Skip to main content

1915 காங்கிரஸ்- காந்தி

 

1915 காங்கிரஸ்- காந்தி

1915 டிசம்பரில் பம்பாயில் கூடிய காங்கிரஸில் காந்தி மிகச் சாதாரண தொண்டராக தெரிந்தார். அங்கு பேச்சு மணிக்கணக்கில் இருந்ததையும் காந்தி உணர்ந்தார்.

சூரத்தில் ஜனவரி 2, 1916ல் ஆர்ய சமாஜ் ஆண்டு நிகழ்வில் அவர் பங்கேற்றார். அங்கும் வண்டிக்கணக்கில் பேச்சு இருந்ததைப் பார்த்தார். ஏன் இந்தியர்களாகிய நாம் இவ்வளவு பேச பேரார்வம் கொண்டு அலைகிறோம் என்கிற எண்ணம் அவரிடம் ஏற்பட்டது. இப்படி பேச்சைக் கேட்டுகொண்டேயிருந்தால், செய்ய வேண்டிய வேலைகள் என்னவாகும் என்கிற கவலை அவருக்கு ஏற்பட்டது.

அங்கேயே மாநாட்டில், சரி இந்த 7 மணி 8 மணி பேச்சை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, சில பேராவது என்னுடன் வந்தால், சூரத் நகரை கூட்டி பெருக்கி சுத்தம் செய்யமுடியும். மக்களும் நன்றியுடன் பார்ப்பார்கள் என்றார். கேட்டவர்கள் அதிராமல் இருப்பார்கள் என்ன..

மேலும் எல்லாம் இங்கிலீசில் பேசுகிறோம். ஆனால்

Our society will be reformed only thorough our own language. We can ensure simplicity and dignity in communication என்று பேசும் கலையை அவர் சொல்லித்தருகிறார்.

என் தொழிற்சங்க அனுபவத்திலும் மணிக்கணக்காக பேசுவது நடந்துள்ளது.  சம்பந்தம் இருக்கோ இல்லையோ ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினால்தான் சிறப்பான பேச்சு என்ற மாயச் சுழலை அனுபவித்தவன்- செய்தவன் என்கிற வகையில் காந்தி சற்று என்னை வெட்கப்பட வைக்கிறார். எங்களிடம் ‘அதிக நேரம் பேசுபவர் அதிக விவரமானவர் ‘ என்கிற எண்ணம் நிரம்பியிருக்கிறது.

காந்தியின் முறையில் சாக்ரடிஸ் கேள்வி methodology ல் அதற்கான பொருத்தமான பதிலைத்தேடும்- காரியார்த்தமான நடைமுறையைத் தேடும் மொழி சொற்செட்டு பழக்கமானதைக் காண்கிறேன். One step at a time என்கிற அவரின் பெரிய நடைமுறை சார்ந்த அம்சத்தை, நானும் வேலைப்பார்த்த தொழிற்சங்க இயக்கத்தில் அதன் father fig ஆக இருந்த தோழர் குப்தா எடுத்துக்கொண்டார். One step with all என்கிற சோதனையை அவர் செய்து பார்த்தார். அவரும் வேலைக்கு உதவாத  மொழியிலிருந்து தன்னை தள்ளி வைத்துக்கொண்டார். வானளாவிய முழக்கங்களை காந்தி வைத்ததில்லை. தோழர் குப்தாவும் தனது தோழர்களின் pulse என்பதையே,  (அரசாங்கத்தின் பலம் அறிந்து) அளவாக கொண்டார்.

சரியான கேள்விகளை உருவாக்குவதும், வாயளப்பு வாண வேடிக்கைகளை காட்டாமல், கூடியவரை பொருத்தமான பதில்களை தேடுவது என்கிற பேச்சுக்கலை எழுத்துக்கலையில் காந்தி பெரும் பயிற்சியாளராக இருந்தார். கைத்தட்டிற்காகவோ, மகிழ்ச்சி ஊட்டுவதற்காகவோ அவர் பேசியதில்லை. தன்னால் செய்ய முடிந்த வேலைகளுக்கு மட்டுமே ஒப்புக்கொடுத்தார்.

எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்கிற பேச்சில் நம்பிக்கையை அவர் தொலைத்து விடாமல், அடிமேல் அடி வைத்து, களைப்படையாமல், கூட வருபவர்களின் ஆர்வம் குலையாமல், self suffering உடன் வெகுதூரம் பயணித்தவர் காந்தி. அவரிடம் சத்தம் எழுந்ததேயில்லை. சன்னமான குரலில் ஆக உயர் காரியங்கள் நடக்க தன்னையும், தன்னுடன் வருபவர்களையும் பழக்கப்படுத்தினார். அவரது பேச்சில் எழுத்தில்  எந்த ஒரு குழுவின் சுய லாபத்திற்கான மொழி அசைவுகள் இருந்ததில்லை. அனைவருக்குமான இணக்கமான அசைவுகளை அவர் மேற்கொண்டார்.

காந்தி தனது பேச்சில் எழுத்தில் தனி மனித உருவம் மற்றும் குணங்களை ஒரு நாளும் தாக்கியதில்லை. தனிநபர் செயலின் குணங்களை நல்லதா அல்லாத ஒன்றா என்று மட்டுமே விவாதிக்கும் கலையை கற்றுத்தேர்ந்தார். இணக்கம் என்பது மட்டுமே அவரின் மொழிக்கூட்டத்தில் இருந்தது.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு