https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, October 25, 2023

Caste as Social capital

 

Caste as Social capital

பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் எம் பெங்களூரில் நிதிப்பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சென்னை லயோலா மாணவரும் கூட. கல்கத்தா எம் லும் படித்து பணியும் ஆற்றியவர். சாஸ்த்ரா, ICSSR தொடர்பு கொண்டவர். அரசியல், சமூகம், பொருளாதாரம், ஊழல் என பல்வேறு அம்சங்கள் குறித்து ஏராளமாக எழுதியும் பேசியும் வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை காமராஜர் அரங்கில் இவர் பேசிய உரை ஒன்றை ( வெளிநாட்டு வங்கிகளில் நிதி பதுக்குதல்) தொழிற்சங்க தோழர் சிலருடன் சென்று கேட்ட நினைவு இருக்கிறது.

இப்போது இவர் வலது மேடைகளில் அதிகம் தென்படுகிறார். வலது அறிஞர்களுடன் இவர் உரையாடல்கள் கிடைக்கின்றன. கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் ஆசிரியரான இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் எழுதிய caste as a social capital என்கிற புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். மேற்கு நாடுகளில் 2019 ல் வெளிவந்த ஒன்று. இவ்வாண்டு 2023 ல் பெங்குவின் இந்தியா இதைக் கொண்டுவந்துள்ளது.

இப்புத்தகத்தின் மய்ய ஆய்வு நோக்கமாக திரு வைத்தியநாதன் சொல்வது, மாறி வரும் இந்திய அரசியல் சூழலில் சாதி என்பது ஒடுக்குமுறை வடிவம் என்கிற உரையாடலின் வழி, அது சமூக மூலதனமாக social capital என்பதான வடிவத்தை பெற்றுள்ளது என்பதை நிறுவுவது என்கிறார். ஒவ்வொரு சாதியும் அதன் மேல் நோக்கிய இயங்கு திசைக்கான போராட்டத்தை மேற்கொண்டு வருவதை  சீனிவாஸ் மற்றும் திபங்கர் குப்தா ஆய்வுகளையும் கணக்கில் கொண்டு வைத்தியநாதன் பேசுகிறார்.

மாயை சுற்றும் உரையாடல்களிலிருந்து நம்மை  மீட்டுக்கொண்டு, டேட்டா தரவுகளின் வழிபட்ட உரையாடல் வழி சமூக நீதி கட்டமைக்கப்படவேண்டும் என வாதாடுகிறார். அவருக்கு கிடைத்த டேட்டாக்களை தருகிறார்.

இன்று பெரும் சூடான பிரச்சனையாகவுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு துல்லியமாக எடுக்கப்படவேண்டும் என இவர் வற்புறுத்தும்போது, பாஜக ஆதரவு வலதுகள் அதை ஏற்பார்களா எனத் தெரியவில்லை.

1931 பிரிட்டிஷ் கால சாதி கணக்கெடுப்பை நீட்டித்தான் மண்டல் அறிக்கை வந்தது. எனவே அதை துல்லியப்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு வரவேண்டும் என்பது இவர் சிந்தனையாகவுள்ளது.

 மருத்துவம் பொறியியல் பட்டப்படிப்பு இடங்களில் பயன் பெற்றோர் குறித்து இவர் தரும் சிலடேட்டாக்கள்  , பிற்பட்ட வகுப்பினர் மத்தியில் தமிழகத்தில் கடும் கோபத்தை உருவாக்கக்கூடும்.

அடுத்து மிக முக்கிய புள்ளியாக இவர் எட்டுவது ஏன் பெரும்பாலும் சாதி மோதல்கள்பிற்பட்டவர் எதிர் தலித் பிரிவினர்என்று அமைகிறது. அது பிற்பட்டவர் மத்தியில் ஏற்படுவதில்லை என்கிற ஆய்வாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் மதமாற்றம் அடைந்து கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர் எனச் சென்றாலும் அங்கும் சாதியம் தொழிற்படுகிறது என்கிற ஒன்றை வைத்தியநாதன் முன்வைக்கிறார்.

1951ல் நேருதான் ‘ stopped enumerating caste in the census, pursuing its goal of a classless society ‘ என்பதை மறக்காமல் சொல்கிறார் பேராசிரியர். ராகுல் இன்று வேண்டும் எனச் சொல்வதைக் காண்கிறோம்.

1901 கணக்கெடுப்பில் 1646 சாதிகள் எனச் சொல்லப்பட்டிருந்தால், 1931ல் 4147 ஆக உயர்ந்ததைக் காட்டுகிறார். 1881 சென்சஸ் படி ஏறத்தாழ 58 சத சாதிகள் எண்ணிக்கையில் 1000க்கும் கீழ் இருந்தனராம். 1929ல் எடுத்த கணக்கில் 74 சத சாதிப்பிரிவுகள் பெரும்பாலும் ஒரே locality என்ற இட இருப்பையே கொண்டிருந்தனவாம்.

இங்கு வைத்தியநாதன் எழுதியிருப்பது

But post independence, the situation changed to the aggregation of castes. Caste/ sub caste/ sub sub caste was the order of the day. Democracy creates its own fascinating opportunities. Due to power of voting and mass mobilisation caste aggregations are becoming common

இந்த சாதி ஒருங்கிணைப்பு திரட்சி வடிவில்  பல உபசாதிகளை உள்ளடக்கி பெரும் அடையாளமாகுதல் என்பது இன்றுள்ள வாக்கு அரசியலில் முக்கிய காரணியாகிவுள்ளதைக் காண்கிறோம். பிராமணர் என்கிற முன் கால வர்ணம் இன்று சாதி என்கிற பல உபசாதிகளை உள்ளடக்கிய அடையாளமாகியுள்ளது. தமிழகத்தில் அதேபோல் முக்குலத்தோர் என்பதும், குஜராத்தில் படேல், அரியானாவில் ஜாட் என்பதும்  மிக முக்கிய dominant அடையாளமாகியுள்ளது.

இந்த வகைப்பட்ட caste aggregation- a powerful negotiating block ஆகவும் வாக்கு அரசியலில் தொழிற்படுகின்றன. Social Engineering என்கிற பெயரில் பல்வேறு சிறு சாதி குழுக்கள் இந்த செல்வாக்கு கொண்ட சாதி அதிகாரத்திற்கு எதிரான திரட்சியாக வாக்கு அரசியலில் பயன்படுத்தப்படுவதையும் காண்கிறோம்.

இரண்டு முக்கிய ஆய்வாளர்கள் சொல்லிய புள்ளிகளைக் காண்போம்.

எம் என் சீனிவாஸ் வரிகளை அப்படியே தந்துள்ளேன்

“ An important feature of social mobility in modern India is the manner in which the successful members of the backward castes work consistently for improving the economic and social condition of their caste fellows. This is due to sense of identification with one’s own caste,and also a realisation that caste mobility is essential for individual or familial mobility”

அதாவது  பிற்படுத்தப்பட்ட சாதியார்கள் சமூகத்தில் ஏற்றம் பெற்று வருகின்றனர் என்பதும், அதற்கு சுயசாதி அடையாள உணர்வை அவர்கள் வைத்துக்கொண்டிருப்பதும், அது உயர்விற்கு அவசியம் எனக் கருதுவதும் என்கிற செய்தி சீனிவாசிடம் கிடைக்கிறது.

அதே போல் திபங்கர் குப்தா வந்த புள்ளியும்  இன்றைய புரிதலுக்கு மிக முக்கியமான ஒன்று. அவரின் வரிகளை தந்துள்ளேன்

In fact, it is more realistically to say that there are probably as many hierarchies as there are castes in India. To believe that there is a single caste order to which every caste, from Brahmin to Untouchable, acquiesce ideologically, is a gross misreading of facts on the ground. The truth is that no caste, how so ever lowly placed it may be, accepts the reason for its degradation.

திபங்கர் வந்த புள்ளி சமூக உரையாடல்களில் இடம் பெறாமல் போவதைக் காண்கிறோம். இங்கு ஒரே படிநிலையில் மேல் மற்றவை அதற்கு கீழ் என சாதிகள் தங்களை ஒப்புக்கொடுக்கவில்லை. எவ்வளவு சாதிகளோ அவ்வளவு படிநிலைகள் என்ற மன உணர்வே தொழிற்படுகிறது. மேலும் மிக முக்கியமானது , சாதிகள் தங்களை தாழ்த்தியமைக்கான / பிற்படுத்தியமைக்கான காரணங்களை ஏற்றுக்கொண்டு ஒப்பு கொடுப்பதும் இல்லை.  போராடும் தன்மைகொண்டதாகவே உள்ளன.  நீ இவ்வாறு செய்து எங்களை தாழ்த்தி வஞ்சித்தாய் என்ற குற்றப்பத்திரிகையுடன், உன்னை அனுமதிக்க மாட்டோம் என்கிற உணர்வுடன் தான் சாதிகள் தொழிற்படுகின்றன.

1820 களில் பல சாதி வகுப்பாருக்கும் கல்வி என்ற சூழலே இருந்தது என்கிற தரம்பால் அவர்களின் ஆய்வை வைத்தியநாதன் எடுத்துக்கொண்டு  அது தேயத்துவங்கியதும் - அப்படி தேய்ந்து போன நிலைகளிலிருந்து மாற்றி உயர்த்திக்கொள்ள நடக்கும் போராட்டமே நடை பெற்று வருவதாகவும் வைத்தியநாதன் சொல்கிறார். பிரிட்டிஷ் ஆட்சி சூழலை அவர் விமர்சிக்கிறார்.

..movements are basically attempting to achieve the restoration of the position, status and rights of these people prior to 1800.

வைத்தியநாதன் தரம்பாலை முன்வைத்து செய்திடும் ஆய்வின் மூலம், முக்கிய விவாதம் ஒன்றை துவங்கி வைக்கிறார்.  பண்டைய இந்திய கல்வி முறையில் காலம் காலமாக  பிராமணர் அல்லாதவர்க்கு கல்வி மறுக்கப்பட்டதா என்ற கேள்விக்கான விவாதமாக அவர் சில டேட்டாவை தருகிறார். அவரின் வரிகள்

..so the widespread notion that discrimination in opportunities for education existed for millennia is a dangerous misconception that clouds our policies .. இதை  ஒருவர் ஏற்காமல் மறுக்கவும் கூடும்.

2021-22 ல் தமிழ் நாடு மெடிக்கல் டாக்டர்கள் குறித்த  நீட்  தேர்வு

டேட்டா தருகிறார். சரியா  தவறா தெரியவில்லை. அவர் தந்திருப்பது 4238 டாக்டர்களில் 79 தான் உயர் சாதியிலிருந்து வந்தனராம். சரி என்றால் வரவேற்கவேண்டிய சமூக மாற்றம்தான். இதில் பிற்பட்ட வகுப்பினர் 1990,  மிகவும் பிறபட்டவர் 1130, பிற்பட்ட முஸ்லிம் வகுப்பினர் 204, பட்டியல் இனத்தவர் 670,  பட்டியல் இன அருந்ததியர் 123, பழங்குடி பட்டியல் பகுதியிலிருந்து 42.

அதேபோல் tamilnadu MBBS admissions 2015-16 என்பதற்கான டேட்டா ஒன்றை அவர் தந்துள்ளார்.  31525 இடங்கள். BC 12944, MBC 6754, BC Muslim 1690, SC 7257, SC Arunthathiyar 1079, ST  308, FC 1493  என்கிற டேட்டாவைத் தருகிறார்.  சமூக நீதியின் மலர்ச்சியை இது காட்டலாம். இனி எங்கு அது நீட்டிக்கப்படவேண்டும் என்கிற தேவையையும் சுட்டலாம். Creamy layer என்கிற விவாதம் பற்றியும்  பேராசிரியர் சொல்லிச் செல்கிறார்.

Caste categories and Entrepreneurs,  social capital, caste Economic clusters, vaishya- visation  of India , caste in service sector போன்ற பல்வேறு தலைப்புகளில் சுருக்கமாக பேராசிரியர் இந்த புத்தகத்தில் விவாதித்துள்ளார். வாய்ப்பிருந்தால் பார்க்கலாம்.

விவேகானந்தர் அவரது மொழியில் பிராமணர் ஆட்சி சத்திரியர் ஆட்சி வைஸ்யர் ஆட்சி எல்லாம் முடிந்து சூத்திரர் ஆட்சி வரட்டும் எனப்பேசினார். இன்றைய மொழியில் அரசியலில் ஆட்சி அதிகாரம் பிராமணர்களிடமிருந்து பரவலாக BC களிடம் சென்றுள்ளதை உணரமுடியும். அது பட்டியல் இன பழங்குடி இன மக்களிடம் பரவலாகும் காலம் நோக்கி இந்திய தன் அரசியல் செல்திசையை அமைத்துக்கொள்ளுமா?

No comments:

Post a Comment