலையன்ஸ் மற்றும் அகிலம் எனும் அறிக்கையை பகுனின்மீது கடும் விமர்சனமாக முன்வைத்தனர். மார்க்ஸ் வரலாற்றை எழுதிய ஒட்டோரூல், மெர்ரிங் கூட இதை ஏற்கவில்லை என்கிறார் அல்ட்ரெட். பகுனின் மார்க்சின் விமர்சனத்தை  gendarme denunciation  என சொல்லிவிட்டு அகிலத்திலிருந்து தான் விலகுவதாக  அறிவித்தார்.
பகுனின் மறைந்த ஜூலை 1, 1876ல் அகிலம் தனது செயலையும் முற்றிலுமாக இழந்திருந்தது. ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்காவில்கூட அனார்க்கிஸ்ட்கள் செல்வாக்கும் போராட்டங்களும் தொடர்ந்தன. பகுனினை தோல்வியின் பரிதாபகர ஆளுமையாக பல சித்தரிப்புகள் உள்ளதை அல்ட்ரெட் விமர்சிக்கிறார்..
வன்முறை மூலம்தான் புரட்சி என்பதில் அவர் மார்க்ஸ் உடன் நின்றாலும் மார்க்ஸ் சொல்லும் ஒழுங்கமைந்த வர்க்க திரட்சி மூலம் புரட்சி என்பதற்கு பதிலாக அப்போதைய கோபத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் மனித கூட்டம் கொள்ளும் எழுச்சிதான் புரட்சி என கருதினார் பகுனின். உண்மையில் புரட்சிக்காரர்கள் இரத்தம் சிந்தப்படுவதை விரும்புவதில்லை- என்ன செய்வது முடியாட்சிகளும் அரசாங்கத்தையும் பயமுறுத்த அவ்வாறு சொல்ல வேண்டியுள்ளது என்றும் அவர் நண்பர்களுக்கு எழுதுகிறார். All exercise of authority perverts, and all submission to authority humiliates  என்பார் பகுனின்.
The communists imagine that they can achieve it by the development and organisation of the political power of the working classes and particularly town proletariat... The Revoultionary socialists think on the other hand that they can only reach this goal by the development and organsiation of non political social and therefore anti- political power of the working masses in town and country  என பகுனின் எழுதுவதை அவர் நிலைதடுமாறுகிறார் என கார் மதிப்பீடு செய்கிறார்.
அகிலத்தில் ஏற்பட்ட வேறுபடுகள் காரணமாக பகுனின் அவர்து ஆதரவாளர்கள் ஹேக் காங்கிரஸ் செபடம்பர் 1872ல் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து செய்தி வெளியானது. பகுனின் லிபர்டி பத்திரிகை எடிட்டருக்கு எழுதினார். மார்க்ஸ் விஞ்ஞானபூர்வமாக முழுமுதல் உண்மை ஒன்றை கண்டுபிடித்ததுபோல் கற்பனை செய்து கொள்கிறார் என சொல்லி அவரை நான் க‌ஷ்டப்படுத்த விரும்பவில்லை. அரசை அழிப்பது என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். அரசினுள் அரசால் மக்களுக்கு தொழிலாளர்களுக்கு சுதந்திரம், விடுதலை என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை என்றார். மார்க்சிஸ்ட்கள் கவர்மெண்டலிஸ்ட்களாக உள்ளனர். வெற்றியின் களிவெறியில் மார்க்ஸ் இருக்கலாம். இரு அணிகளின் கருத்து முரண்பாட்டில் இம்மி கூட தீரவில்லையே என்றார் பகுனின். சீரானதாக இல்லாவிடினும் மார்க்ஸ் புரட்சிகர தாகம் நிறைந்தவர். ஆனால் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எப்படி பிரச்ச்னையை தீர்க்கும் என்பதை அவர் காணத்தவறினார் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது என்றார் பகுனின்.

அகிலத்தின் பிரச்ச்னைக்கு மார்க்சே காரணம். அவரின் சர்வாதிகாரமே காரணம். அகிலத்தின் துவக்க கர்த்தா மார்க்ஸ் என்றாலும் அதன் தந்தை என அவர் தன்னைக் கருதிக்கொள்கிறார். அவரின் இறுமாப்புதான் பிரச்சனையாகிறது எனவும் பகுனின் மார்க்சை விமர்சித்தார். அவர் மருத்துவச்சியாக இருக்கலாம் அகிலத்தின் பெற்றோர் அல்ல. ஹேக் காங்கிரசிலேயே மார்க்ஸ் அகிலத்தை கொன்றுவிட்டார். அதிகாரபூர்வ கொள்கை என அறிவித்துவிட்டால் அதற்கு பின்னர் என்ன விவாதம் நடைபெறமுடியும்.  As soon as an official truth is pronounced, having been scientifically discovered by this great brainy head labouring all alone- a truth procliamed and imposed on the whole world from the summit of the Marxist Sinai, why dis cuss anything ? All that remains to be done is to learn by heart the commandments of the new dialogue என அவர் கேலியாக கேள்விகளை முனவைத்தார்.
  மாஜினியையும் மார்க்சையும் ஒப்பிட்டு பகுனின் பேசுகிறார். மாஜினி கடவுளை நம்பி அரசு குறித்து பேசினார், மார்க்ஸ் கடவுள் நம்பிக்கையாளர் அல்ல. ஆனால்    மாஜினியின் கடவுளே தேவலைப்போல் உள்ளது என கடுமையாக விமர்சித்தார். அவ்வப்போது அவர் எங்கெல்ஸ் குறித்தும் மார்க்சின் வலக்கரம் என பேசியுள்ளார். எங்கெல்ஸ், லசேல் போன்ற மார்க்சிய சோசலாஜிஸ்ட்கள்  பொருளாதார வளர்ச்சியின் கட்டங்கள், சோசலிச புரட்சி என்று பேசுவது குறித்து தனது கருத்துக்களை பகுனின் முன்வைத்தார்.  The inevitable process of economic facts - the only cause of all of history's moral and intellectual phenomena by exclusion of all other consideration என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது என பகுனின் எழுதினார்
தற்காலத்தில் பிஸ்மார்க் எப்படியோ அப்படி அவரின் வழித்தோன்றலாக எதிர்கால பிஸ்மார்க்காக மார்க்ஸ் படுகிறார் எனவும் பகுனின் எழுதினார். மார்க்சை தான் இழிவுபடுத்துவதாக கருதவேண்டாம் என தெரிவித்துவிட்டு அவ்வாறு எழுதினார் பகுனின்.  Out and Out cult of State  என்பதால் தான் அவ்வாறு முடியாட்சி அரசரையும்   சோசலிச குடியரசுவாதியையும் இணைத்து பேசியதாக விளக்கம் தருகிறார்.

மார்க்சை ஒப்பிடும்போது பகுனின் செல்வாக்கு மிகுந்த ஈர்ப்புகொண்டதாக இருக்க முடியவில்லை. ருஷ்யாவில் டால்ஸ்டாய், குரொபோட்கின் போன்றவர்கள் வன்முறையற்ற அனார்க்க்சிசம் பக்கம் நின்றனர். ஸ்பெயின், இத்தாலியில்தான் பகுனின் செல்வாக்கு நீடித்ததாக இருந்தது.

No comments:

Post a Comment