Skip to main content

அஜிதனின் மைத்ரி

 

அஜிதனின் மைத்ரி

                  எஸ். ஹேமலதா



 

ஒரு பயணக்கதையா? ஆம்

ஒரு காதல் கதையா?  ஆம்

ஒரு தன் மன விசாரப் புரிதலா?  ஆம்.

உத்தராகண்ட்  பிரதேசத்தில் வாழும் பஹாடி இன மக்களின் கலாசார பண்பாட்டு விவரணையா?  ஆம்.

இப்படி பல 'ஆம்' களை சொல்ல வைக்கிறது இந்நாவல்.

நாவலாசிரியர் அஜிதன், எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் மகன். தந்தையே  குருவாக அமைந்தது பற்றி அவருடைய மகிழ்வும் அவருக்கு இந்நூலை சமர்ப்பிப்பதில் நெகிழ்ச்சியும் கொள்வதாக முன்னுரையில் அஜிதன் குறிப்பிடுகிறார்.

பயணம் தொடங்கும் பொழுதே நாமும் அவருடன் இணைந்து விடுகிறோம். மந்தாகினி ஆற்றுடன் கூடவே நெளிந்து வளைந்து கொண்டைஊசி வளைவுகளில் நாவல் ஊடே நாமும் பயணிக்கிறோம்.

கல்லூரிப் பெண்ணான மைத்ரிபன்வார் நிகழ் தலைமுறைப் பெண். நாவலின் நாயகன் ஹரனை ஜீப் பயணத்தில் சந்திக்கிறாள்.  முதல் சந்திப்பிலேயே மைத்ரி பாலின வேறுபாடு எதையும் பொருட்படுத்தாத சிந்தனையை வெளிப்படுத்துகிறாள். அதேபோல கடைசியில் ஹரனுடன் உறவு கொண்டு பிரியும் போதும் உணர்ச்சி வசப்படாமல் யதார்த்தமாக செல்வது மிகவும் liberated ஆன மைத்ரியை வாசகருக்கு உணரவைக்கும்.

மைத்ரி கதாபாத்திரம் மூலமாக இயற்கையை, பண்பாட்டை, உத்தராகண்டின் உணவு ,திருமண முறைகளை, பூக்களை, பூத்திருவிழாவை அஜிதன் சொல்லும்போது இப்புவி வாழ்வின்  நெருக்கத்தை உணர்கிறோம்.

 

ஜீப்பில் மிலிட்டரிகாரருடனான உரையாடலில் ஆசிரியரின் நகைச்சுவையை ரசிக்கலாம். ஜீப்பை முழுங்கும் பாம்பு, அண்டரண்ட பட்சி, போன்றவற்றை  மிலிட்டரிகாரர் விவரிப்பது தேர்ந்த ஹாஸ்யமாக ஹரனுக்குப்படும். ஆனால் அவை கதையாடல்கள் எனவும் அவன் மனம் உணர்த்தும். நாடு பாதுகாப்பான கையில்தான் இருக்கு என இரட்டை அர்த்த தொனியில் ஹரன் தன் எதிர்வினையை தருவான். உத்தராகண்ட் வெள்ளம்  கதைமாந்தர்கள் மூலம் பேசப்படுகிறது.

ஒவ்வொரு வினாடியும் இயற்கையை உற்று நோக்கும் ஹரன்  துடிப்பான இளைஞன். அவன் அஜிதன் போன்ற இன்றைய இளைஞனாகவும் இருக்கலாம்.

ஒரு நாள் பயணமாக கச்சர் எனப்படும் கோவேறு கழுதை மீதேறி மைத்ரியின் பிறந்த ஊர் செல்லும் போது ஆசிரியர், மைத்ரி பாத்திரத்தின் வழியாக அணுஅணுவாக அந்த நிலத்தை நம்முன் விரிக்கிறார்.   புக்யால், தேவதாரு காடு, வழியில் தென்படும் பஹ்ரல் ஆடுகள், போட்டியா இன மக்கள், அவர்கள் காவல் நாய்கள், பறவைகள் என பட்டியல் நீளும்.  உணவு பற்றிய விவரணங்களும், இசை பற்றிய விளக்கங்களும்  ஹரனுக்கு விருப்பமானவையாக  இருக்கின்றன.  அம்மக்களின் வாத்தியங்கள், நகைகள் என அலுப்பு ஏற்படாமல் செய்திகளை அடுக்கிக் கொண்டே கதை நகர்த்தும் விதத்தில் பிரமிக்க வைக்கிறார் அஜிதன். இரவு நேரத்தில்  யானைத்தோல் போர்த்தியதைப் போன்ற குளிர்ந்த மலைச்சிகரத்தில் நிற்கும் போது அந்த கடுங்குளிர் நம்மையும் பற்றிக் கொள்கிறது.

கவிதையும் கதையுமாக ஆங்காங்கே சிற்சில ஆங்கில சமஸ்கிருத உத்தராகண்டின் கர்வாலி பதங்கள் சுவையாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

உயிராசையின் மற்றுமொரு லீலை .  லட்சம் கோடி விண்மீன்களாக மைத்ரி சூழ்ந்திருந்தாள் என்ற கனவு நிலையில் ஹரன்  இந்நாவலில் வாழ்கிறான்.

 

17-1-2023

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு